ஸ்ரீ கிருஷ்ணர் பயன்படுத்திய ஆணவத்தை - அறியும் வித்தை, நீக்கும் வித்தை

Leave a Comment
ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா உறவுகளுடனும் உறவாக வாழ்ந்துகொண்டே வழிகாட்டும் ஒரு உதாரண குருநாதர்! 


ஆணவம் என்பது அஞ்ஞானம் இருக்கும் வரை பிறக்கும். ஞானம் அடையும் வரை யாருமே அஞாநியாகவாவது வாழ்ந்துதான் ஆகவேண்டும் . அந்த சூழ்நிலையை கண்டுபிடிக்கவும், நம்மை விழிப்புடன் நடத்திக்கொள்ளவும் மகாபாரதத்தில் ஒரு நல்ல சம்பவம் நமக்கு உதவுவதாக உள்ளது.

கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில் தான் அங்கு விளையாடிய நினைவுகள் எழுந்தன. 

அர்ஜுனனுக்கோ விரைவில் வரப்போகும் குருக்ஷேத்ர யுத்தம் பற்றிய நினைவே இருந்தது. சிறந்த வில்லாளியாக தன்னை கருதிக்கொண்ட அர்ஜுனன், அதன் காரணமாக இறுமாப்பு மேலிட இருந்தான்.

யமுனை நதியின் ஓடும் தண்ணீரில், தன்னால் ஒரு அம்புப்பாலத்தையே கூட அமைக்க முடியும் என்று செருக்குற்றான். ராமன் ராவணனுடன் போர் செய்ய இலங்கைக்கு போகும்போது தனித்து பாலம் கட்ட முடியாமல் போனதைக்கூட தன்னால் செய்ய முடியும் என நினைத்துக்கொண்டான். கிருஷ்ணர் அவன் மனதில் தற்பெருமை தலைதூக்குவதை கண்டுகொண்டார்.

அர்ஜுனனிடம், அர்ஜுனா! உனக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டே சிரிக்கிறாய் போல் தெரிகிறது. நான் ஏதாவது தவறுசெய்து அதை கேலி செய்யும் விதத்தில் சிரிக்கிறாயா? என தெரியாதவர் போல் கேட்டார். அர்ஜுனன் அவரிடம், நான் சிரித்தது உண்மைதான். ஆனால்,காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல. ராமன் இலங்கைக்கு போகும்போது கடல் மீது பாலம் கட்ட குரங்கு கூட்டத்தை அமர்த்திக்கொண்டார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அம்புகளாலேயே கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு பாலம் அமைத்திருப்பேன். இதை நினைத்துதான் சிரித்தேன், என்று பெருமையோடு சொன்னான்.

அர்ஜுனனிடம் அகந்தை பிறந்துள்ளதை கிருஷ்ணர் புரிந்துகொண்டார். அர்ஜுனா! இந்த யமுனை நதியில் உன் அம்புகளால் ஒரு பாலத்தை அமை. ராமாயண காலத்தில் இருந்த ஒரே ஒரு குரங்கு இப்போதும் இந்த பூமியில் இருக்கிறது. அது அந்த பாலத்தின் வலிமையை சோதிக்கட்டும். உன் பாலம் பலமானது என அது சொன்னால், உன் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், என்றார்.

அர்ஜுனன் மிகுந்த ஆர்வத்துடன் யமுனையின் மீது அம்புகளை பாய்ச்சினான். மிகச்சிறப்பான பாலம் ஒன்று அமைந்தது. கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைந்தவராய், ஹே ஹனுமான்! வா! என அழைத்தார். அப்போது ஒரு குரங்கு வந்து குதித்தது. கிருஷ்ணரை வணங்கியது.

கிருஷ்ணர் அந்த குரங்கை அம்புப் பாலத்தின்மீது நடக்கச் சொன்னார். குரங்கின் கால் பட்டதுதான் தாமதம். அடுத்த காலை உயர்த்தும் முன்னரே பெரும் சப்தத்துடன் முழு பாலமும் நொறுங்கி விழுந்தது. அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணர் சிரித்தார். அர்ஜுனன் அவமானத்தால் குன்றிப்போய் வில்லையும் அம்பையும் வீசி எறிந்துவிட்டு கிருஷ்ணரது திருவடிகளில் தொய்ந்து விழுந்தான்.

கிருஷ்ணர் அமைதியாக அவனுக்கு அறிவுரை வழங்கினார். மனதை தளரவிடாதே அர்ஜுனா! வலிமை மிக்க இந்த குரங்குகளை தாங்கும் வகையில் ராமரால் கூட அம்புகளால் பாலம் அமைக்க முடியவில்லை. அவராலேயே முடியாது என்ற நிலை இருக்க, உன்னால் பாலம் அமைக்க இயலாமல் போனமைக்காக நீ அவமானப்பட்டதாக கருத முடியாது. ஆனால், எப்போதும் ஒரு பாடத்தை நினைவில் வைத்துக்கொள். தற்பெருமையையும் அகந்தையையும் உன் மனதை எப்போதும் பற்ற விடாதே. ஒரு வீரனுக்கு தவறாது வீழ்ச்சியைத் தரக்கூடிய மிக மோசமான எதிரிகள் இவை, என்றார்.


அர்ஜுனன் கிருஷ்ணரது அறிவுரையை விரும்பி ஏற்றுக்கொண்டான். குருக்ஷேத்திர போரின்போது தன் தேரின் மீது பறந்த கபித்வஜம் என்ற கொடியில் அனுமனின் உருவத்தை பொறித்துக்கொண்டான்

பள்ளித் தேர்வுக்கு முன் அனைவரும் சமம்…

Leave a Comment

பள்ளித் தேர்வின் முன் அனைவரும் சமமே

ஒரு மாணவன் பெற்றோர்களுக்கு உதவி செய்து பள்ளிக்கு வரலாம், இன்னொரு மாணவன் பெற்றோருக்கு தொல்லை செய்தும் பள்ளிக்கு வரலாம்....
பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே...
பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது...
பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது....

ஒரு மாணவன் பெற்றோர்களுக்கு புகழைத் தருபவனாகவும் இருக்கலாம், இன்னொரு மாணவன் பெற்றோருக்கு அவமானத்தை தருபவனாகவும் இருக்கலாம்.....
பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே...
பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது...
பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது....

ஒரு மாணவன் பெற்றோர்கள்ஆன 'தந்தையும் தாயும் முன்னறி தெய்வம்' என்றும் கருதி நடத்தலாம்
இன்னொரு மாணவன் பெற்றோரை கேவலமாக நடத்தி கொடுமை செய்பவனாகவும் இருக்கலாம்.....
பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே...
பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது...
பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது....

ஒருவன் நற் குணத்துடன் வாழ்க்கைத் துணையையும், பெற்ற குழந்தைகளையும், உறவுகளையும், உழைப்பால் காக்கலாம்....
ஒருவன் குடியாலும், இன்னும் பல கெட்ட பழக்கங்களாலும் கட்டிய துணையையும் குடும்பத்தையும் அழிப்பவனாகவும் இருக்கலாம்....
பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே...
பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது...
பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது....

