கலாம் அவர்களின் தியாகத்தின் நினைவில் ..... மக்களும் சிந்திப்போமாக & அரசும் நீதியை நிலை நிறுத்துமாக....

Leave a Comment
1947 ஆகஸ்ட் 15 லிருந்து இந்த நாட்டு அரசு தன்னை மதசார்பு அற்ற அரசு என்று அறிவித்து உள்ளது. 

'ஒரு நாடு ஒரு மக்கள்' - என்றுதான்  சொல்லுகிறது, நடக்க முயற்சிக்கிறது. 

அதனால் வேறு எந்தக் காரணமும் சொல்லாமல்,.... 

'இந்த அரசு இனி சட்டத்தில் எந்த இடத்திலும் ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர், ஜைனர், பௌத்தர்,... போன்று எந்த மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களையும் கணக்கில் வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்யாது, எல்லோரையும் மனிதர்கள், குடிமக்கள் என்று மட்டுமே பார்த்து நிர்வாகம் செய்யும்'  

.............என்று உடனடியாக அறிவித்து தன்னை சீர் செய்துகொள்ளட்டும்.  

இதுதான் மதசார்பு அற்ற அரசுக்கு விளக்கம். 

நான் கடவுளை நம்புகிறேனா, இல்லையா, எந்த சாமியை கும்பிடுகிறேன், உண்டியலில் எவ்வளவு போட்டேன்,... இதெல்லாம் ஒரு மதசார்பு அற்ற அரசுக்கு தேவை இல்லாத வேலை. 

வாங்கும் வரிக்கு உரிய சாலை போடுதல், பாலம் கட்டுதல்,... போன்ற நிர்வாகப் பணிகளை மட்டும் கவனித்தால் போதும். 

அல்லது 'இது மதசார்பு அற்ற அரசு' - என்று சொல்வதை அரசு நிறுத்திக்கொள்ளலாம் - அதுவாவது நேர்மை!

'இது மதசார்பு அற்ற அரசு' - என்று அறிவித்த பிறகு மதம் என்ற வார்த்தை சம்பத்தப்பட்ட விஷயங்களை கையாளவேண்டிய அவசியம் இல்லை. 

தனக்கு நிர்வாகம் செய்ய தகுதி உள்ள எல்லா பிரச்சனைகளையும், குடிமக்கள் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டே நிர்வாகம் செய்ய முடியவேண்டும்.

ஒரு இஸ்லாமியர் ஜனாதிபதியாகவும் இந்த நாட்டில் வாழ முடிந்துள்ளது, இறக்கும்போதும் நாடே தலை வணங்கி அழுது புரண்டுள்ளது. அதனால் 'சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அற்றநிலை' என்று இங்கு எதுவும் இல்லை. 

இந்த, இப்படி, இருக்கும் பாதுகாப்பும் இந்த '1947 ஆகஸ்ட் 15' அரசினால் ஏற்படுத்தப்படவில்லை. அது ஏற்கனவே இருக்கிறது. இந்த அரசு பிறப்பதற்கு முன்பே. 

இங்கு 'சிறுபான்மையினர்'என்றே உண்மையில் எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது. எல்லோருமே பெரும்பான்மையினர்தான் , அது - 'இந்த நாட்டுக் குடிமக்கள்'. 

அதனால், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள், நாம் கலாமைத் தியாகம் செய்துள்ள இந்த ஆண்டின் நினைவாக..... 



இதே ஆண்டின் குடியரசு தினத்திற்குள், 'இனி அரசு செயல்பாடுகள் மதம் என்ற வார்த்தையை பரிசீலிக்காமல்தான் நடக்கும்' என்று அறிவிக்க ஆவன செய்யவேண்டியவைகளை செய்து அறிவித்தால், ....

அது கலாம் அவர்களுக்கு செய்த ஒரு சிறந்த அஞ்சலியாக இருக்கும். 
நாடும் அவர் விரும்பிய, நம் முன்னோர்கள் விரும்பிய வளர்ச்சிப் பாதையில் செல்லும். 

இது நேர்மையான சிந்தனை என்று தோன்றுபவர்கள் - இதனை அதிகம் பேருக்கு பகிருவோம்.

வாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து பகிருவோம்.

முடிபவர்கள், இது சம்பந்தப்பட்ட ஆவணங்களை எழுதுவோம். பகிருவோம். 

உங்கள் நேரத்தையும் கவனத்தையும் கொடுத்தமைக்கு நன்றிகள்....  :) 

வாழ்க பாரதம்...!


0 comments:

Post a Comment