
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு ஆகிவிட்டது.
இது பயனற்ற சம்பிரதாய பழக்கமல்ல;
நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.
எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்
இரைப்பு,இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், நீங்கும்.
முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை...