படிப்பது சுலபம் - பகவத் கீதை !

Leave a Comment

பகவத் கீதை நூலை தானே படித்து அதிக பலன் பெற சுலப முறை....

1.. சிரமமின்றி படிக்க இந்த நூலை கண்டுபிடித்து வாங்க முயற்சிக்கவும்.
கீதாப்ரஸ் வெளியீடு, பகவத்கீதை - வரிசை எண் 823
கிடைக்குமிடம்: 9362202521 , 04223202521 

2.. முதலில் ஒரு முறை சுலோகங்களின் சம்ஸ்க்ருத வரி வடிவங்களைத் தவிர்த்து, மொழிபெயர்ப்பினைத் தவிர்த்த விளக்கங்களையும் தவிர்த்து, மொழிபெயர்ப்பை மட்டுமே ஒருசுற்று படிப்பது அவசியம். 

[ மேலே சொல்லப்பட்ட புத்தகத்தில் விளக்கம் இன்றி மொழிபெயர்ப்பு மட்டுமே இருக்கும்.  ]

3.. சிவப்பு , நீலம் என குறைந்தது இரண்டு நிற எழுதிகளை உடன் வைத்துக்கொள்ளவும். 

4. புத்தகத்தை தொட்டுக்கும்பிட்டு படிக்கத் துவங்குவதும், முடிக்கும் போதும் தொட்டுக்கும்பிட்டு எடுத்து வைப்பதும் மிகவும் நல்லது. 

5. பெண்கள், ஆண்கள் யாருமே எல்லா நாட்களிலுமே படிக்கலாம். 

6. முடிந்தவரை அமைதியான மன நிலையிலும், வேறு பணிகளில் இடையில் ஈடுபடாமலும், பொறுமையாகவும், மன ஒருமுகப்பாட்டுடனும் படிக்கவும். 

7. நேரம் இருந்தால், முதல் நாள் அல்லது இதற்கு முன்பு கடைசியாக  படித்ததை சிறிது புரட்டி நினைவுபடுத்திக்கொண்டு, புதிய பகுதியை தொடர்வது சிறந்த பலனைத் தரும். 

8. என்னதான் படித்தாலும் அதன் பொருளை நமக்குள் ஏற்படுத்த வேண்டியது வ்யாசாசார்யரும் ஸ்ரீ கிருஷ்ணரும்தான். அதற்காக அவர்களை ஒரு நிமிடம் மனதில் ப்ரார்த்தித்து படிக்கத் துவங்குவது வழக்கமும் சிறப்பும். 

[ அர்ஜூனர் ஏற்கெனவே வேதங்களை படித்து இருந்தவரே. மேலும் பல சாஸ்திர விளக்கங்களை நன்கு கற்று கடைபிடித்து வந்தவரே. எவ்வளவுதான் படித்து இருந்தாலும்கூட ஒரு நேரம் வரமுடியும், சிக்கலான சூழ்நிலைக்கு படித்ததிலிருந்து பதிலை எப்படிக் கண்டுபிடிப்பது அல்லது பொருத்துவது என்பது பிடிபடாமல் போகலாம். அப்போதெல்லாம் தம்மை விட சிறந்த ஞானம் உள்ளவர்களிடம் பேசி தெளிவு பெறவேண்டும் என்பது பாரத வேத உபதேசமும், நமது பாரத பண்பாடும். அந்த விதத்தில் அர்ஜூனர் தமது சந்தேகங்களுக்கு பதில் வேண்டி ஸ்ரீ கிருஷ்ணரிடம் ப்ரார்த்திக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரும் கூட ஏற்கனவே படித்து கடைபிடிக்கும் ஒருவருக்கு ஏற்பவே பதில்களை தருகிறார். என்றாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அர்ஜூனர், மேலும் மேலும் தொடர்ந்து சிறிய சிறிய எளிய சந்தேகங்களையும் கூட கேட்டு மேலும் தெளிவு பெறலாமே என்ற உணர்வுடன் கேட்டு தெளிவு பெறுகிறார். அதனால் நூலின் அமைப்பில் துவக்கத்தில் கஷ்டமான விஷயங்களை உடைய உரையாடலாகத் துவங்கி போகப் போக எளிய உரையாடலாக செல்கிறது. இப்போது இந்த நூலைப் படிப்பவர் ஒருவர் குருமுகமாக வேதங்களை நன்கு கற்று கடிபிடித்து வாழும் தவ வாழ்வில் இருப்பவர் என்றால் அதே வரிசையில் படிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி இல்லாத பக்ஷத்தில்.....]

9.. முதலில்12ஆவது  அத்தியாயத்தில் படிக்கத் துவங்கவும், தொடர்ந்து 13, 14, 15, 16, 17, 18ஆவது அத்தியாயங்களையும், பிறகு 6, 7, 8, 9, 10, 11 ஆவது அத்தியாயங்களையும், பிறகு 2, 3, 4, 5 ஆவது அத்தியாயங்களையும், பிறகு 1ஆவது அத்தியாயத்தையும் படிக்கவும். இந்த முறை மிக சுலபமாக படிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கிறது.

10.. படித்த சுலோகங்களில் ü -குறியிட்டு வைக்கவும். மிகவும் பிடித்த, ஊக்கம் அளித்த, சந்தேகங்களை நீக்கிய, தெளிவுகொடுத்த சுலோகங்களை µ -குறியிட்டு வைக்கவும். பொருள் புரியாமல் தடுமாற்றம் இருக்கும் சுலோகங்களில் ? -குறியிட்டு வைக்கவும். தொடந்து படிக்கவும். 

11.. ஏதாவது மனக் கஷ்டங்கள் நேர்ந்த சமயங்களில் ஏற்கனவே குறித்திருக்கும் சுலோகங்களில் எது ஊக்கம் தரும் என்று தோன்றுகிறதோ அதனை எடுத்துப் படிக்கவும். அல்லது வ்யாசாச்சாரியரையும், ஸ்ரீக்ருஷ்ணரையும் மனதில் ப்ரார்த்தித்து புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்துப் படிக்கவும். அங்கே உங்கள் சூழ்நிலைக்கான பதில் இருக்கும்! 

