Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

சர்வ சக்தி வழிபாடு குரல் துணை

ஐஶ்வர்ய மஹ றிஷி அவர்கள் 'சர்வ சக்தி வழிபாடு' என்ற நூலை வெளியிட்டுள்ளார். NOTIONPRESS மூலமும், மலிவுப் பதிப்பினை 'றிஷி பதிப்பகம்' மூலமும் பெறலாம். 


‘சர்வ சக்தி வழிபாடு’ நூலைப் படிக்கும், வழிபாட்டு, பிரார்த்தனைப் பயிற்சி செய்யும் வாசகர்கள் பலர் அதைப் படிக்கும் முறை பற்றிக் கேட்டிருந்தார்கள். அந்த சுலோகங்கள் பாடல்களைப் படிக்கும் முறையின் குரல் பதிவினை இந்த முகவரியில் கேட்கலாம் பதிவிரக்கம் / டௌன்லோட் செய்யலாம்.

சர்வ சக்தி வழிபாடு : https://audio.com/rishi/kpv-2min

காப்புப் பாடல்: வேல் காப்பு : https://audio.com/rishi/kpv-2min


சர்வ சக்தி வழிபாடு

இந்த 'சர்வ சக்தி வழிபாடுவழிபாட்டு பயிற்சி முறை மிகுந்த அளவில் இறை ஆசிகளையும்,  ஐஶ்வர்யங்களையும்,  

பாதுகாப்பையும்வெற்றிகளையும்சுகங்களையும் அள்ளித் தருவது. 

 



இந்த முறையில் ஆகம முறை, வைதீக முறை, தாந்திரீக முறை நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ரகசியத் தொழில் நுட்ப முறை. ஆனால் பயன்படுத்த மிகவும் எளிமை. தினசரி முடிந்தவரை கவனமாகப் படித்தாலே போதுமானது. 

 

தினசரி இதைப் படிக்க, துவக்கத்தில் 25 நிமிடம் தேவைப் படலாம். பிறகு அது படிப்படியாகக் குறைந்து, 10 நிமிடத்திற்கு வரும். இதைப் படிப்பது மிகுந்த சக்தி வாய்ந்த தியானப் பலனைத் தரும், வழிபாட்டுப் பலனைத் தரும், றிஷி முனிவர்களின் ஆசிகளைத் தரும், முன்னோர்களின் ஆசிகளைத் தரும், தெய்வங்களின் ஆசிகளைத் தரும்.... மன அமைதியைத் தரும், கவலைகளைத் துடைக்கும், பணிக் களத்தில் தெளிவினைத் தரும், தேவையான பிரியமான நட்புகளை கவரும் வளர்க்கும், அனைவருக்கும் பிடித்த நபராக நம்மை மாற்றும்... இது போல ஏராளமான பலன்கள் கிடைக்கும். இந்தப் பலன்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், செலவிடும் இந்த நேரம் மிகவும் குறைவே. வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் நமக்கு நேரத்தை மிகவும் மிச்சம் செய்து தரும். 

 

விரைவிலேயே பலன்கள் தெரியத் துவங்கும் என்றாலும், ஒரு ஆண்டுப் பயிற்சிக்குப் பிறகு மிகவும் அதிகமாகும். அதுமட்டுமல்ல, ஆண்டுக்கு ஆண்டு இந்தப் பலன்கள் மிகவும் அதிகமாகிக்கொண்டே செல்லும். சில ஆண்டுகளில் நம்மாலே நம்மை நம்பவே முடியாது, அந்த அளவுக்கு வெற்றிகரமான பாதுகாப்பான சுகவாழ்வில் திளைப்போம். இதை யாருக்கும் புரியவைக்கவும் முடியாது. பயிற்சியால் வரும் இறை அருள் இது. 

 

தம் குழந்தைச் செல்வங்களுக்கு ஓர் உயரிய பரிசளிக்க விரும்பினால், இந்த 'சர்வ சக்தி வழிபாடு' பயிற்சியை கற்றுத் தருவதுதான். தொல்லைகள், கெட்ட சிந்தனைகள், கெட்ட நடத்தைகள், கெட்ட நண்பர்கள், தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தங்கள், பயம், குற்ற உணர்ச்சிகள்... எதுவும் வாழ்க்கை முழுவதும் அருகில் வர முடியாது. 

