ஒரு தாயின் புலம்பல் கவிதை....

1 comment
(முதுமையில் ஓர் தாய் 
மகனிடம் சொல்லும் கண்ணீ்ர் கவிதை...)

எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..


முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும் நீ ...
கொஞ்சம் பொறுமை கொள்வாய் !
அதிகம் புரிந்து கொள்வாய் !


என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான் சாப்பிடுகையில் கைநடுங்கி 

சாதத்தை சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான், நீ தட்டி விட தட்டிவிட
சோறு ஊட்டிய நாட்களை நினைப்பாயா? 


ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
கொஞ்சம் 
நினைப்பாயா? 

ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை சொல்லச் சொல்லி
நீ உறங்கிய இரவுகளை 

எனக்காககொஞ்சம் நினைப்பாயா? 

நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக 
கொஞ்சம் நினைப்பாயா? 

புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேக அறிவு
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !


கேவலப் படுத்தாதே....
அவை தெரியாததால், 

அவை புரியாததால்,
அவற்றை தெரியாதவள் வளர்த்து 
வளர்ந்தவன்தனே நீ, அதனை
எனக்காக கொஞ்சம் நினைப்பாயா? 

இனி, சில நேரங்களில் -
என் நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!

கோபப்படாதே....
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரக் கணக்கு பார்க்காதே.....


நான் ரொம்ப பிஸி என்று
சொல்லாமல்தானே உனக்கு நான்
நேரம் தந்தேன், அதனை, 
எனக்காக கொஞ்சம் நினைப்பாயா? 

என் அருகிருந்து கொஞ்சம் 

ஏன் இயலாமைகளை பொருத்துக்கொள்வாய்
ஆற்றாமை தேற்றுவாய் !
ஆசுவாசப் படுத்துவாய் !


என் கால்கள் இடறி
என்னை ஏமாற்றுகின்றன
நீ முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்வாய் !


ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது போதுமென்று !
வருத்தப் படாதே.....


சில வயது வரை 

வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...



காத்திருக்கிறேன்....
எமன் வரும் நாள் 
என் நாள் என்று....
அதன் பின் உனக்கு விடுதலைதானே...

காலம் வரும்போது - இதை
நீயும் புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை புரிந்து கொண்ட
புன்னகை !


மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....


என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..?


1 comment: