உங்கள் வீட்டில் செல்வம் பெருக சில வாஸ்து குறிப்புகள்...

Leave a Comment
செல்வம் பெருகி வாழ  இந்த வாஸ்து குறிப்புகளை செய்து பார்க்கவும்.
வீட்டின் தலை வாசலுக்கான சில வாஸ்து குறிப்புகள்...

  
குறிப்பு: 1
வடக்கு வாஸ்து மண்டலத்தில், பிராதன நிறமாக நீலம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; சமையலறை மற்றும் கழிவறையில் சிகப்பு நிறத்தை தவிர்க்கவும்.
இவ்விடத்தில் குப்பைத் தொட்டி, துடைப்பம், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை வைக்கக்கூடாது. சமையலறை என்பது தீயை குறிக்கும். இங்கே பொருட்களைத் தவறாக வைத்தால், பணம், வாய்ப்புகள் மற்றும் தொழில் வளம் குறையும்.

குறிப்பு: 2
வடக்கு மண்டலத்தில், மணி பிளாண்ட்டை பச்சை பூந்தொட்டியில் வைத்திடவும் அல்லது தொங்க விட வேண்டும்; பார்ப்பதற்கு பச்சை பசேலென இருக்க வேண்டும். இவை செல்வம் மற்றும், தொழில் ரீதியான வாய்ப்புகளை பெருகச் செய்யும்.

குறிப்பு: 3
வட மேற்கு வாஸ்து மண்டலம் உங்களுக்கு வங்கிகள் மற்றும் தொழில் சார்ந்த நபர்களிடம் இருந்து நிதி ஆதரவை பெற்றுத் தரும்.

குறிப்பு: 4
அழகிய நுழைவு வாயில் சந்தோஷத்தையும். வளமையையும் அளிக்கும். மேலும் சமுதாயத்தில் தனிப்பட்ட நபரின் மதிப்பு மற்றும் பாராட்டுக்களை பெறச் செய்யும். ஒழுங்கற்ற முறையில் இருந்தால் உங்களை பிரச்சனைகள் சூழும்.
உதாரணத்திற்கு, தென் மேற்கு கதவு கடன் மற்றும் நிதி பிரச்சனைகளை ஏற்படுத்தும். வடக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் தொழில் ரீதியான வாய்ப்புகளையும், செல்வத்தையும் அளிக்கும். கிழக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் மன அமைதியை தரும். மேற்கு நுழைவாயில் என்றால் செல்வத்தையும், வளத்தையும் தரும்.

குறிப்பு: 5
சமையலறையை தென் கிழக்கு அல்லது தெற்குத்-தென்-கிழக்கு திசையில் அமைத்திடவும். வெளிர் சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறமே இதன் பிரதான நிறமாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம், வேலை பார்க்கும் மேஜை, வரவேற்பு அறை ஆகியவற்றை வடக்கு பகுதிகளில் வைத்தால். ஆரோக்கியமான பண ஓட்டம் இருக்கும்.

குறிப்பு: 6  
மேற்கு திசையில், வெள்ளையும் மஞ்சளும் தான் பிராதன நிறங்களாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம் வைப்பதற்கு இதுவும் கூட சிறந்த இடமாகும். வட்ட வடிtம் என்பது உலக கூறுகளை குறிப்பதால். அந்த வடிவத்தில் இருக்கும் பொருட்களை இங்கே பயன்படுத்தலாம். மேற்கு தென்-மேற்கு என்பது சேமிப்புகளுக்கான மண்டலமாகும்.
இதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனை படிப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் பணத்தையும், செல்வங்களையும் இரும்பு பெட்டியில் வைத்து இங்கே வைத்தால், உங்கள் செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

செய்து பாருங்கள் - சுகமாக வாழுங்கள் !



0 comments:

Post a Comment