சிதம்பரம் - ரகசியமே !

Leave a Comment
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.. Centre Point of World’s Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த ஹிந்து  எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?

அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..?

பாரதி என்றால் யார் என தெரிகிறதா..? 
திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.. 

வாழ்க பாரதம் ..வெல்க... பாரதியின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விஷயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

நமது முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களும் அதனிலேயே அடங்கும்.

அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,,,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே தெரிந்துவைத்து இருக்கிறது ! J


ஏழை என்றாலும் இனிய மனிதன்

Leave a Comment

பணக்காரனாக இல்லாமல் இருக்கலாம்
பட்டதாரியாக் இல்லாமல் இருக்கலாம்
மனிதத் தன்மைகளுடன் இருப்பவனே
கொடுத்துவைத்தவன்....
ஏனென்றால்...
அவனுடன் வாழ்வதை பாக்கியமாக
நினைக்கிறார்கள் உடன் வாழ்பவர்கள்....

பட்டதாரியாக இருக்கலாம்
பணக்காரனாக இருக்கலாம்
மனிதத் தன்மைகள் இல்லாதவனே
பரிதாபமானவன்....
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழ விரும்பமாட்டார்கள்...
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழ முடியாது ஓடிவிடுவார்கள்...
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழுவதை விட
மரணமடைவதே மேலாக இருக்கும்......

அவனுடன் கம்ப்யூடர் வாழமுடியும்
அவனுடன் டி.வி. வாழமுடியும்
அவனுடன் வாழிங் மெஷின் வாழமுடியும்
அவனுடன் கிரைண்டர் வாழமுடியும்
அவனுடன் துடப்பகட்டை வாழமுடியும்
அவனுடன் ப்ரிட்ஜிறேடர் வாழமுடியும்
அவனுடன் குக்கர் வாழமுடியும்
ஆனால் ஒரு குக் கூட வாழமுடியாது....

மாடர்ன் டிரஸ் அவனைத் தழுவும் , ஆனால்
மனைவி தழுவ விரும்பாள்...
டை கட்டிப்பிடிக்கும், ஆனால்
குழந்தை பிடிக்க விரும்பாள்
பெல்ட் அவனை சுற்றும், ஆனால்
சுற்றம் அவனை சுற்றாது...

எங்கும் தனி மரமாய்
வெறித்த கண்களுடன்
வாடும் மனதுடன்
சொலைகளில்லா சுடுகாடாய் வாழ்க்கை
பாவம் அவன் பரிதாபத்துக்கு உரியவனே!























ஏழை என்றாலும்                           
இனிய மனிதன்                                       

பணக்காரனாக                                        
இல்லாமல் இருக்கலாம்
பட்டதாரியாக்
இல்லாமல் இருக்கலாம்
மனிதத் தன்மைகளுடன் இருப்பவனே
கவர்ச்சியான மனிதன்....
ஏனென்றால்...
அவனுடன் வாழ்வதை பாக்கியமாக
நினைக்கிறார்கள்
உடன் வாழ்பவர்கள்....





குடும்பத்தின் வாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம்

Leave a Comment

பாரத பண்பாட்டுக் குடும்பங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்
ஞானமில்லா பண்பாடு, அல்லது ஞானமில்லா சடங்குகள்.
பண்பாடு, சடங்குகள் மிக உயர்ந்த நல்வாழ்வை தந்தவைகள், இனியும் தர முடிபவைகள்.
ஆனால் அவைகளைப்  பற்றிய ஞானம் இருந்தால் மட்டுமே அவைகள் பயனைத் தரும் விதத்தில் அவைகளை கையாள முடியும்.
அவைகளைப் பற்றிய ஞானம் இல்லாவிட்டால் சீக்கிரமாக மீட்கவேண்டும், பெற்றுவிடவேண்டும்.
தாமதிக்கும் அளவு அவைகள் அழிவினைத் தரலாம்.
ஏனென்றால்....
ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.
ஒரு கூட்டுக்குடும்பம் இருந்தது. ஒற்றுமையாக வாழ்வது என்று முடிவு செய்து, அனைவரும் சம்மதித்து, கூடிப்பேசி, அதற்கேற்ப வாழ்வை திட்டமிட்டு நடத்தினார்கள்.
குடும்பம் பல்கிப் பெருகியது. குடும்ப உறுபப்பினர்கள் 100பேர் ஆகிவிட்டார்கள். ஆனாலும் தேவையான விட்டுக்கொடுக்கும் குணங்களை வளர்த்துக்கொண்டு, ஒற்றுமையாக ஆனந்தமாக வாழ்ந்தார்கள்.
அவர்கள் அனைவரும் வாழுவதற்கு ஏற்ற ஒரு மிகப்பெரிய மாட மாளிகையை கட்டினார்கள். சகல வசதிகளுடனும் அது இருந்தது. அனைவரையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டது அந்த கற்பக விருக்ஷம் போன்ற வீடு.
வெகு காலத்திற்குப் பின் அந்த மாளிகள் வீட்டு உறுப்பினர்கள் சிதறி வெளியேறினார்கள் சில காரணங்களால். அந்த மாளிகை வீட்டில் இருந்தவர்கள் இரண்டு பேர் மட்டும்.
அவர்களால் அவ்வளவு பெரிய வீட்டை பராமரிக்க முடியவில்லை. அது ஏன், அவ்வப்பொழுது சுற்றிப் பார்க்கக்கூட முடிவதில்லை. அவர்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் பராமரித்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.
பரம்பரை வீடு என்பதால் அந்த வீட்டை விட்டு வெளியேறவும் மனம் இல்லை.
பலர் சொன்னார்கள், வீட்டின் மற்ற பகுதிகளையும் பார்த்து வைக்க வேண்டுமப்பா அதுதான் நல்லது, ஏதாவது ஒன்றுக்கு பயன்படும்’ என்று சொன்னார்கள்.
எங்களுக்கு ரெண்டு குழந்தைகள்வேறு பிறந்துவிட்டார்கள் அவர்களை பராமரிக்கவே நேரம் போதவில்லையே’ என்று சொல்லி பிசியாக ஓடிக்கொண்டு இருந்தார்கள்.
உண்மையை சொன்னால் எதை எல்லாம் வாங்க சம்பாதிக்க ஓடிக்கொண்டு இருந்தார்களோ அதெல்லாம் அந்த வீட்டில் ஏற்கனவே நல்லவிதமாகவே இருக்கிறது. போய் பார்க்காத ஒரு காரணத்தால் கஷ்டப்பட்டு மீண்டும் அவைகளை சம்பாதித்துக்கொண்டு இருந்தார்கள்.
அது மட்டும் இல்லை. பொய் பார்க்காத இடங்களில் புழு பூச்சிகள், வளரத் துவங்கின, விஷப் பூச்சிகள் வாழத்துவங்கின.
ஆனாலும், குடும்பத் தலைவர்கள் மிகவும் பிசியாக இருந்ததால் அவர்களுக்கு இது கண்ணில் படவே இல்லை.
விஷப் பூச்சிகள் பல்கிப் பெருகின. ஒருநாள் இரவு அவைகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உறங்கும்போது தீண்டித் தீர்த்தன. அந்தோ பரிதாபம் அனைவரும் மாண்டனர்!
ஆனால் அதே மாளிகைக்கு அருகில் சிறிய வீட்டில் குடியிருந்த ஏழை, தான் ஏழை என்றாலும், வேடு சிறியது என்றாலும், அது கொடுக்கும் வசதிகள் குறைவுதான் என்றாலும், சரியாக பராமரித்துப் பயன்படுத்திக்கொண்டு இருந்தான். அந்த வீட்டில் இன்றும் பாதுகாப்பாகவே இருக்கிறான்!
இந்த மாளிகை வீடுதான் பாரதப் பண்பாடு. கூட்டுக்குடும்பம் நம் முன்னோர் வாழ்க்கை முறை., சிறு குடும்பம் நமது வாழ்க்கை, பக்கத்து ஏழை வீடு பிறநாட்டு பண்பாடு...