குழந்தைத் தற்கொலையைத் தடுப்போம்

Leave a Comment
படிக்க இயலாமை என்பது வாழ இயலாமைக்கு அடையாளம் இல்லை. 


படிக்காதவர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளார்கள், பணம் கொடுத்துள்ளார்கள், உயிர் கொடுத்துள்ளார்கள், உழைப்பைக் கொடுத்துள்ளார்கள்,.....

அதனால்...
இந்த நாடு சுதந்திரமாக இருக்கிறது,
அரசு ஊழியர்கள் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள்....

அப்படி இருக்க,
படிக்க இயலாதவனை 
வாழத் தகுதியில்லாதவன் என்ற நிலைக்கு தள்ளுவது நியாயமாக இருக்க முடியாது. 

வம்சம் காப்போம் - பாரதம் காப்போம்!

ஆணும் பெண்ணும்

Leave a Comment

எங்கே என்ன திறமை இயல்பாக இருக்கிறதோ அதை வளர்ப்பதும், அதன் மூலம் சாதனைகளை படைப்பதுமே அறிவுடைமை.


மாற்றி முயற்சிகள் அறிவீனமாகவே இருக்கமுடியும்..


ஒரு மாட்டின் செயல்களை நாயை வைத்து சாதிப்பதோ, நாயின் செயல்களை மாட்டை வைத்து சாதிப்பதோ முயற்சியால் முடியலாம், ஆனால் அது அனாவசியம்.


நாயின் செயலை நாய் சுலபமாக செய்ய வாய்ப்பு இருக்கும் பக்ஷத்தில், அதை மாட்டை வாட்டி செய்ய வைப்பது தேவை இல்லாத வேலை.

அதேபோலவே,

மாட்டின் செயலை மாடு சுலபமாக செய்ய வாய்ப்பு இருக்கும் பக்ஷத்தில், அதை நாயை வாட்டி செய்ய வைப்பது தேவை இல்லாத வேலை.
 
பெண்ணின் சிறப்பு பாசமும், சந்ததியை தருதலும். ஆணின் சிறப்பு வலிமையையும் பாதுகாத்தலும்.


இன்று சம உரிமை என்ற பெயரில் ஏற்பட்ட 
மனத் தடுமாற்றங்களால்,
பெண்களுக்கு ஆண்களின் வாழ்வியலில் இயல்புகளில், ஆர்வத்தையும் வாய்ப்புகளையும் போட்டிகளையும் ஏற்படுத்தி, இன்று பெண்களிடத்தில் ஆண்-இயல்பு - உள்ளத்திலும் பிறகு உடலிலும் ஏற்படுகின்றன.

அவ்வாறே, ஆண்களிடத்தில், பெண்-இயல்பு - உள்ளத்திலும் பிறகு உடலிலும் ஏற்படுகின்றன. ,

அதனால், குரோமசோம்களில் குழப்பம் ஏற்பட்டு, மலட்டுத்தன்மை வளர்ந்து, குழந்தை பேருக்கான வாய்ப்பு இருவரிடத்திலும் குறைந்து வருகிறது.

பக்குவம் அற்ற மேற்கத்திய வாழ்வியல் கண்ணோட்டங்கள், அவர்களுக்கே பெரிய கேடுகளை செய்து வருகின்றன. அந்த சம்பந்தம் தெரியாமல், இங்கே அவைகளையே, நாகரீகமாக கருத சொல்லித்தருகிறார்கள் பலர்.

இதுவே பெருகிவரும் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அறிவில் சிறந்தவர்கள் இதுபற்றி அவசரமாக சிந்திக்கவேண்டி உள்ளது.