ஏனென்றால் பள்ளித் தேர்வைப் பொருத்தவரை இவைகளை பற்றிக் கவலை இல்லை.
பெற்றோரும் இது போதும் என்று இருக்க முடியுமா? பள்ளிகளைப் பொருத்தவரை அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏனென்றால் பள்ளித் தேர்வைப் பொருத்தவரை ஒருவன் நல்லவனாக இருந்து அவனுக்கு மதிப்பெண் அல்லது மார்க் குறைந்தால் அவன் தகுதி இல்லாதவன்தான், நல்லவன் என்பது தேவை இல்லாத தகுதி,...
அதேபோல ஒருவன் கெட்டவனாக இருந்து மதிப்பெண் அல்லது மார்க் அதிகமாக இருந்தால் அவன் தகுதி உள்ளவன்தான், கெட்டவன் என்பதெல்லாம் ஒரு குறை இல்லை.....
பெற்றோர்களும் இது போதும் என்று இருக்க முடியுமா? பள்ளிகளைப் பொருத்தவரை அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏனென்றால் பள்ளித் தேர்வைப் பொருத்தவரை ஹைட்ரோக்ளோரிக் ஆசிட், ஹைபிஸ்கஸ் ரோசா சைனான்சிஸ், அவுரங்க சீப் ஆண்ட வருடம், ராபர்ட் கிளைவ் என்ன செய்தார்,... இவைகளை சரியாக பதில் எழுதினால் போதும் அவன் யாராக இருந்தாலும் நல்ல மாணவன் என்று சான்றிதழ் அளிக்கப்படுவான்....
பெற்றோர்களும் இது போதும் என்று இருக்க முடியுமா? பள்ளிகளைப் பொருத்தவரை அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏனென்றால் பள்ளிக்கூடங்களின் நோக்கம் கம்பெனிகளுக்கு நல்ல வேலைக்காரனாக ஒருவனை ஆக்குவதுதான். பள்ளிக்கூடங்கள் தருவது பணக்கல்வி, மட்டுமே.

பள்ளிக்கூடங்களின் நோக்கம் நல்ல மகனாக, நல்ல மகளாக, நல்ல கணவனாக, நல்ல மனைவியாக, நல்ல தந்தையாக, நல்ல தாயாக, நல்ல உறவாக, நல்ல நண்பனாக, நல்ல மனிதனாக ஆக்குவது கிடையாது....   

பள்ளியில் பண்புகள் போதிக்கப்படுகின்றனவே என்றால், கடைபிடிக்க வைக்கப்படும்போதுதான் பண்புக்கல்வி நிறைவடைகிறது.
பண்பைப் பற்றி படித்து எழுதியதால் இல்லை.
உடல் பயிற்சி விளையாட்டு சான்றிதழ்கள் செய்யாமல், அதைப் பற்றி எழுதியவனுக்கு தரப்படுவதில்லையே!
மேலும் இந்த படித்து எழுதும் பண்புக்கல்விக்கும் அறிவியல் கணிதத்திற்கு உள்ள மரியாதையும் அளிக்கப்படுவது இல்லையே...
இப்படிப்பட்ட பள்ளிக் கல்வியை நம்பி பெற்றோர்கள் வாழ்க்கையை, நிம்மதியை அடமானம் வைத்து இவ்வளவு செலவு செய்வதும், அதனை மலை போல நம்பி குழந்தைகளை கொடுமை செய்து படிக்க வைப்பதும் அறிவாளிகளுக்கு ஏன் என்று புரியவில்லை.....
நல்ல  குணங்கள் வளர, நல்ல மனிதனாக ஆக்க,... பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக இருக்கவேண்டும், குடும்பத்தின் உறவுகளுடன் சேர்ந்து பழக வேண்டும், விளையாட வேண்டும், மனிதர்களை புரிந்துகொள்ள பழக்கப்படுத்த வேண்டும், மற்றவர்களின் நிறை குறைகளை கவனிக்கப் பழக்கப்படுத்த வேண்டும், அவைகளுக்கு இடையில் வாழப் பழகவைக்க வேண்டும், நல்ல குணங்களைக் காட்டி பெருமைப்படுத்த வேண்டும், கெட்ட குணங்கள் குடும்பத்தை எப்படி தொல்லை செய்கிறது என்பதைக் காட்டவேண்டும், சிரமம் வந்தால் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வதை பழக்கப்படுத்த வேண்டும், பல கல்யாணக் காட்சிகளை பார்க்க வைக்க வேண்டும், பல துக்க வீட்டுக் காட்சிகளையும் பார்க்க வைக்கவேண்டும், உறவுகளின் வீட்டுப் பிரச்சினைகளை ஆராய்ந்து பேசிப் பழக வேண்டும், பெற்றோர்களின், தாத்தாப் பாட்டிகளின்,... சிறுவயதுக் கதைகளை பேசவேண்டும்,... இவைகளும் கல்விதான் ! ஒருவன் வளர்ந்த பிறகு இவைதான் குடும்பவாழ்க்கையை நடத்த கைகுடுக்கும்.
இந்தக் கல்விமுறைதான் நம் நாட்டில் முன்பு இருந்தது. நம்மை திறமையும் சுய கௌரவமும் அற்றவர்களாக ஆக்கி, அவர்களுக்கு நிரந்தரமான அடிமைகளாக ஆக்கி, நிரந்தரமாக இங்கிருந்து கொள்ளையடித்துச் செல்வதற்காக, அவர்களுக்கு வேலைக்காரர்களாக நம் குழந்தைகளை ஆக்க வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்ட கல்விமுறையே இது.

