வழிபாடு ஏன்? பூஜை ஏன் ?

Leave a Comment
:(     என் திறமைக்கு நான் வாழ்கிறேன் , நண்பர்களின் உதவியால் வாழ்கிறேன், நான் என் வழிபாடுசெய்ய வேண்டும், பிரார்தனை செய்யவேண்டும்?

:)     நமக்கு வரும் சூழ்நிலைகளைத்தான் நாம் கையாள்கிறோம். நமக்கு வராத சூழ்நிலைகள் உலகத்தில் எத்தனையோ இருக்கின்றன. அவைகளை எல்லாம் நாம் கையாள்வதும் இல்லை. அவைகள் எல்லாம் நமக்குத் தெரிவதும் இல்லை.

நமக்கு வந்த வருகின்ற விஷயங்கள் எல்லாவற்றுக்குமே நாமே காரணம் இல்லை. நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல விஷயங்களும் வாழ்வில் வருகின்றன. அவைகளில் பலவற்றை தடுக்க முடிவதில்லை.

அவைகள் இறைவனால் நியதிகளின்படி கொடுக்கப்பட்டவைகள்.

:)     அந்தக் கடவுள் ஏன் கஷ்டங்களைக் கொடுக்கவேண்டும்?

:)    பொருத்தமான, நியாயமான காரணம் நிச்சயம் இருக்கிறது. பெற்றோர் பக்கம் இருக்கும் எல்லா காரணங்களும் குழந்தைகளுக்கு தெரிவதில்லை & புரிவதில்லை. முதலாளியின் பக்கம் இருக்கும் எல்லா காரணங்களும் தோழிலாளிக்குத் தெரிவதில்லை & புரிவதில்லை.

 அறியாமை இல்லாத, சர்வ ஞானம் உள்ள இறைவனிடம் சரியான காரணங்கள் இருக்கத்தான் வேண்டும். அது பற்றி நாம் கவலைப்படத்தேவை இல்லை.

ஆனாலும், நமக்கு என்ன தேவையோ, அவைகளை அந்தக் காரணம் ஆனவரிடமே கேட்பது தவறு அற்றது, நியாயமானது.

அதுதான் பிரார்த்தனை. அதற்குத்தான் வழிபாடு.


0 comments:

Post a Comment