 

அது மட்டுமல்ல இந்த 'சர்வ சக்தி வழிபாடு'  அவர்களை, உயர் சாதனையாளர்களாக ஆக்கும், வெற்றிகளை அடைய வைக்கும், உயர் குணங்களை விரும்ப வைக்கும்உயர் சுக வாழ்வைத் தரும்.

 

திருமணம்-ஆனவர்கள் இதனைக் கட்டாயம் படிக்க வேண்டும். உயர் சுக வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணையின் கனவனின் மனைவியின் பிரியத்தை அன்பை அக்கரையை சம்பாதிக்க முடியும். அன்பு, காதல், காம வாழ்க்கை, புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், உதவியாக  அனைத்தும் பலமாகும். சுக வாழ்க்கை அமையும். 

 

கணவன் மனைவிக்கு இடையில் உள்ள சங்கடங்கள் தீரும், பனிப்போர் முடியும், பிரச்சனைகள் முடிவுக்கு வரும், சச்சரவுகள் தீரும், கோபம் சண்டைகள் தீரும், விரிசல்கள் விலகும், பழிவாங்கும் உணர்வுகள் நடவடிக்கைகள் முடியும், போதை குடிப் பழக்கங்கள் விலகவும் வாய்ப்புகள் அதிகம், கெட்ட செலவினங்கள், அனாவசிய செலவுகள் குறையும், பணப் பிரச்சனைகள் தீரும், கடன்கள் அடையும், வரவு அதிகமாகும், சேமிப்பு அதிகமாகும். 

 

அன்பளிப்பு வழங்க இந்த 'சர்வ சக்தி வழிபாடு' ஒரு மிகமிகச் சிறந்த நூல். இதைப் பெற்றவர்கள் மிகவும் மகிழ்வார்கள். 'சிறந்த பரிசு கிடைத்தது' , 'இது இறைவனின் அருள்' - என்று உள்ளம் குளி்வார்கள். இதைப் பரிசாக அளிப்பது சிறந்த பரிகாரம், சிறந்த இறை சேவையும் கூட. 

 

நூல் கிடைக்குமிடங்கள்: 

தரமான காகிதப் பதிப்புக்கு: NOTION PRESS 

மலிவு விலைப் பதிப்பிற்கு: றிஷி பதிப்பகம் , 'திருமுருகன்', 10/25, எல்லைக்கல் தெரு, உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம், 621804 (பேசிகள்: 9443903648, 9443903638) 

 

This is a support for the readers of ‘Sarva Shakthi Vazhipaadu’ a Hindu Spiritual Bhakti book for daily worship, rituals, festivals… Composed by Aishwarya Maharishi.  It gives a tremendous blessing, changes in oneself, family members, relatives, friends, work area… and especially it gives a very good basic mind set to the children which will protect them in thousands of matters and from troubles. This book proves that right wakeful trust and confidence in Ishwara blesses and protects the life.

 

உங்க பிள்ளைங்க அழறது கேட்கலையா...: சிந்தி - சுகி 7

Leave a Comment
கருத்துப் படம்:

சிந்தி சுகி 2

Leave a Comment


தந்தை மந்திரம்

Leave a Comment
பெற்றோர் ஆசி

குழந்தை மன பலத்துடன் திறமையாகவும், பலத்துடன் உடல் ஆரோக்யமாகவும் வளர உதவும் பெற்றோர் ஆசீர்வாத சுலோகம்

குழந்தை பிறந்ததும் தந்தை தன் முதல் தரிசனத்தில், குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.

தந்தையானவர் தினசரி குளித்து முடித்ததும் இறைவழிபாடு முடித்து, [ முடிந்தால் தாயின் மடியில் குழந்தையை படுக்க அல்லது அமர வைத்து ] குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.


ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய்
ஓம்கண நாதன் உன்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ



இதை மூன்றரை வயது வரை சொல்லவேண்டும். முடிந்தவரை இடைவிடாது தினசரி சொல்வது நல்லது. 


குழந்தை பேசத்துவங்கிவிட்டால் தந்தை ஒவ்வொரு வரியாக சொல்ல, குழந்தை இப்படி திருப்பிச் சொல்லவேண்டும்.




ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய்

ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய்
ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய்
ஓம்கண நாதன் உன்மனம் திறனாய்
ஓம்கண நாதன் என்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய்
ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே
சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ
ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ
 தேவைப்பட்டால் திருப்பிச்சொல்ல தாயார் உதவி செய்யலாம்.



பதிமூன்று வயதிற்கு பிறகு வழிபாட்டு சமயத்திலேயே தானே இப்படி சொல்லிக்கொள்ள வேண்டியது.




ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய்
ஓம்கண நாதன் என்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ

 
இது கால யந்திரத் தந்திர மந்திர பலம் பொருத்தப்பட்டது. சொல்லும் அளவு நல்ல பலன்களை வாழ்க்கையில் ஏற்படுத்தும். 

குருமுகமாக மந்திர தீக்ஷை பெற்றுக்கொண்டு, குருதக்ஷிணை அளித்து, பிறகு பயன்படுத்துவம், சொல்வதும் முழுமையான நல்ல பலனைத் தரும். 

குருமுகமாக மந்திர தீக்ஷை பெற்ற விரும்புவோர் அணுகவும்:
9042800800 



நன்மை பகிர்வது – புண்ணியம் காக்கும்.
அரண் குருகுலம் 9042800800  

வாழ்வை மாற்றும் - ஆசை விஞ்ஞானம்!

Leave a Comment

ஆசை முதல் நிலை:
விதை நிலை. பல ஆயிரம் விதைகள் பூமியில் விழுகின்றன. உலகில் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம். நினைவில் வைக்கிறோம்.


  
ஆசை இரண்டாம் நிலை:
முளை நிலை. பல ஆயிரம் விதைகளில் ஒன்று முளைக்கிறது. பூமியில் நுழைகிறது. பல ஆயிரம் தகவல்களில் ஒன்று முளைக்கிறது. மனதில் வேர்விடுகின்றன.


ஆசை மூன்றாம் நிலை:
தளிர் நிலை. பல ஆயிரம் முளைகளில் ஒன்று தளிர் விடுகிறது. வெளியில் படர எட்டிப்பார்க்கிறது. ஊன்றிய ஆசைகளிலிருந்து கற்பனைக் கொடி எட்டிப் பார்க்கிறது.


ஆசை நான்காம் நிலை:
படர் நிலை. கொடியின் கிளைகள் பல திசைகளிலும் பற்றிப் படருகிறது. மனதில் ஆசைகளுக்கு சம்பந்தப்பட்ட எண்ணங்கள் பல திசைகளில் பற்றிப் பயணம் செய்கின்றன.




ஆசை ஐந்தாம் நிலை:
பூக்கும் நிலை. ஆங்காங்கு ஏராளமான பூக்கள் தோன்றி வண்ணமயமாக காட்சிதருகிறது. ஆங்காங்கு நம்பிக்கை நக்ஷத்திரங்கள் தோன்றுகின்றன. வண்ணவண்ண வாய்ப்புகள் கற்பனைகள் தோன்றுகின்றன. 

ஏக்கங்களாக உருவெடுக்கின்றன. இந்தப் பருவத்தில் இருப்பது மனதிற்கு மிகவும் சுகமாக இருக்கிறது. நேரம் போவதும் தெரியாது. வயதுகள் ஓடுவதும் தெரியாது. லாப நஷ்டங்கள் தெரியாது. கவலைக் காரணங்கள் கண் முன் இருக்காது. சுகம் சுகமே.


ஆசை ஆறாம் நிலை:
காய்க்கும் நிலை. பல நூறு பூக்களில் ஒன்று பிஞ்சை உண்டுபண்ணுகிறது. பல நூறு பிஞ்சுகளில் ஒன்று காயாகிறது. மற்ற பூக்களும் பிஞ்சுகளும் உதிருகின்றன. ஏராளமான சிறு சிறு ஆசைகளும் இப்படி உதிர்கின்றன. ஏராளமான வாய்ப்புகள் காணாமல் போய், ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே நிலைத்து நிற்கின்றன.


