படிக்க இயலாமை என்பது வாழ
இயலாமைக்கு அடையாளம் இல்லை.
படிக்காதவர்கள் இந்த
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளார்கள், பணம் கொடுத்துள்ளார்கள், உயிர்
கொடுத்துள்ளார்கள், உழைப்பைக் கொடுத்துள்ளார்கள்,.....
அதனால்...
இந்த நாடு சுதந்திரமாக
இருக்கிறது,
அரசு ஊழியர்கள் நல்ல
சம்பளம் வாங்குகிறார்கள்....
அப்படி இருக்க,
படிக்க இயலாதவனை
வாழத் தகுதியில்லாதவன்
என்ற நிலைக்கு தள்ளுவது நியாயமாக இருக்க முடியாது.
வம்சம்...
ஆணும் பெண்ணும்
எங்கே
என்ன திறமை இயல்பாக இருக்கிறதோ அதை வளர்ப்பதும், அதன் மூலம் சாதனைகளை படைப்பதுமே
அறிவுடைமை.
மாற்றி முயற்சிகள் அறிவீனமாகவே இருக்கமுடியும்..
ஒரு மாட்டின் செயல்களை நாயை வைத்து சாதிப்பதோ, நாயின்
செயல்களை மாட்டை
வைத்து சாதிப்பதோ முயற்சியால் முடியலாம், ஆனால் அது அனாவசியம்.
நாயின் செயலை நாய் சுலபமாக செய்ய
வாய்ப்பு இருக்கும் பக்ஷத்தில், அதை
மாட்டை வாட்டி செய்ய வைப்பது தேவை இல்லாத வேலை.
அதேபோலவே, மாட்டின்...