12.. ஏதாவது சுலோகத்தின் பொருள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றால், அதனை சம்ஸ்க்ருதத்தில் கற்று மனப்பாடம் செய்துகொண்டு அடிக்கடி சொல்லலாம். அது மிகுந்த பலனைத் தரும்.  சம்ஸ்க்ருதத்தில் எப்படி சொல்வது என்று தெரியாத பக்ஷத்தில் உதவி தேவைப்படின் 9042600600 அல்லது 9042800800 ஏதாவது எண்களில் அழைத்து உதவி பெறலாம்.  உங்கள் நண்பர்களுக்கும் சொல்லலாமே! 

உங்கள் பயணம் இனிதே அமைய ஆசிகள்...  !





கர்ம நியதிகளும் பராசக்தியும்!

Leave a Comment
இந்தப் பிறவியில் நீ பசு , அல்லது பசுவைப் போல் நல்லவன், பணக்காரன் என்பதால் முன் பிறவிகளில் நீ இயற்கையையோ மற்றவர்களையோ நீ செய்த கொடுமைகளுக்கு  உரிய தண்டனைகளை தராமல் இறை நியதிகள் விடுவதில்லை.

நீ எப்படி முன்பு மூடனாக முரடனாக இருந்து கொடுமைகளை செய்தாயோ அதே போல இயற்கையின் மூலம் அல்லது மற்றவரின் மூலமாக இப் பிறவியில் நீ இன்னொருவன் மூலமாக பலன் அளிக்கப்படுவாய் - இறை நியதிகளின் மூலமாக.

முன் மறு பிறவிகள் உண்மை அதை பார்க்க இயலாதவன் அறிவிலியே, கற்கத் தயார் இல்லாதவன் காட்டுமிராண்டி, தன்னையும் அழித்துக்கொண்டு, தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும் மூடன் கொடூரன்.

இந்த உண்மையை சொல்லித்தராத கல்வித்திட்டமும் காட்டுமிராண்டித்தனமானதே. 

இந்த உண்மைகளை பார்க்க திறன் இல்லாத ஒரு சமுதாயம் என்றுமே நாகரீகமான சமுதாயம் ஆக முடியாது. 

இந்த உண்மைகளை பார்க்க திறன் இல்லாத ஒரு மனிதன் என்றுமே பக்குவமான மனிதனாக ஆக முடியாது.

இவைகளை பார்க்கக் கற்பது மிக எளியதே. 

இவைகளுடன்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விதியும் பின்னப்பட்டு உள்ளது. 

அதனால் இந்த சூக்ஷ்ம விஞ்ஞானம் மிக அத்தியாவசியமானது. 

இவைகளை எல்லாம் நாம் நிரூபித்து வருகிறோம். நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். அறிவுப்பூர்வமாக வாழ்வதை விரும்பும் அறிவாளிகள் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

மூடர்கள் ஆணவத்தினால் கற்க இயலாமல் அழிகிறார்கள்.

சுகமான இல்லற வாழ்விற்கு சூக்ஷ்ம விஞ்ஞானம். 

துயரமான இல் வாழ்வுக்கு சூக்ஷ்ம விஞ்ஞானம் இல்லாத ஸ்தூல விஞ்ஞானம் மட்டும். 

பள்ளிக்கூடங்கள்.ஸ்தூல விஞ்ஞானத்துடன் சூக்ஷ்ம விஞ்ஞானத்தையும் சேர்த்துத் தரவேண்டும். 

அப்படித்தான் நமது பண்டைய கல்விமுறை இருந்துள்ளது. அதனால் தான் நமது முன்னோர்கள் உலகோர் வியக்கும் உயர்ந்த வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து காட்டினார்கள். 

உலகத்தால் செய்ய முடியாத சாதனைகளைஎல்லாம் சாதித்துக் காட்டினார்கள். 

இன்றும் நமது வம்சம் தொடர்ந்து வாழ்கிறது.  



சகாயம் அவர்களுக்கு அன்பான அழைப்பு....

Leave a Comment
மதிப்பிற்குறிய சகாயம் அவர்களுக்கும் , அவர்பற்றி சிந்திப்பவர்களுக்கும் ஒரு சொல்....



17 முறை கொள்ளையடித்துச் சென்ற கஜினிபோன்ற திருடர்களுக்கும்  சோறு போட்டு வழியனுப்பியவர்கள் நமது முன்னோர்கள்.


நமது நாட்டின் மரபுப்படி, பண்பாட்டின்படி நமது பணத்தை கொள்ளையடிப்பவன் - நமது துரோகி இல்லை.


நமது பாரதப் பாரம்பரியப் பண்பாட்டை ஏற்காதவனும், அழிப்பவனுமே துரோகி.


இந்த நாட்டின் பாரம்பரியப் பண்பாட்டை ஏற்காத அரசியல் தூய்மை என்ற பெயரில் பேசுபவர்கள் நாளை நமது மக்களை பிரிட்டிஷ் போன்ற அந்நிய கலாச்சாரத்திற்கு மாற்றலாம், அல்லது அதற்கு உடந்தையாக இருக்கலாம்.


அது இந்த நாட்டின் உயிர் நாடியையே அழிக்கும்.


நாம் இந்த விஷயத்திலிருந்து ஊழல், போன்ற  பிரச்சினைகளால் பயந்து  தீர்வுதேடி குழப்பத்தில் இருப்பதால் நமது இந்த இயலா நிலையைப் பயன்படுத்தி இதில் நடக்கும் சதி, அல்லது நஷ்டம் நமக்கு சுலபமாக தெரியாமல் போகலாம்....


கவனமாக இருக்கவும்.


