Leave a Comment
பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் 
பிரசவ நேரம்....

உறவினர்கள் எல்லாம் 
சுற்றிக் காத்திருக்க
அந்த தாயோ வலியில் 
கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு 
வழக்கத்திற்கு மாறன சத்தம் 
ஏதேதோ கேட்டது
நமக்கு என்ன நடக்கப் போகிறதோ 
என்ற குழப்பம் 
குழந்தையின் மனதினைக்
குழப்பி எடுத்தது.

அமைதியாக ஆனந்தமாக 
மிதந்துக் கொண்டிருந்த 
நமக்கு என்ன ஆகப்போகிறதோ 
இப்போது என்று....

வழக்கமாக நாம் பேசும் 
கடவுளிடமே கேட்டு விடலாம் என்று 
குழந்தை கடவுளை 
அழைத்தது கேட்டது....

இறைவனே என்னை 
எங்கே அனுப்புகிறாய் 
வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் 
கேட்கிறேன் எனக்கு 
ஒன்றும் புரியலையே.....

கடவுளும் சொன்னார்....
குழந்தாய் இனி நீ 
மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

இனிய கடவுளே, இங்கு நான் 
சந்தோசமாகத் தானே இருக்கிறேன் 
அங்கு ஏன் நான் போக வேண்டுமோ

இல்லை குழந்தாய் 
நீ இங்கிருப்பது போலவே 
அங்கும் இருப்பாய் 
சென்று வா ஆசிகள்...

இனிய கடவுளே, 
என்னை நீ இங்கே 
பாத்துக் கொள்வது போல் 
யார் என்னை அங்கு 
பார்த்துக் கொள்வாரோ...

கவலைப் படாதே குழந்தாய் 
அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள 
ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், 
அந்த தேவதை உனக்காக பாடும் 
உன் மீது அன்பு  செலுத்தும் 
அந்த அன்பை நீ இன்பமாய் உணர்வாய்.


இனிய கடவுளே, 
மனிதர்களிடம் என்னை 
தனியாக அனுப்புகிறாய் 
நான் மிகச் சிறியவன் 
என்னால் நடக்கவும் முடியாது 
என்னால் பேசவும் முடியாது, 
அவர்கள் மொழியைக் கூட 
புரிந்துக் கொள்ளவும் முடியாதே...

அன்புக் குழந்தையே 
அது மிகவும் சுலபம் 
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதை 
எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் 
உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், 
உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் 
நீ பயப்படத் தேவையில்லை.

இனிய கடவுளே, 
உன்னைப் பிரிவது எனக்குப் பிடிக்கவில்லை
பயமும் வருகிறது... 
நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் 
என்ன செய்வேன்.

அறிவுக் குழந்தையே....
பயம் எதுவும் வேண்டாம்
நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதையே 
இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

இனிய கடவுளே, 
உலகில் 
கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று 
இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே 
அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

அன்புக் குழந்தையே..
உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதைதான்.... 
தன்னுயிர் போனாலும் உன்னைப் பாதுகாக்கும்.

இனிய கடவுளே, 
நான் சோகமாக இருக்கிறேன்
இனி நான் உன்னை 
பார்க்கவோ பேசவோ முடியாது ஆகுமே...

நல் அறிவுக் குழந்தையே, 
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதையிடம் நீ போனதுமே 
என் பெயரை உனக்கு சொல்லும் 
சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், 
என்னிடம் திருப்பி வரும் வழியையும் 
உனக்கு வழிபாடாய் சொல்லித் தரும்.

நான் உன்னோடு தான் இருப்பேன் 
ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்...


உலகின் சத்தங்கள் குழந்தைக்கு  
அதிகமாக கேட்க தொடங்கின


இனிய இறைவனே 
இன்னும் கொஞ்ச நேரத்தில் 
உன்னை விட்டு பிரியப் போகிறேன் 
நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதையின் 
பெயரையாவது சொல்லேன்....



அன்புக் குழந்தாய் 
தைரியமாக சென்று வா 
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை 
அவளை நீ 
அம்மா என்று அழைப்பாய்.

கடைசியாக உனக்கு இரு அறிவுரைகள்

ஒன்று
நீ வளர்ந்து பெரியவனானதும் 
அந்த தேவதை உனக்கு கொடுத்த இதனையே 
நீயும் உன் குழந்தைக்குக் கொடு....
அது உன் நேர்மைக்கு அழகு...

இன்னொன்று,
அந்த தேவதையின் மனம் 
புண்படும் படி எதுவும் 
பேசி விடாதே. 
அது உன் அறிவுக்கு அழகு...

சரி தெய்வமே , உன் சொல் சரியே...
குழந்தை இறைவனின் 
கால்பிடித்து அழுதது 
தேவதை அம்மாவின் மடியில் பிறந்தது….

தாய்மையை போற்றுவோம்....

0 comments:

Post a Comment