ஆசை ஏழாம் நிலை:                
பழுக்கும் நிலை. அந்த காய்களில் பல நூறில் ஒன்று மட்டுமே காற்று, மழை, இடி அனைத்தையும் தாண்டி நிற்கிறது, பழமாகிறது. கண்முன் இருந்த சில வாய்ப்புகளும் விதியின் பல சோதனைகளுக்கு இடையில் காணாமல் போய், மிகக் குறைந்த வாய்ப்புகளே கனிந்து தென்படுகின்றன. அதில் ஏதோ ஒன்று பலனை வாழ்வில் ஏற்படுத்துகிறது.


ஆசை எட்டாம் நிலை:
உதிரும் நிலை. ஆசை ஆசையாய் பராமரித்து பழமாக்கிய பலன்கள் தாய்க் கொடிக்கு சுமையாகின்றன. ‘ப்பூ.... பழம் என்றால் இவ்வளவுதானா' என்று ஆகிவிடுகிறது. - கொடிக்கே 'இதை இனி என்ன செய்வது, ஒன்றும் செய்ய முடியாதே’ என்றும், ‘இந்தப் பழத்தை வைத்துக்கொண்டு இனி நான் என்ன செய்வது’ என்றும் தெரியாமல் முழிக்கிறது.விதி தாய் கொடியிடமிருந்து பழத்தை பிரிக்கிறது. 

செய்த முயற்சிகள் பலனை ஏற்படுத்தும்போது, அவைகள் தனக்கு பயனற்று இருப்பதையும் சுமைகளாகவும், தொல்லைகளாகவும் இருப்பதைப் பார்க்கிறான். விதி அவனையும் அவைகளையும் பிரிக்கிறது. அவைகளை அனுபவிக்க இயலாத, விரும்பாத, தேவை இல்லாத நிலையை அடைகிறான்.

--------------------------------



ஆசை விஞ்ஞானம் என்ன சொல்லுகிறது?




தோன்றிய ஆசைகளை எல்லாம் அனுபவித்து ஆகவேண்டும் - என்று அவசியம் எதுவுமே இல்லை. ஏராளமான ஆசைக் கனவுகளுடன் இருப்பதே இறைவனின் அருள். சுகமான நிலை.


பலர் ‘ஆசைகளை பூர்த்தி செய்தால்தான் சுகம், அதுதான் வாழ்க்கையின் லட்சியம்’ என்று என்று நினைக்கிறார்கள். அதற்காகவே வாழ்க்கையை இழக்கிறார்கள். ஆனால் உண்மையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை.


ஏதோ சில பழுக்கும். பல முன்பே உதிரும். எது எதெல்லாம் என்று நாம் அறிய ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அதெல்லாம் விதியின் வேலை.


'ஆசைகளைப் பூர்த்தி செய்து வாழ்வது' - இல்லை சுகம். அது முதுமையின் துவக்கம். 

'ஆசைகளுடன் பூத்துக்குளுங்குவதே' சுகம். அதுவே இளமை.



ஆசைக் கனவுகளே போதும். அதுவே சுகமானது. நமது வேலை பூக்களைப் பூப்பது மட்டுமே. அதன் பின் இறைவனின் வேலை. எதற்காகவோ எதையோ காய்க்க வைக்கிறார். எதற்காகவோ எதையோ பழுக்க வைக்கிறார். எதற்காகவோ எதையோ உதிர வைக்கிறார். அதெல்லாம் நமக்குத் தேவை இல்லாதது.


அதன் பின்னும் அவற்றை 'இது பழுக்கவேண்டும்,  அது பழுக்கவேண்டும், இத்தனை நாளில் பழுக்கவேண்டும்...' என்று துரத்துவது வருத்தங்களுக்கு வாய்ப்புகளை தரலாம். காய்ப்பது காய்க்கட்டும், பழுப்பது பழுக்கட்டும். உதிர்வது உதிரட்டும்.


புதிய புதிய பூக்களுடன் பூத்துக் குலுங்கும் நிலையிலேயே வாழ்பவன் - இன்றும், என்றும் இளைஞனாகவே வாழ்வான்.


பழத்தையே லட்சியமாகக் கொண்டவன் இன்றே இப்போதே முதுமையை அடைகிறான்.


இவ்வளவுதான் வாழ்க்கை!
வாழ்க நீர் என்றும் சுகமாக!