இந்த நாட்டின் நதிகளை, மலைகளை, விவசாயத்தை, வளங்களை, பாரம்பரிய மருத்துவத்தை, உணவு & சமையல் கலைகளை,... மதிக்கும் சகாயம் போன்றவர்கள் ,....


ஏன் ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக நமது நாட்டு கல்வியாளர்களும் அறிஞர்களும் ஏற்படுத்தி, மக்கள் கடைபிடித்துவரும் பாரதப் பண்பாட்டை மதிக்க போற்ற ஏற்க முடியாது.


இந்த நாட்டின் அறிவுப்பூர்வமான வழிபாட்டு முறையை ஏன் ஏற்க முடியாது?


இங்கு என்ன இல்லை கடவுளை வழிபட, கடவுளை காண, கடவுளை அடைய, கடவுளாக ஆக.....


தனது வெளிநாட்டு மதத்தினை விட்டு விட்டு சகாயம் அவர்கள் நமது முன்னோர்களின் அறிவில் நம்பிக்கை வைத்து, பெருமிதத்துடன்,  நாட்டுப்பற்றுடன் வெளிவரவேண்டும். பிறகு இந்த நாட்டுக்கு சேவைசெய்யவேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.


இந்த நாடு என்றும் பணத்தை பாதுகாக்க அலைந்த நாடு கிடையாது.


பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தே எல்லா பெற்றோர்களும் தியாகம் செய்து தங்கள் குழந்தைகளை பண்பாட்டுடன் வளர்த்தார்கள், எல்லா தலைவர்களும் தியாகம் செய்தார்கள்.


பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று அவர்கள் சொன்னது இந்த நாட்டின் பண்பாட்டுக் கல்வியை இந்த நாட்டின் வேதங்களைத்தான்.... “ரெயின் ரெயின் கோ அவே...”வை இல்லை! பைபிளையும் இல்லை....


இவைகளுக்கெல்லாம் நியாயமான அறிவுப்பூர்வமான காரணங்கள் இருக்கின்றன. அவைகளை நாம் நிரூபிக்கத் தயார். மதிப்பிற்குரிய சகாயம் அவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் அவைகளை கற்க அன்புடன் அழைக்கிறேன்.


பண்பாட்டை கடைபிடிக்க முடியாததால், சமய வாழ்வை வாழ முடியாததால்தான் முதல் பாரத சுதந்திரப் போரே நடந்தது. வெள்ளையன் கொள்ளையடித்து சென்றதால் இல்லை....


பண்பாடு இல்லாத பணக்கார நாடாக நாம் இருக்க நம் முன்னோர் விரும்பியது இல்லை, அதற்காக நமது முன்னோர்கள் தியாகங்களை செய்யவும் இல்லை! 

இதை ஏற்காமல் அவர்களின் தியாகத்தில் வாழ்வது துரோகம் என்று அறிவாளிகள் நினைக்கிறார்கள்....



ஒழுக்கம் சட்டத்தால் மதிக்கப் படாது!

Leave a Comment
ஒழுக்கம் உயர்வினைத் தருவதால் ஒழுக்கம்
சட்டத்தால் மதிக்கப் படாது.    :(




பள்ளிக்கூடத்து மாணவன் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை, யாருடைய நிலையுமே, படித்தவாறு ஒப்புவித்தால் போதும்.

மற்றபடி ஒழுக்கம் இன்மை எல்லாம் அவர் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை.

அதைப்பற்றி எல்லாம் அரசுக்கு கவலை இல்லை என்று முதலில் ஆகிறது.

பிறகு அதைப்பற்றி எல்லாம் மக்களும் கவலைப்படக்கூடாது என்று ஆகிறது.

பிறகு அதைப்பற்றி எல்லாம் சிந்தித்தால் வாழ முடியாது என்ற நிலை வருகிறது.

பள்ளிக்கூடத்து மாணவன் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை ஒழுக்கமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ஒரே இடம்தான்.

படித்ததை ஒப்புவிப்பதில் மட்டுமே திறமைக்கு ஏற்ற உயர்வு. அதைக் கடைபிடிப்பதில் இல்லை. இது ஏனோ?

இது இப்படியே போனால் எங்கே போகும் என்று சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துள்ளது.




கதை: கிரிக்கெட்கிராமத்தின் திடீர் வளர்ச்சி !

Leave a Comment
மிகச்சிறந்த மிகப் பெரிய ஒரு கிரிக்கெட் விளையாட்டுக் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் பல ஆயிரம் பேர் குடி இருந்தார்கள். அனைவருமே தங்கள் விளையாட்டை உயிராக மதித்தவர்கள். அவர்கள் கிராமத்தில் தங்களுக்காக குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டார்கள். அங்கு அந்த விளையாட்டையே எப்போதும் விளையாடி விளையாடி அதில் தேவைப்படும் எல்லா விதிகளையும் கண்டுபிடிப்பதையே தங்களது வாழ்க்கை லட்சியமாகவும் கொண்டவர்கள்.