இதற்கு முன் நம் நாட்டில் இரண்டும் இணைந்த நல்ல கல்வி முறை உண்மையில் இருந்தது. அது உலகில் உயர்ந்தது, நம் முன்னோர்கள் அதைத்தான் கற்று நல்வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஏன், உலகம் முழுவதிலும் இருந்து கூட வந்து கற்றார்கள்.
அந்தக் கல்வி வெள்ளையர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இன்றும் அதை மீட்க முடியும், நடை முறைக்கு சாத்தியமே. இந்தக் காலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படக்கூடியதே!
அது நடக்கலாம், என்றோ! ஆனால் இன்று பெற்றோர்கள் அப்படிப்பட்ட ஆசிரியர்களாக இருக்கத் தேவையானவைகளை கற்கவேண்டும். அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்வது சிறப்பில்லை. அதற்கு ஏற்பவே வாழ்க்கையை திட்டமிடவேண்டும்.  ஏனென்றால் அது குழந்தைகளுக்கு முக்கியமானது.
நினைவில் வையுங்கள், மனோவியல் ரீதியாகவே இந்த பண்புக்கல்வியை கல்வியை கற்க முடியும் வயது 21வரைதான், அப்போது கற்றுத் தராமல் அதற்குப் பிறகு அவைகளை அவனிடம் எதிர்பார்த்தால் அது அவனுக்கு முடியாதது,...
பிறகு தேவை இல்லாத பகை உருவாகும்,....
அதனால் பெற்றோர்கள் அவசியம் இவைகளை குழந்தைகளுக்கு பழக்கப் படுத்தவேண்டும். சொல்லித்தர வேண்டும்.  இவைகள் ஒருவனை நல்ல குடும்ப உறுப்பினன் ஆக்கும்,...
நல்லவனாக வாழ்வதெல்லாம் பணத்தைத் தருமா? என்று ஒரு வாதம் வருகிறது.
நிச்சயம் தரும்.... அதுதான் நிம்மதியைத் தரும் பணத்தைத் தரும், மற்றதோ அழிவைத் தரும் பணத்தைத் தரும்...

எவ்வளவு பணம் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல, எவ்வளவு நிம்மதி என்பதே வாழ்கையின் நோக்கம்.... அதற்கு ஏற்ற பணம் போதும்...

அந்தப் பணமும் நல்லவனாக இருந்தால் வராதே ?
நிச்சயமாக வரும், இந்த உலகம் கேட்பார் அற்ற அனாமத்துக் கணக்கில் இயங்கவில்லை, இறைவனின் நியதிகலால்தான் நடத்தப்படுகிறது.
நிச்சயமாக பயப்பட ஒன்றும் இல்லை.

