மனித உருவில் மிருகங்கள் - கண்டுபிடிப்பு!

Leave a Comment
येषां न विद्या न तपो न दानं ज्ञानं न शीलं न गुणो न धर्म:।
ते मर्त्यलोके भुवि भारभूता मनुष्यरूपेण मृगाश्चरन्ति॥

ஏஷாம் ந வித்யா ந தபோ ந தானம்
                
ஞானம் ந ஶீலம் ந குணோ ந தர்மஃ
தே மர்த்ய-லோகே புவி-பார-பூதாஃ
                
மனுஷ்ய-ரூபேண ம்ருகாஶ் சரந்தி

Those who are devoid of knowledge, austerity, charity, wisdom, morality, virtue and righteousness are virtually animals living in the garb of human beings, and burdening the Earth.


யாருடைய வாழ்வில் [வேதக்-] கல்வி இல்லையோ, [ அந்தக் கல்விக்கு ஏற்ப வாழும் - ] தவம் இல்லையோ, தானம் இல்லையோ, [ ஆத்ம-] ஞானம் இல்லையோ, நன்னெறி இல்லையோ, நற்குணம் இல்லையோ, [தனி நபர், குடும்ப, சமூக-] கடமை நிறைவேற்றல் இல்லையோ, அவர்கள் மனித உருவத்தில் வாழும் மிருகங்கள். இவ்வுலகில் பூமிக்கு பாரமாகவே வாழ்பவர்கள்.

😀
இதை, நான் சொல்றேன்னு நினைச்சுக்காதீங்கங்க. நம்ம பாட்டனுக்கு பாட்டன்கள் எல்லாம் இவைகளை எல்லாம் கடைபிடித்து, ஆய்வு செய்து பார்த்துட்டு, வாழ்ந்துட்டு, அதன் பலனையும் பார்த்துட்டு, அப்புறம் சொன்னது.



😟
ம்ம்ம்ம்ம்ம்....என்ன பண்றது? அந்தக் காலத்துல இப்படில்லாம் வாழ முடிஞ்சுது வாழ்ந்துட்டாங்க. இப்போ காலம் மாறிட்டுது, இப்படில்லாம் வாழ முடியாதே?  

😀              
இப்பவும் வாழ முடியும். எப்பவும் வாழ முடியும்.
.
😟 
இப்படில்லாம் வாழ்ந்தா, இந்தக் காலத்துல இருக்குற நிறைய சுகங்களைஎல்லாம் தியாகம் செய்யவேண்டி இருக்குமே.  

😀 
இப்படி வாழும்போது மட்டுமே, எந்தக்கால சுகங்களையும் மிகவும் நன்றாகவும், பாதுகாப்பாகவும் அனுபவிக்க முடியும்.

😟 
இதையெல்லாம் செய்யாதவர்கள், ‘மனித உருவத்தில் வாழும் மிருகங்கள். இவ்வுலகில் பூமிக்கு பாரமாகவே வாழ்பவர்கள்’, என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் அளவுக்கு அதிகமான குற்றச்சாட்டாகத் தெரிகிறதே.

😀 
உண்மையில், அப்படி வாழ்ந்து பலனை அனுபவிக்கும்பொது, வேறு வழியில்லாமல் யாராயிருந்தாலும் இப்படித்தான் சொல்லவேண்டியிருப்பதை பார்ப்பார்கள்.

உண்மையைத்தான் சொல்கிறார்களே தவிர, குற்றம் சொல்லவோ, விமர்சனம் செய்யவோ இல்லை.

😟 
இதெற்கெல்லாம் வாய்ப்பும் இருப்பதாக தெரியவே இல்லையே, இன்றைய சமூகம் மாறிவிட்டதே. 

😀 
சமூக மாற்றங்கள் இவைகளை கற்கவோ, கடைபிடிக்கவோ என்றுமே இடையூறு கிடையாது.  
 சொல்லப்பட்டுள்ள, இந்த விதத்தில் வாழ்வதே பாதுகாப்பானது. அதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை செய்து, சொல்லப்பட்ட பலனை அடைந்து, பேரின்ப வாழ்க்கை வாழ்வதே புத்திசாலித்தனமான வாழும் வழி.

 🙏







0 comments:

Post a Comment