அவர்களுக்குள்ளேயே அவர்களுக்குத் தேவையான நன்கொடையாளரும் இருந்தனர். அவர்களுக்குள் பிரச்சினை வரும்போது தீர்க்கும் திறமையான அறிவாளிகளும் அவர்களுக்குள்ளேயே இருந்தனர். கிரிக்கெட்டைத் தவிர்த்த மற்ற எல்லா தேவைகளையும் வேலைகளையும் கூட கலந்து பேசி பிரித்து, இயன்றதை பகிர்ந்து  செய்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். அதனால் அந்த ஊர் 'கிரிக்கெட்கிராமம்' என்றே பட்டப் பெயரும் வாங்கிவிட்டது! 
ஊரில் எல்லோருமே நூற்றுக்கணக்கான குழுக்களாக  மைதானங்களில் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். சிறுவர்கள் பெரியவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வயது திறமைக்கு ஏற்ற குழுவில் விளையாடுவார்கள். விளையாட இயலாதவர்கள், விளையாட வராதவர்கள், விளையாட்டை இன்னமும் பழகாதவர்கள் அனைவரும் கூட நேரத்தைப் போக்க வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
இப்படி விளையாட்டே தமது வாழ்க்கை எனக் கொண்டு, வேறு எதையுமே உலகில் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.
ஒருமுறை வேறு ஒரு குழு, இவர்கள் சந்தோஷமாக இருப்பதைக் கேள்விப்பட்டது.  'விளையாட்டு' என்று ஒன்று இருப்பதே தெரியாத, எந்த விளையாட்டையுமே எந்த விதிகளுடனும் விளையாண்டே இருக்காத, பலசாலிகளின் கூட்டம் அது.
அந்த பலசாலிகள் ஒருமுறை இந்த கிரிகெட் வீரர்களின் மைதானத்திற்குள் வந்தனர். விளையாட்டு வீரர்கள் வைத்திருந்த பந்தினை பலவந்தமாக பிடுங்கினர். கிரிகெட் ஸ்டெம்-மின் அருகில் ஓடினர். பந்தினை பிடித்து கிரிகெட் ஸ்டெம்-மின் மீது வீசினர். கிரிகெட் ஸ்டெம் மூன்றுமே ஓடி தூர விழுந்தது.
பலசாலிகள் அறிவித்தனர் 'நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்' என்று. கிரிக்கெட் வீரர்கள் விதிகளை பேசினார்கள். பலசாளிகளுக்கு அந்த விதிகள் ஏதும் புரியவும் இல்லை. அதனால், “நீங்கள் ஏன் தேவையில்லாமல் உளறுகிறீர்கள். இப்படியெல்லாம் விதியை பேசிக்கொண்டே இருந்தால் வெகு காலம் ஆகும் வெற்றியடைய. நாங்கள் தான் வெற்றிக்கு சுலபமான வழியைக் கண்டுபிடித்தோம். நீங்கள் எங்களைப் போல வாழ வேண்டும். முன்னேற வேண்டும். அதற்கு நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்று உரக்கக் கத்தினார்கள்.
கிரிக்கெட் வீரர்களின் பேச்சு பலசாளிகளுக்கு புரியவும் இல்லை. கிரிக்கெட் வீரர்களை பேச விடவும் இல்லை.
கிரிக்கெட் வீரர்களின் குழந்தைகள் சுற்றிலும் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் - நடந்தது எல்லாவற்றையும். துவக்கத்தில் தங்கள் பெற்றோர்கள் சிரமத்தில் மாட்டியதைப் பார்த்து வருந்தினார்கள்.
உள்ளே வந்த பலசாலிகள் உரக்கக் கத்தினார்கள். நீங்கள் உங்கள் காலத்தை விரயமாக்கி உள்ளீர்கள். இனியாவது திருந்துங்கள் என்று.
விளையாட்டு வீரர்களின் குழந்தைகளில் விளையாட்டு வராத, விளையாட்டை இன்னமும் புரிந்துகொள்ளாத குழந்தைகள்  சிலருக்கு இது சரி எனப்பட்டது. அவர்களும் பலசாளிகளுடன் சேர்ந்து கத்தினார்கள், “நாம் இன்னமும் பழமையையே பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. விரைவாக முன்னேற அவர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டும். நாம் அனைவரும் திருந்தவேண்டும்" என்று.
இது வரை வெற்றி பெற இயலாதவர்களுக்கும் பலசாலிகளின் பேச்சு மிகவும் பிடித்துவிட்டது. பலசாலிகளுடன் சேர்ந்து கத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருந்தது.
பலசாலிகளுக்கு மிகுந்த ஆச்சரியம் ஆகிவிட்டது. 'இங்கேயே நமக்குத் தேவையான முட்டாள்கள் இருக்கிறார்களே' என்று நினைத்தார்கள். பலசாலிகளுக்கு மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டது, 'இந்த சூழ்நிலையை எப்படி பயன்படுத்தலாம்' என்று சிந்தித்தார்கள்.  
விளையாட்டு விதிகளை தெரிந்த, புரிந்துகொண்டு இருந்த சில குழந்தைகள், ‘இல்லை. நம் நேரத்தை நாம் விரயமாக்கவில்லை. அப்படித்தானே விளையாட வேண்டும்' என்று கத்திப் பார்த்தார்கள். ஆனால் பலசாலிகளின் கூச்சல், அவர்களுடன் சேர்ந்த குழந்தைகளின் கூச்சலுக்கு இடையில் இந்தக் குரல் எடுபடவே ல்லை.
அதனால் தாங்கள் வெற்றி பெற்றதாக பலசாலிகள் அறிவித்தார்கள். “உங்களுடைய குழந்தைகளும் எங்கள் பேச்சைத்தான் கேட்கிறார்கள். அவர்களை இனியும் நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது. நீங்கள் பழைய கற்கால விதிகளை போட்டு அவர்களை திணிக்கிறீர்கள். அவர்களை நாங்கள் எங்களது புதிய வெற்றி ரகசியங்களை சொல்லிக்கொடுத்து உயர்த்தப் போகிறோம்”, என்று கத்தினர்.
அவர்களுடன் சேர்ந்த குழந்தைகளை இந்தப் பேச்சு சந்தோஷப்படுத்தியது. “ஆஹா, பரவாயில்லை. நல்லவேளை இவர்கள் வந்தார்கள். நமது பெற்றோர்கள் எப்போதுமே இவ்வளவு அக்கறையை நம்மிடம் காட்டியதே இல்லை. என்று மகிழ்ந்து அவர்களை தலைவர்களாக வழிகாட்டிகளாகவும் ஏற்றுக்கொண்டார்கள்.
பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உள்ளே வந்த பலசாலிகள் அந்த ஊரிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் பக்கம் சாய்ந்த குழந்தைகளை தினசரி அழைத்து தங்களது சீக்கிரம் வெற்றியடையும் தந்திரங்களை சொல்லிக்கொடுத்தார்கள். அதற்கு கைமாறாக கிரிக்கெட் வீரர்களின் வீடுகளிலிருந்து பணம் மற்றும் பொருட்களை வாங்கிவர அந்தக் குழந்தைகளை பலசாலிகள் அனுப்பினர்.
பெற்றோர்கள் தரமுடியாது என்றனர். அவர்களை மீறி வீட்டுக்குள் சென்று பலவந்தமாக எப்படி எடுத்துவருவது என்று பலசாலிகள் தந்திரங்களை சொல்லிக்கொடுத்தார்கள்.
தங்களை சார்ந்த குழந்தைகளிடம் யார் ஊரில் பெரிய பணக்காரன், எங்கே வீடுகளில் பணம் வைக்கிறார்கள், அவைகளை எப்படி எடுக்கலாம்,... என்றெல்லாம் கலந்து பேசினார்கள் பலசாலிகள்.
தேவைஎன்றால் எப்படி திருடிக்கொண்டு வருவது  என்றும் பலசாலிகள் சொல்லித்தந்தார்கள். அவைகளை எல்லாம் நன்றாக திறமையாக கற்றுத் தேர்ச்சி அடைந்த சிறுவர்கள் வீடுகளுக்கு வந்து சண்டைபோட்டு பிடுங்கி சென்றார்கள். பலசாலிகளிடம் கொடுத்தார்கள். தற்குப் பெயர் 'டெக்னாலஜி' என்று சொல்லித்தந்தார்கள். சிறுவர்களும் டெக்னாலஜியை நன்கு கற்று தேர்ச்சி அடைந்தார்கள்.
பலசாலிகளும் அவர்கள் கொண்டுவந்து கொடுத்ததிலிருந்து நூற்றில் ஒரு பகுதியை டெக்னாலஜி தெரிந்த அந்த சிறுவர்களுக்கு செலவு செய்தனர். மாத சம்பளம், பணியில் சம்பளத்துடன் விடுமுறை, பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள், பணியிலிருந்து ஓய்வுக்குப் பிறகும் வேலை செய்யாமலேயே குறைந்த பக்ஷ சம்பளம்,... என்று பல நன்மைகளை சொன்னார்கள் அந்த பலசாலிகள்.
இதற்கெல்லாம் சிறுவர்கள் கொண்டுவந்ததில் நூற்றில் ஒரு பகுதிதான் தேவைப்பட்டது. அவைகளை தாராளமாக அவர்களுக்கு செலவு செய்ய பயன்படுத்திக்கொண்டு மீதி தொன்னூற்று ஒன்பது பகுதியையும் ஜாலியாக சாப்பிட்டுக்கொண்டும், தமது ஊருக்கு வீட்டுக்கு என்று அனுப்பிக்கொண்டும் இருந்தார்கள் பலசாலிகள்.  
அதற்காக பலசாலிகள், அந்த சிறுவர்களுக்கு மாத சம்பளம் கொடுத்தார்கள். சிறுவர்களுக்கோ மிகுந்த சந்தோஷம் நமது பெற்றோர்கள் எப்போதுமே இப்படி சம்பளம் தந்ததே இல்லையே. என்று ஆச்சரியப் பட்டார்கள்.
சில நாள் கழித்து பலசாலிகள் சிறுவர்களுக்கு பணம் வசூல் செய்து கொண்டுவருவதற்காக மோட்டார் பைக் வாங்கிக் கொடுத்தார்கள். ஓட்டவும் கற்றுக்கொடுத்தார்கள். சிறுவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக ஆகிவிட்டது.
சிறுவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள், “அப்பாடா, நல்லவேளை, இங்கு வந்தோம் நம்முடைய பெற்றோர்கள் நமக்கு சைக்கிள்தான் கொடுத்து இருந்தார்கள். இவர்கள் பைக் கொடுத்து உள்ளார்கள். பைக் ஓட்ட ரோடும் போடுகிறார்கள். இவர்களுடன் வாழ்ந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். “ என்று.
அதற்கு, பலசாலிகள் சொன்னார்கள், "இவைகள் எல்லாம் உனது உரிமைகள். உனது உரிமைகளை உனது பெற்றோர்கள் ஏமாற்றி வந்துள்ளார்கள். உங்களை அறியாமையில் வைத்துக்கொண்டு இருந்துள்ளார்கள். நாங்கள் நிச்சயம் உங்களை காப்பாற்றுவோம்", என்று சொன்னார்கள். அவர்களை சார்ந்த குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது.
குழந்தைகளை சேர்த்து கிராமத்திற்குள் அனுப்பி கிரிக்கெட் வீரர்களை அடித்து உதைத்து செல்வங்களை எடுத்து வர வைத்தனர் .
கிரிக்கெட் வீரர்களுடன் மோதத் தேவையான கிரிக்கெட்டை மட்டுமே பயிற்சி செய்து வந்தவர்கள் ஊரில் இருந்த பெரியவர்கள், இந்த கிரிகெட் தெரியாத பலசாளிகளால் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று என்றுமே சிந்தித்ததும் இல்லை.  அதனால் அதற்காக அவர்கள் பயிற்சி செய்ததும் இல்லை. அதனால் இந்தப் பிரச்சினையை தீர்க்கும் அறிவோ திறமையோ அவர்களுக்கு இல்லை. 
இப்போது என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