கவனம்: இந்தக் கருத்துக்களை இப்போதும் பெற்றோர்கள் அலட்சியப்படுத்தலாம், அது அவர்களது உரிமை. ஆனால், குழந்தைகள் வளர்ந்த பிறகு, நிறைய சம்பாதிக்கிறான், ஆனால், காட்டுத்தனமாக வாழ்கிறான், மனிதத் தன்மைகள் இல்லாமல் கொடுமை செய்கிறான்,... என்று என்று வருந்தக்கூடாது...


முன்பு விதைத்த விதை முளைத்து பலனைத் தருகிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்!  


எது நற்கல்வி, பாரதம் சொல்லும் தீர்வு என்ன....
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/02/blog-post_87.html











































பாரதக் கல்வி முறை - பூரணவித்யா !

Leave a Comment
உலகில் கல்வியைப் பற்றி நிறைய நவீன கருத்துக்கள் காணக் கிடக்கின்றன. இவைகளுக்கு இடையில் பல ஆயிரம் தலைமுறைகளாக பாரதம் கொண்டு இருந்த கல்வி பற்றிய கண்ணோட்டம் மிகவும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.
ஒருவேளை இன்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க, ஏன் உலகின் பிரச்சினைகளை தீர்க்க இந்த முறை கல்வி ஒரு முக்கியமான தீர்வாக இருக்க முடியுமே என்று பரிசீலிக்க வேண்டிய ஒரு தகுதி உள்ள கண்ணோட்டமாகவும் இருக்கிறது. 

