ஜல்லிக்கட்டு - தேவை - ஏன் ?

Leave a Comment
இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் நமது வம்சம் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி அவசியம்படிக்கவும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); A1 மற்றும் A2 என்று. 

உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன.

மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால் பால் வியாபாரம் மிகப் பெரிய வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றின் மூலம் இனப் பெருக்கம் செய்ய துவங்கினர்.  (selective breeding);

இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation).அதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. 

சுவையற்ற இப்பால் உடலுக்கு நன்மை செய்யாதது.  தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க வைத்து அழிக்கவும் செய்யும்.

மேலும், இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும்.

அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர் (hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும்.

இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள்!

மேலும் பாரத வம்சம் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக, பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலைக்குமேல்  அதிகப்படுத்தும்; 

அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்படுத்தும். இது மிகப்பெரிய ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.

பொதுவாக நமது  அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை குறைவாகவே சுரந்தாலும், அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் நாட்டுப் பசுக்கள் கொடுக்கும் இந்த A2 பாலே.

-----------------------------

சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு ?

நமது நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி  செய்ய முடியும். இவற்றை ஜர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது.

ஆகவே உலகில் பெரிய நிறுவனங்கள் இயற்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக, இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி, மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை இருக்கும் பொதுவான நமது பண்பைப் பயன்படுத்தியும் மக்களின் அறியாமையை பயன்படுத்தியும் கிராம கிராமங்களாக சென்று ஜர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். 

இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. உண்மையில் நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் ஜர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது.

ஆனால் பண்டிகைகளில் ஏறு தழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு - என்ற வீர விளையாட்டு இருந்தமையால், பண்டிகைகளில் வரும் தேவையை மனதில் கொண்டு வர்கத்தின் ஆண் காளை மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. 

ஆண் காளை மாடுகள் கலப்பின்றி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் பசு மாடுகளும் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் உலக அளவில்  பால் வியாபாரம்  செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை.

ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. 

இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் சில இடங்களில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் பண்டிகைகளில் கடைபிடிக்கப்படும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) விளையாட்டுக்காக, நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. 

இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் ஜல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.

ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. நமது மக்களுக்கு வீரத்தையும் பெருமித உணர்வுகளையும் கொடுத்து உலகில் வம்சம் அறுபடாமல் நாம் பாதுகாப்பாக வாழ்ந்து வருவதற்கு நம் முன்னோர்கள் செய்த பல ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று. 

இது கிட்டத்தட்ட ஒரு பண்டிகை  போன்றதுதான். ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். 


ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை.அதாவது அரசுக்கோ நீதிமன்றத்துக்கோ இல்லை.

ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். பண்பாடுசார் தளத்தில் ஒன்றாக நிற்போம்! நாம் நம் இனத்தை காப்போம்!   

இதுவே இறையாண்மை! 




https://youtu.be/qBOz28F1hgo

0 comments:

Post a Comment