உணர்ச்சிகளும் உடல் பாதிப்புகளும் !

Leave a Comment
அதிகம் உணர்ச்சி வசப்படுதல் பல வித தாக்கங்களை உடலிலும் ஏற்படுத்துகிறது....


தலைகனம், ஆணவம், கர்வம், அஹம்பாவம்,.... போன்றவைகள் இதய நோய்களை உருவாக்கும்..

கவலை, துயரம், பொறாமை, எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னை தாழ்வாகப் பார்த்தல் போன்றவை வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..

எப்போதும் சோம்பலில் நாட்டம், அல்லது எப்போதும் படபடப்பு போன்ற குணங்கள் போன்ற குணங்கள் சுவாச நோய்களை உருவாக்கும்.

பயம், சந்தேகம் போன்ற குணங்கள் சிறுநீரகத்தை சீரழிக்கும்..

பிறர்மீது, அல்லது தன்மீது எரிச்சல், கோபம்,... போன்ற குணங்கள் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..

தன்னை இருக்குமாறே அங்கீகரித்தல், மற்றவர்களையும் அவர்கள் இருக்குமாறே அங்கீகரித்தல், அமைதி, மகிழ்ச்சி,... போன்ற குணங்கள் அனைத்து நோயையும் குணமாக்கும்.  

ஒருவனது சிந்தனையும், உணர்ச்சிகளும் அவனது  உடலில் உள்ள சுரப்பிகளில் உரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. .

சந்தோஷமாக, தன்னிறைவுடன், விதியை புரிந்து மன அமைதியுடன், திருப்தியுடன் இருந்தால் அவை சரியான உயிர் திரவங்களை, சரியான அளவில் சுரக்கும்.

இல்லையேல் அவை குறைவாகவோ, அதிகமாகவோ, மிக நீர்த்ததாகவோ, மிக அடர்ந்ததாகவோ  அமிலத்தை  சுரக்கச்செய்து உடல் ஆரோக்யத்தைக் கெடுக்கும். 

0 comments:

Post a Comment