பாரதக் கல்வி முறை
பாரதக் கல்விமுறையானது - ஒருவன் ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்தவுடன் அவன் அந்த விஷயத்தை கற்றதாக ஒப்புக்கொள்வது இல்லை; ஒருவேளை அவன் அதனை பொருளைப் புரிந்தே மனப்பாடம் செய்து இருந்தாலும் கூட!
கல்வி எப்போது முழுமை பெற்றுள்ளது என்றால், அதாவது ஒருவனது கல்வி எப்போது முழுமை அடைந்தது என்றால் - கற்ற விஷயம் ஒருவனுக்கு முழுமையான பலனைத் தரும்போதுதான் என்கிறது.
அதாவது ஒருவன் ஒரு விஷயத்தைக் கற்று - அதன் பலனை அவன் அவனது வாழ்வில் இன்னமும் பார்க்கவில்லை அனுபவிக்கவில்லை என்றால் அவனது கல்வி இன்னமும் முடிவடையவே இல்லை என்கிறது பாரதீய கல்விமுறை!
அதாவது ஒருவன் ஒருவிஷயத்தை முதலில் கேட்கிறான். பிறகு மனனம் செய்கிறான். பிறகு அதன் பொருளைப் புரிந்துகொள்கிறான். பிறகு அந்தப் பொருளில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்கிறான். பிறகு அந்த நியாயத்தின் தோல்வி இன்மையைப் புரிந்துகொள்கிறான். பிறகு அந்த நியாயத்தின் மாற்றுக் கருத்துக்களின் தோல்வியை அறிகிறான். பிறகு மாற்றுக்கருத்துக்கள் நன்மையை செய்ய முடியாது, தொல்லையை செய்யலாம் அல்லது செய்ய முடியலாம் என்பதை அறிகிறான். பிறகு கற்ற நியாயம் நன்மை தரக்கூடியது என்பதை அறிகிறான். பிறகு அந்த நன்மையுடன் வாழ்வதுதான் புத்திசாலித்தனம் என்பதை அறிகிறான். பிறகு வேறு வழி இல்லாமல் அவனது மனம் அந்தக் கருத்திற்கு ஏற்பவே வாழவே முடிவு செய்கிறது. அதனால் அதில் வரும் சிரமங்களை அவனது மனம் சிரமமாகவே பார்ப்பதில்லை. மிக சுலபமாகவே கற்ற வழியே வாழ்கிறான்!
பாரதீய கல்வி முறையின் தேர்வும் கூட வித்தியாசமானதே. ஒருவனால் ஒரு நியாயத்தை நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க முடியவில்லை என்றால் கல்வியை அவன் கற்று முடிக்கவில்லை என்கிறது.
[ அதாவது 3X4=12 என்று தேர்வில் எழுதிய ஒருவன் எப்போதாவது 3X4=34 என்று பயன்படுத்தினால், அவன் இன்னமும் 3X4=12 என்பதை சரியாக கற்கவில்லை. ஏனென்றால் சரியாகக் கற்று இருந்தால் அவனால் 3X4=34 என்று பயன்படுத்த முடியாது என்கிறது! ]
வெள்ளையர்களின் மெக்காலே கல்விமுறை வரும் முன்பு வரை நம் நாட்டில் கல்வி முறை இப்படித் தான் இருந்தது. உலகில் எங்குமே இப்படி ஒரு கண்ணோட்டமே இருந்தது இல்லை.
உதாரணமாக, மெக்காலே கல்விமுறை இன்றும் தொடர்கிறது. இந்தக் கல்வி முறையின் படி ஒருவன் மது உண்ணாமை பற்றி தேர்வில் மிக நன்றாக எழுதுகிறான். தேர்வில் எழுதிவிட்டு அன்று இரவே மது அருந்தி சாலையில் விழுந்து கிடக்கிறான் என்றாலும் கூட அவனுக்கு முழு மதிப்பெண்ணும் கிடைக்கும். கல்வித்துறையைப் பொருத்தவரை அவனுக்கு முதல் மதிப்பெண்ணும் கொடுக்கும்.
அரசுத் தேர்வுமுறை அவனுக்கு மதிப்பெண்ணுக்கு உரிய பதவியையும் கூட கொடுக்கும்.
இன்றைய கல்வித்துறை சொல்கிறது இவன் நன்கு கற்றவன் என்று. ஆனால் தொல்காப்பியரும், திருவள்ளுவரும், அகத்தியரும், பதஞ்சலியும், வியாசரும், வால்மீகியும்,... இன்னும் ஆயிரம் ஆயிரம் கற்றறிந்த சான்றோரும் இவன் கல்வி கற்றதாக ஏற்பதில்லை!
ஒருவன் கல்வியை உண்மையில் கற்று இருந்தால் கற்ற வழியிலிருந்து அவனால் விலக முடியாது - வருத்தம் இன்றி, முனுமுனுப்பு இன்றி!
அப்போது தான் அவன் கல்வியைக் கற்றவன்!
அதனால் அதிக விஷயங்களை மனப்பாடம் செய்ததாலோ, அதிக மதிப்பெண்களை தேர்வில் பெற்றதாலோ, ஆராய்ச்சிகள் பல செய்து முனைவர் பட்டம் அல்லது டாக்டர் பட்டங்களைப் பெற்றதாலோ ஒருவன் கற்றவன் என்றால் அது நகைக்கைத் தக்க விஷயம் என்கிறது பாரதீயக் கல்வி முறை.
அப்படி ஒருவன் கல்விபயனை அனுபவிக்க வைக்கத்தான் கல்வியே அன்றி ஒருவனை தகல்களின் சுமையை தூக்குபவனாக ஆக்குவது அல்ல என்கிறது. மேலும், கல்வி என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ ஒருவன் வாழ்வில் பயன்தராத முறையில் தகவல்களை சேகரிப்பதையும் கூட பாரதீய கல்விமுறை ஏற்பதில்லை.
அதனைப் பொருத்தவரை அப்படி ஒருவன் கற்றால் அவன் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் ஏன் தனக்கும் கூட அழிவைத்தரும் நோயாக இருப்பான் என்பது பாரதீய கல்வி முறையின் கொள்கையாக இருந்துள்ளது!
இன்றைய கல்வி முறையால் வந்தவர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது இந்த வாதம் எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறது. மேலும் நமது அரசுகள் ஏன் பூரணமான இந்தக் கல்வி முறையை கைவிட்டு சுதந்திரத்திற்குப் பிறகும்கூட மெக்காலேவின் கல்விமுறையையே வைத்துக்கொண்டு உள்ளது என்று ஐயங்களை மனதில் எழுப்புகிறது.  

