சித்தர்கள் கூறும் தூங்கும் முறை

Leave a Comment
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் ஆராய்ச்சிகளை செய்து, முடிவுகளை தங்கள் நூல்களில் கூறியுள்ளனர்.


தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று. 

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .

இதன் பொருள் :-
ஒருவனுக்கு இரவில் அடிக்கடி நித்திரை கெட்டால்புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, சூடு, மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதையும்கூட சித்தர்கள் முன்பே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

அதாவது .... 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது பொதுவாகவே அனைத்து விஷயத்திலும்  நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தியானது தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை  அதிகரிக்கச் செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடல் குளிர்ச்சி அடையும்.  

தாமதமாக இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும். அதனால் இரவில் தாமதமாக உணவு உண்ணக் கூடாது.

சித்தர்கள் கூறியது அனைத்துமே ப்ரத்யக் விஞ்ஞானத்தினால் அறியப்பட்டவைகள். அவர்களும் ப்ரத்யக் விஞ்ஞானிகளே. பராக் விஞ்ஞானிகளுக்கு இவ்வளவு நுணுக்கமாக கண்டுபிடிக்க முடியாது. பராக் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் எல்லாம் பொதுவாக மேலோட்டமானவைகளே.

அதனால் ரிஷிகளின் பேச்சுக்கள் எல்லாம் நமக்கு நன்மை செய்பவைகளே. இயன்றவரை இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம். மறக்காமல் நமது சந்ததிகளுக்கும் சொல்லித்தருவோம். புண்ணியம் பெறுவோம்.



நன்மை தரும் நக்ஷத்திர காயத்திரி மந்திரங்கள்!

Leave a Comment


27 நக்ஷத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரங்கள் :!!!
உங்கள் நக்ஷத்திரத்திற்கு உரிய காயத்ரியை மனப்பாடம் செய்துகொண்டு தினமும் 9 முறையாவது சொல்லுங்கள், சொல்லும் அளவு நன்மையே. வாழ்க்கையில் சிரமங்கள் குறைந்து, மிகச்சிறந்த வளர்ச்சியைக் காணலாம்.

நக்ஷத்திரம்: அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: கேட்டை
நக்ஷத்திரம்: ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

நக்ஷத்திரம்: ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி

மந்திரங்களை பயன்படுத்துவோம் - பயன் பெறுவோம்!

குரு + வேதம் = பூரண வாழ்க்கை

Leave a Comment

குரு + வேதம் =   பூரண வாழ்க்கை  

 குரு - வேதம் =   நரக வாழ்க்கை  
 வேதம் - குரு =   துக்க வாழ்க்கை  
- குரு - வேதம் =   மிருக வாழ்க்கை  

குருவால் சொல்லப்படாத வேதமும் பாழும் கிணறு...
வேதத்தை சொல்லாத குருவும் பாழும் கிணறு...
இரண்டும் இல்லாத வாழ்க்கையோ தூக்குக்கயிறு...!

வேதத்தை சொல்லும் குருவை அடைந்தவனே உண்மையில் பணக்காரன்! பாக்கியவானும்கூட!!

ஏன் இப்படி சொல்லப்படுகிறது?

ஏனென்றால், வாழ்க்கை இருப்பதே நூறு ஆண்டுகள். அதில் பல வித உழைப்பு முயற்ச்சிகள், சச்சரவுகள், தூக்கம்,.... என எல்லாம் போக அனுபவிக்கக் கிடைப்பதோ சில மணி நேரங்களே...

அதையும் யார் யாரின் பேச்சையோ கேட்டு ஏமாந்து போனால்...
அது புத்தி சாலித்தனமான வாழ்க்கை ஆகமுடியாது.  

ஏன் அப்படியோ?

ஏனென்றால் ஆயிரம் பேர் பத்தாயிரம் யோஜனைகளை சொல்கிறார்கள். அதற்கும் மேலும் யோசனை சொல்லும் ஒருவரின் கருத்துக்களே நிலை இன்றி மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சொல்பவர்கள் எல்லோரும் சொல்லும்போது எனது கருத்து சரியே என்று சொல்லிவிடுகிறார்கள்.