பலசாலிகள், தங்களுக்கு சேவை செய்யும் குழந்தைகளுக்காக பள்ளிக்கூடங்களையும் துவங்கினார்கள். அங்கு "உங்கள் முன்னோர்கள் உங்களை எப்படி ஏமாற்றி முட்டாளாக வைத்திருந்தார்கள் என்றும், நாங்கள் வந்து எப்படி உங்களை காப்பாற்றினோம்" என்றும் சொல்லித் தந்தார்கள். சிறுவர்களுக்கு அவைகளைப் படிக்கப் படிக்க மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டது. 
நல்லவேளை இவர்களுடன் வந்தோம், பிழைத்தோம் என்று நினைத்து பெருமைப் பட்டார்கள். அதேசமயம். இங்கு வராமல் ஏமாந்து வாழும் மற்றவர்களுக்காக மிகவும் வருத்தப்பட்டார்கள். அவர்களையும் எப்படியாவது நம்மைப் போன்று திருத்த வேண்டும் என்றும் நினைத்துக்கொள்வார்கள். 
ஒருமுறை பலசாலிகள் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தினார்கள்,... 
உங்கள் ஊரின் பெயர் 'மூடரூர்'.   
உங்கள் பெற்றோர்கள் எல்லோரும் வாழத் தெரியாமல் வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். 
அதனால் உங்களுக்கு என்று பழைய கட்டுக்கதைகளைத் தவிர வரலாறு என்று எதுவும் கிடையாது. 
நாங்கள் வந்த பிறகுதான் உங்கள் வரலாறு துவங்குகிறது. 
நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நாங்கள் சட்டம் போட்டு உள்ளோம். அப்படித்தான் வாழவேண்டும். 
அதை மீறினால். கடுமையான தண்டனை கிடைக்கும். எதிர்த்துப் பேசினால், சிந்தித்தாலும் தண்டனை கிடைக்கும். 
ஆனால் எதிர்த்து சிந்திக்காமல் எதிர்த்துப் பேசாமல் வாழ்ந்தாள் நாங்கள் உங்களுக்கு மிகுந்த நன்மைகளை எப்போதும் செய்வோம். 
ஏனென்றால் இது உங்கள் உரிமை. 
உங்களது பெற்றோர்களை போல நாங்கள் உங்களை ஏமாற்ற மாட்டோம். 
அதனால் நாங்கள் உங்களுக்கு தெய்வம் போல என்று எப்போதும் சொல்லுங்கள். 
எங்கள் பெயருக்கு முன்னாள் லார்ட் என்றும், பின்னால் பிரபு என்றும் சேர்த்துதான் சொல்லவேண்டும். 
நாங்கள் இப்போது சொல்லச் சொல்ல அனைவரும் திரும்பச் சொல்லவேண்டும்..... 
“நாங்கள் எல்லோரும்...”
“நாங்கள் எல்லோரும்...” 
“மூடரூர் குடிமக்கள்”
“மூடரூர் குடிமக்கள்” 
“நாங்கள் மூடரூர் குடிமக்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.”
“நாங்கள் மூடரூர் குடிமக்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” 
“நாங்கள் சட்டத்தை மதித்து எப்போதும் ஒற்றுமையாக வாழுவோம்.”
“நாங்கள் சட்டத்தை மதித்து எப்போதும் ஒற்றுமையாக வாழுவோம்.” 
“எங்கள் தெய்வங்கள் லார்ட் வெல்லஸ் லி பிரபு, லார்ட் வாரன் ஹேஸ்டிங் பிரபு, லார்ட் மெக்காலே பிரபு, லார்ட் மவுண்ட்பேட்டன் பிரபு, லார்ட் ராபர்ட் கிளைவ் பிரபு,...”  
“எங்கள் தெய்வங்கள் லார்ட் வெல்லஸ் லி பிரபு, லார்ட் வாரன் ஹேஸ்டிங் பிரபு, லார்ட் மெக்காலே பிரபு, லார்ட் மவுண்ட்பேட்டன் பிரபு, லார்ட் ராபர்ட் கிளைவ் பிரபு,...”  
நன்கு உரக்கச் சொன்னவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு,... என  வழங்கப்பட்டது. கழுத்தில் டாலர் மாட்டப்பட்டது. பலசாலிகளின் தலைவர் கை குலுக்கினார். சிறுவர்களுக்கு மிகவும் பெருமையாகி விட்டது. 
“பசங்களா எல்லோரும் கைதட்டுங்கள் பார்ப்போம்...!”
எல்லோரும் பலமாக கைத்தட்டினார்கள்...
ரெண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு எல்லாம் வழங்கப்பட்டன...
பலசாளித் தலைவர் பேசினார், “இதே போன்று மற்றவர்களும் நன்றாக முயற்சி செய்து அடுத்த முறை முதல் இடம் பிடிக்க முயற்ச்சிக்க வேண்டும், சரியா? “
“சரீங்க சார்...!”
“முயற்சி எடுத்தால் உங்களால் நிச்சயம் முடியும் , முயற்சி எடுப்பீர்களா...”
“எடுப்போம் சார்....”
“உங்களில் நன்றாக திறமையாக படித்த முயற்சி செய்த சில பேரை இப்போது போலீசாக ஆக்கப் போகிறேன், நீதிபதியாக ஆக்கப் போகிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் எதிராக யார் வந்தாலும் இவர்கள் அவர்களை பிடித்து கடுமையாக தண்டிப்பார்கள் அழிப்பார்கள். இப்படி செய்வோமா...”
“செய்யலாம் சார்...”
“நீங்க எல்லோரும் ஒத்துக்கறீங்களா....”
“ஒத்துக்கறோம் சார்....” 
“வெரிகுட், பசங்க எல்லோரும் பள்ளிக்கூடத்தில நல்லா படிச்சி இருக்கீங்கன்னு தெரியுது, எல்லோருக்கும் பாராட்டுக்கள்.... எல்லோரும் கைதட்டுங்கள் பார்ப்போம்...!”
அனைவரும் கைதட்டினர்.... 
“உங்களுக்கு நல்லா பாடம் சொல்லிக் கொடுத்ததுக்காக உங்கள் ஆசிரியருக்கு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது கொடுக்கொறோம். பசங்களா எல்லோரும் கைதட்டுங்கள் பார்ப்போம்...!”
அனைவரும் கைதட்டினர்....
“இதே போன்று நீங்களும் நல்லாசிரியர் போன்ற விருதுகளை எங்களிடம் இருந்து வாங்க இன்னும் நிறைய உழைக்கணும், முயற்சி எடுத்துக்கொண்டே இருக்கணும், செய்வீங்களா...”
“செய்வோம் சார்....”
“வெரிகுட் சில்ட்ரன்...”
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இது பாரதத்தின் நிலை.  
பழங்காலத்தில் பாரதத்தின் குடிமக்கள் பாரதிகள், இந்த சிருஷ்டி, வாழ்க்கை, இவைகளை இயக்கும் விதிகள், இவை அனைத்துக்கும் காரணம் ஆன இறைவன் இவைகளை கண்டுபிப்பது, இவைகளே தமது வாழ்க்கை என்று வாழ்ந்த விஞ்ஞானிகள் அவர்கள். கண்டுபிடித்த உண்மைகளின் துணையுடன் நிம்மதியாக எப்படி ஆனந்தங்களை அடைந்து வாழ்வது என்று மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு, வாழ்ந்தவர்கள். இந்த கிரிக்கெட்கிராமத்து வீரர்களைப் போல.
கதையில் பலசாலிகளைப்போல வெளி நாட்டவர்கள் வந்து பாரதத்தின்  கட்டமைப்புகளை இப்படித்தான் குழப்பி வைத்து உள்ளனர். இந்தியாவாக ஆக்கி உள்ளனர். 
இதற்கு என்னதான் தீர்வோ? கதை புரிந்தவர்கள் யோசிக்க வேண்டும். சொல்லவேண்டும். செய்யவேண்டும்!  