பூரண வித்யா சாதனங்கள்

ஒருவன் பூரண விதிவினை அடைய சாதனங்களையும் பாரதீய கல்வி முறை கொடுக்கிறது. அதன்படி....
கல்விப் பாடத்திட்டத்தை முழுமையாக மனனம் செய்வதால் அல்லது மனப்பாடம் செய்வதால் கல்வியின் கால்-பாகத்தை முடிக்கிறான்!
கற்றவைகளை கற்றவர்களுடன் மீண்டும் அலசி ஆராய்தல், கடைபிடித்து சோதித்தல், அதில் வரும் சிரமங்களுக்கு தீர்வுகாணுதல் இவைகளின் மூலம் கால்-பாகம் கல்வியை முடிக்கிறான்!
கற்றவைகளை மற்றவர்களுக்கு போதனை செய்யும்போது, கற்க கடைபிடிக்க வழிகாட்டும்போது இன்னொரு கால்-பாகத்தை கற்கிறான்.
இப்படி வாழ்ந்து போதிய காலம் கல்வியின் ஞானத்தில் முழுகிக்கிடப்பதால் மீதி கால்-பாகம் கல்வியை அடைகிறான்!
எப்படி என்றால், ஒரு விதை முளைக்க... நல்ல மண், மண்ணில் எரு அல்லது உரம், தண்ணீர், காற்று, சூரிய ஒளி இவைகள் தேவை.
விதையை நல்ல மண்ணில் போட்டு தேவையான மற்ற காரணிகளைகொடுத்துவிட்டு அண்ணாந்து பார்த்தால் மரம் வளர்ந்து இருப்பதில்லை. போதிய காலம் கொடுக்கவேண்டி உள்ளது!
இப்போது நாம் எங்கே ஏமாறுகிறோம் என்பது புரியும். கல்வி அறிவு உள்ளவர்களால் இந்த நாடு காப்பாற்றப்படும் என்று சொல்லும் போது - உண்மையான கல்வி அல்லது முழுமையான கல்வி உள்ளவர்களையே காணோம். சொல்லப்போனால் கால்-பாகக் கல்வியை உடையவர்களையே நாம் கல்வி கற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். கல்வித்துறையும் சொல்லுகிறது, அரசும் சொல்லுகிறது - நம்புகிறது.
அப்படி கால்-பாக கல்வி உள்ளவர்களின், நாட்டின் மீதான பலவித சீர்திருத்த முயர்ச்சிகளாலும் புதிய பல சோதனை முடிவுகளாலும்   இந்த நாடு ஏராளமான சோதனைகளை தாங்கி தனது சிறப்புகளை இழந்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.
நாட்டின் நிலை எப்படியோ, உண்மையான கல்வியாளனாக வாழ விரும்பும் ஒருவன் எந்த நாட்டை சேர்ந்தவனாக இருந்தாலும், எந்தக் கால கட்டத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், இந்த நான்கு கல்வி சாதனங்களை பயன்படுத்தினால் அவன் உண்மையான கல்வியின் பலனை அடைந்து பூரண வாழ்வினை அடைவான். மற்றவர்களுக்கும் நன்மையையே செய்வான்.
அவனே மனித வர்கத்திற்கு நம்பத்தகுந்த ஒரு மனிதன். அவன் சமூகத்திற்கு ஒரு ஈடு இணை அற்ற பரிசு!
இந்தக் 'பூரணக் கல்வி' முறையினால்தான் நம் பாரத நாடு முன்பு உலகை வியக்க வைத்து உலகில் சிறந்த நாடாக பலகாலம் திகழ்ந்தது! உலகின் கவர்ச்சியான மையமாக இருந்து உலகை கவர்ந்து இழுத்தது. நமது பாரம்பரிய பூரணக் கல்வியை அடைய முயற்சிப்போம் - குறைந்தது ஆசைப்படவாவது செய்வோமே!