கதை: எது முக்கியம் வாழ்வில்?

Leave a Comment
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.

ஆனால் அவன் தனது நான்காவதுமனைவியை மட்டும் மிக அதிகமாகநேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்குத் தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனதுநண்பர்களுக்கு முன்னால்காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்றுபயந்தான்.

அவன் தனது இரண்டாவதுமனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள்வரும்போது மட்டும் அவளிடம்போவான். அவளும் அவனுடையபிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை கண்டுகொண்டதே இல்லை. ஆனால் அவளோ அவன்மீதுமிகவும் நேசம் வைத்திருந்தாள்.அவனது எல்லா தேவைகளையும்அவள் கவனித்து கொண்டாள்.

ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில்விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான்.

தான் இறந்தபின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய்இருக்கிறார்கள் என அறிந்துகொள்ளவிரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை உடன் வருமாறு அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டுஅவனை விட்டு நீங்கினாள்.

அவன்தனது மூன்றாவது மனைவியைஅழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன்போகப்போகிறேன் என்று கூறிவிட்டுசென்றுவிட்டாள்.

பிறகு தனதுஇரண்டாவது மனைவியை அழைத்துக்கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன்கல்லறைவரைக்கும் கூட வரமுடியும்.
கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்துபோனது. அப்போது தான் அவனதுமுதல் மனைவியின் நினைவு வந்து அவளை நோக்கித் திரும்பினான்.

அவளது குரல் ஒலித்தது. "நீ  எங்கே போனாலும் நான்உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாகவருவேன் "  என்று சொன்னாள்.

ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக பலமிழந்து நிற்கவும் இயலாமல் இருந்தாள். காரணம் அவன் அவளை என்றுமே கவனித்துக்கொள்ளாததுதான்.

அவன்வருந்தினான். 'நான் நன்றாக இருக்கும்போதே உன்னையும் சரியாக கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேனே' என்று அழுதான்.
வருத்தத்திலேயே இறந்தும்  போனான். அதை அறிந்த உடன் அவளும் பயணம் செய்தாள்.

உண்மையில் உனக்குமே கூட இந்த நான்கு மனைவியரும் உண்டு!

4. நான்காவது மனைவி உன் உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்கநன்றாக கவனித்துக் கொண்டாலும் கடைசியில் உன்னுடன் வரப்போவதில்லை.
நீ இறந்ததும் அதுவும் மான்னாகி, பின் வேறு யாருக்கோ உடலை அமைகிறது!

3. மூன்றாவது மனைவி உனது சொத்துசுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறுயாருடனோ சென்றுவிடுகிறது.

2. நமது இரண்டாம் மனைவி என்பதுநமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில்தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூடவே வரப்போவதில்லை.  அவர்கள் நீ இன்றி இருப்பவர்களுடன் அவர்களது வேலையைத் தொடருவார்கள்.

1. நாம் கவனிக்காமல் விட்ட முதல்மனைவி நமது ஆன்மா.


நாம் நன்றாக இருக்கும் போது நம்மால்கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்துபோய் இருந்தாலும் நம்முடன் இறுதிவரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

 ஆன்மா ஆரோக்யமாக இருகத்தேவை ஞானம்!

எது முக்கியம் வாழ்வில்?

0 comments:

Post a Comment