ஜல்லிக்கட்டு - ஹிம்சையா, அதை தடை செய்வது ஹிம்சையா?

Leave a Comment
உலகில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரை. ஆனால் பேசப்படும் ஒரு அறிவுரை உண்மையில் நன்மை செய்வதுதானா என்பது எப்போதும் கேள்வியே. 



தன்னால் வாழ இயலாத ஒரு நல்ல விஷயத்தை ஒருவன் தகவலாக சொல்லலாம், தவறு இல்லை, வரவேற்கப்பட வேண்டியதே. 

ஆனால், அதை ஒருவன் அர்வுரையாக சொல்ல அவன் முதலில் வாழ்ந்துபார்க்க வேண்டும். 

அப்போதுதான் அதில் உள்ள நெளிவு சுளிவுகள் புரியும். அதில் உள்ள பல பரிமாணங்கள் புரியும். 

அவைகளை புரிந்துகொள்ளாமலேயே ஒரு அறிவுரை சொல்லப்படும்போது அது பயனற்றதாக ஆகும், பிறரால் நகைக்கப்படும். 

அதை ஒருவன் அல்லது ஒரு சமுதாயம் ஏற்றால் அழிவை அடையலாம். 

ஒரு கருத்தின்படி வாழ இயலாத ஒருவன், அந்தக் கருத்தை அறிவுரை சொன்னால் அவன் திருடன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ நன்மைக்காக அழிக்கத் துணிபவன் என்பதையும், இன்று இல்லாவிட்டால் நாளை ஒரு தேவையும் சூழ்நிலையும் வரும்போதுஅழிக்கத் தயங்கமாட்டான் என்பதையும் அறிவுள்ளோர்முன்பே புரிந்து கொள்ளவேண்டும். 

அஹிம்சையைப் பற்றி பேசும் ஒருவன் தான் முதலில் வயிற்றை நிரப்ப அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். 

ஊரைக் கொள்ளை அடித்து சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். பிறகு பேசவேண்டும்.

 அஹிம்சை ஹிம்சைகள் எப்போதும் எல்லைகளை உடையவைகள். 
100% அஹிம்சையாகவும் யாரும் வாழ முடியாது. 100% ஹிம்சையாகவும் யாரும் வாழுவது இல்லை. 

மேலும் எப்போதுமே அடுத்தவர்களுக்காக நல்ல விஷயங்களை கடைபிடிப்பது வளர்ச்சியின் குழந்தைத்தனம்.  

தன் உயர்வுக்காக கடைபிடிப்பதே பக்குவப்பட்ட நிலை. 

உலகில் அஹிம்சை உயிர்களின் நன்மைக்காக என்று மட்டுமே தெரியும். நம் நாட்டில் அதைத் தாண்டி அதை கடைபிடிக்கும் அளவு நான் உயருகிறேன் என்ற உணர்வுடன் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த நிலை ஒன்று இருப்பதே தெரியாத குழந்தைகள் பக்குவப்பட்டவர்களுக்கு அறிவுரை சொல்வது சிரிக்க வைக்கிறது. 

அதையும் மதித்து, இந்த நாட்டு நீதிமன்றம் பக்குவமானவர்களை அவமதிக்கிறது என்றால்,  இந்த நாட்டின் கல்வி எந்த அளவிற்கு இந்த நாட்டை உயிர்நாடியிலிருந்து பிரித்து அழைத்துச் செல்கிறது என்பதற்கு நிரூபணமாக இருக்கிறது. 

மாதம் மூவாயிரம் வருமானமின்றி அரை பசியையும் தீர்க்க இயலாமல் வாழ்க்கை நடத்துபவனின் வரியை வாங்கி மாதம் முப்பதாயிரம், செய்யாத வேலை நாட்களுக்கும் சம்பளம்,... என வாங்குவதும், வரி கொடுத்தவனின் பண்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு சொல்வதும் ஹிம்சை இல்லை அஹிம்சை என்று யார் ஏற்க முடியும்?

குழந்தை நிலையை விட கீழே யுக்கும் நிலை உண்மையில். அவர் அவர்களும் அவர் அவர்களின் எல்லைகளை அறியவேண்டும். அதற்குள் பணிசெய்யவேண்டும்.