இது ஏன் குருநாதர் சொன்னது - அதனால் நான் நம்பலாமே?

நீ தடுமாறி குழப்பத்தில் இருப்பதால் அதனை நம்பி ஆகவேண்டிய சூழ்நிலைக் கைதியாக இருக்கிறாய். உன்னைப்போல் ஆயிரம் பேர் அவரிடம் வந்தால், அவரை ஒரு குரு என்று சொல்லிவிடுகிறாய்.

ஆயிரம் பேர் ஒருவரிடம் வந்ததாலேயே, அவர் பேசுவது சரி என்று பொருள் கிடையாது. ஏனெனில் வருபவர்களே, ஏற்கனவே அறியாமையில் இருப்பவர்கள்தான். அவர்களால் அவரின் பேச்சில் தவறு நடப்பதை கண்டுபிடிக்க முடியாது. மற்றவர்களின் பேச்சைக்காட்டிலும் வித்தியாசமாக இருப்பதால், ஒருவேளை, அனைவரும் பாராட்டலாம்.

நம்பத் தகுந்த பேச்சு எதுதானோ?

வேதத்தின் பேச்சு ஒன்றே நம்பத்தகுந்தது. அது இந்த உலகைப் படைத்த இறைவனிடமிருந்து வெளிப்பட்டது. ஒட்டு மொத்த சிருஷ்டியின் விதிகளையும் பேசுவது. அதனால் உனது வாழ்வின் விதி ரகசியத்தையும் பேசுவது.

உண்மையில், வேதத்தை குருமூலமாக கற்று வாழ்பவனே புத்திசாலியாக வாழ்கிறான்.

ஏன் நானே படித்தால் என்ன? 

மனிதனின் மனம் பல கோடி பிறவிகளை கடந்து வந்துள்ளது. அறியாமையினால் தவறுகளை சரி என்றும், சரியானவைகளை தவறும் என்றும் கூட பலவாறு கருதி வாழ்ந்து வந்துள்ளது. அந்தப் பதிவுகள் நிச்சயம் மனதில் இருக்கும். அந்த பதிவுகளைக் கொண்ட மனதின் வழியாக பார்க்கும் பொது, உண்மை திரிக்கப்பட்டே புரிந்துகொள்ளப்படும். வேதத்தை குரு இன்றி தானே படித்து இப்போது குருவாக இருப்பவரும் இப்படி தவறாகவே புரிந்துகொண்டு, தவறாகவே போதிப்பார்!

அதனால் உண்மையை நேருக்கு நேர் திரிக்கப்படாமல் பார்க்கும், குருவினால் உபதேசிக்கப்பட்ட ஒரு குருவினாலேயே, சீடன் எங்கே தவற விடுகிறான் என்பதை பார்த்து,  இதை போதிக்க முடியும்.

வேதத்தின் துணை இன்றி உண்மையை நேருக்கு நேர் தானும் பார்க்க முடியாது, இன்னொருவரை பார்க்க வைக்கவும் முடியாது.

வேதம் பேசுவது உண்மையைத்தான் என்று நான் எப்படி நம்புவது?
நீ இறந்த பிறகு ஸ்வர்கத்திற்கு அல்லது நரகத்திற்கு போய், இங்கு வேதம் பேசியதெல்லாம் உண்மைதான் என்பதை புரிந்துகொள்வாய் - என்று வேதம் பேசவில்லை.

இங்கேயே இப்பிறவியிலேயே, வாழும்போதே உண்மையை பார்க்கவைக்க தயாராக இருக்கிறது. அதனால் அதற்குப் பெயர் பிரமாணம்!

அதுவும் ரிஷிகுடில் தன்னை நாடிவந்தவர்களை ஒரே ஆண்டிலேயே உண்மையை பார்க்கவைத்து வருகிறது!