பண்பாடுசம்பத்தப்பட்ட விஷயங்களை சட்டத்தின் கண்ணோட்டாப்படி, சட்டத்தின் பலத்தால் நடத்துவது நல்லது இல்லை. 

பக்குவப்பட்ட கல்வியாளர்களாலும், வாழ்ந்து சோதித்துப் பார்த்த சான்றோர்களாலும் கற்றுத்தரப்பட்டு, பாராட்டப்பட்டு, ஆயிரம் ஆயிரம் காரணங்களுடன் பல தலைமுறைகளாக கடைபிடிக்கப்படும் முக்கியப் பண்புகள் பக்குவம் அற்ற குழந்தைகளாலும், நீதிமன்றங்களாலும் அவமதிக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் இந்த பாரதத்தின் உயிர்நாடியை அழிக்கும் செயல்கள் என்பதை அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், கல்வித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், நாட்டில் சமுதாயத்தில், குடும்பத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் அவசியம் புரிந்து இருக்கவேண்டும். 

இந்த நாட்டுக்கு உதவி செய்கிறேன் என்ற நினைவில் தொல்லை செய்துவிடக்கூடாது என்ற கவனம் கற்றவர்களுக்கும் தலைவர்களுக்கும் எப்போதும் வேண்டும் என்று தோன்றுகிறது. 

உங்கள் கருத்து என்னவோ? 




     

குடியரசு தின சிந்தனைகள்

Leave a Comment

"பாரதி" என் தாயின் பெயர்!
ஞானரதம் அதன் பொருள்!

ஏற்க முடியாது...
திருட வந்தவன் என் தாய்க்குப் பெயர் வைப்பதை!

ஏளனமாய் கிண்டல் செய்து இந்தியா என்று
வைத்த பெயரில்

என்னால் பெருமைப்பட
எப்படி முடியுமோ?

நீங்கட்டும் சட்டத்திலிருந்தே 
இந்தியா என்ற   
பொருளற்ற அடிமைப் பெயர் !

தன்மானம் இல்லாதவன்
நற்குழந்தைகளை
தரவே முடியாது!

அவமானத்திற்கு அஞ்சாத
திருடர்களையே
பெற முடியும்!

திருடன் தந்த
இழி பெயர் இனி
வேண்டவே வேண்டாம்!L

என் முன்னோர் சொன்ன
நல் பெயரே
இனி எமக்கு வேண்டும்!J

வேண்டாம் இந்தியா! L
வேண்டும் பாரதம்!! J

சுடச் சுட பகிர்வோமே!

சூடு சொரணை காப்போமே!J  

நமக்கு வேண்டாம் என்றாலும் 
நம் பிள்ளைகட்கு
வேண்டுமன்றோ! L


ரிஷிகுடில் காலரி வீடியோக்கள்

Leave a Comment
வாழ்க்கை லட்சியத்தில் பணத்தின் இடம் என்ன? ....என்பதை இந்த உரை நன்றாக படம் பிடித்துக் காட்டுகிறது! 
[Guruji Aishwarya MahaRishi Talk Life Goal ]
https://www.youtube.com/watch?v=-yqFbwx77UQ


நமது நாட்டின் உண்மையான கல்வி என்ன? அது எப்படி வெள்ளையர்களால் நீக்கி , புதிய கல்விமுறை திணிக்கப்பட்டது. ஏன் அவ்வாறு செய்யப்பட்டது? அதன் விளைவுகள் இன்று என்ன? என்பவைகள் அழகாக சுருக்கமாக பேசப்பட்டுள்ளது. 
https://www.youtube.com/watch?v=CpPa1GiPO-c



நாம் முன்னேற்றம் என்று நினைப்பவைகள் உண்மையில் பரிசீலனை செய்யப்படவேண்டும். இது போன்ற சரியான உரையின் துணையுடன். 
வாழ்க்கை லட்சியம் எது என்பதும் மீண்டும் பரிசீலனை செய்யப்படவேண்டும். 

[File05 TALK 02 Certificate eppadi varugiradhu] 

https://www.youtube.com/watch?v=PHE6N_QIYHM


நீ நிம்மதியாக இருக்க வழி என்ன? மனைவி சரியானால், கணவன் சரியானால், அப்பா சரியானால், அம்மா சரியானால், மகன் சரியானால், மகள் சரியானால், மாமியார் சரியானால், மருமகள் சரியானால், யாரோ சரியானால், தொழில் சரியானால், வருமானம் சரியானால், சூழ்நிலை சரியானால், எதுவோ சரியானால் நான் நிம்மதியாக வாழமுடியும் என்று நம்புகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. எது சரியானாலும் ஒருவன் நிம்மதியாக வாழமுடியாது! எது சரியாக வில்லை என்றாலும் நீ நிம்மதியாக வாழ முடியும் ! எப்படி? 

[File09 TALK 06 Kashtam veru Kavalai veru] 

https://www.youtube.com/watch?v=KwaaIgo6w3U


பண்பாடுசம்பத்தப்பட்ட விஷயங்களை சட்டத்தின் கண்ணோட்டாப்படி, சட்டத்தின் பலத்தால் நடத்துவது நல்லது இல்லை. 

பக்குவப்பட்ட கல்வியாளர்களாலும், வாழ்ந்து சோதித்துப் பார்த்த சான்றோர்களாலும் கற்றுத்தரப்பட்டு, பாராட்டப்பட்டு, ஆயிரம் ஆயிரம் காரணங்களுடன் பல தலைமுறைகளாக கடைபிடிக்கப்படும் முக்கியப் பண்புகள் பக்குவம் அற்ற குழந்தைகளாலும், நீதிமன்றங்களாலும் அவமதிக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் இந்த பாரதத்தின் உயிர்நாடியை அழிக்கும் செயல்கள் என்பதை அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், கல்வித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும், நாட்டில் சமுதாயத்தில், குடும்பத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் அவசியம் புரிந்து இருக்கவேண்டும். 

https://youtu.be/qBOz28F1hgo