இன்று: ஆசிரியரை கொலை செய்யும் குழந்தைகள் - நாளை:...?

Leave a Comment
குழந்தைகள் குற்றங்களை செய்வதில்லை.
நீதிதுறையும், கல்வித்துறையும், பெற்றோர்களும்
தங்களை திருத்திக்கொள்வதே நல்லது.























நர மாமிசம் சாப்பிடுபவர்களை விடவும்
குழந்தைகளை சித்திரவதை செய்பவர்களே
கொடுங்கோலர்கள், காட்டுமிராண்டிகள்

எது எது உயர்வு என்று,
ஏதேதோ கற்பனைகளில்
ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு
தன்னால் அதை அடையமுடியாமல்
தோற்றுப்போய் ஏற்பட்ட அவமானத்தை  
தாழ்வுமனப்பான்மையின்
கோழை வடுக்களின் அரிப்புகளை
சமாதானம் செய்வதற்காக....
'குழந்தைகள் உயர உதவுகிறேன்'
என்ற நினைப்பில்
கொடுமைகளை செய்பவன்
ஒருநாள் அனுபவித்தே தீரவேண்டும். 
அரசு ஊழியர்கள் என்றால்,
ஆசிரியர்கள் என்றால்,
அநீதிபதிகள் என்றால்,
பிள்ளை பெற்று பெற்றோர் ஆகிவிட்டால்,
'தங்களை கொம்பர்கள்' என்று
நினைத்துக்கொள்ளவேண்டாம்.

செய்த பாவங்கள் கட்டாயம் படி அளக்கும்
பிறகு வருந்த வேண்டாம்.

குழந்தைகள் ஒன்றும் கை பொம்மைகள் இல்லை.
அவர்கள் உயிரும் உணர்வுகளும் உள்ளவர்கள்
தங்கள் வயதுக்கு ஏற்ப
திறமைகளும் இயலாமைகளும் உள்ளவர்கள்
சூழ்நிலை கொடுத்தபடி
அறிவும் அறியாமையும் உள்ளவர்கள்
தங்களுக்கென்று விதி ஏற்படுத்திய
விருப்பங்களும் வேண்டாமைகளும் உள்ளவர்கள்
இவைகளை மீறி என்ன செய்வது என்று தெரியாதவர்கள்
தடியர்களைப் போன்றேதான்! - ஆனால்....
ஒன்றைத் தவிர....

தடியர்கள் குழந்தைகளை கொடுமை செய்வார்கள்,
ஆனால்
குழந்தைகள் தடியர்களை கொடுமை செய்வதில்லை.

உழைத்துத் திண்ண வக்கின்றி
உலக நாடுகளுக்கெல்லாம்
கடலில் வழிகளை கண்டுபிடித்து
கொலைசெய்து கொள்ளையடித்துத் தின்ற
குறுக்குபுத்தி சோம்பேறி திருட்டுக்கும்பல்
தங்களின் கொலைக்கொள்ளைத் தொழிலுக்கு வசதியாக
‘திருடன் மெகாலே’ எனும் பிரிடிஷ் அடியாள் மூலம்
பாரதத்தில் 1835இல் ஏற்படுத்தியதே
இன்றைய இந்த கல்வித்திட்டம்

இருபதாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில்
ஐவழி ஊடகக் கல்வி முறைகள் இருந்தன
பெரியவர்களோ சிறியவர்களோ
யாருமே குற்றம் செய்ததே இல்லை

காரணம்
'குற்றம் செய்யவேண்டிய தேவை
இங்கு எதுவும் இல்லை' என்பதை
பாரத குருகுலக் கல்விகள் காட்டின
ஐவழி ஊடகக் கல்விகள் காட்டின

ஆனால் திருடனின் கல்விவந்து
இருநூறு ஆண்டுகள்கூட
இன்னமும் ஆகவில்லை.

அது முதலில் திருட கற்றுக் கொடுத்துள்ளது
அடுத்து கொலையும் செய்யவேண்டிய
நெருக்கடிகளை கொண்டுவருகிறது.




விழிப்படைவோம்
சிந்தனையைப் பகிர்வோம்
மூடனாய் சிக்கிக்கொண்டு 
வாழ்வதை முடிப்போம்

மனசாட்சியுடன் சிந்திப்போம்
நன்னெறி அமைப்போம்
வம்சம் காப்போம்
வளர்க பாரத உயர்பண்பாடு
வாழ்க பாரத மணித்திருநாடு

பகிர்வோம் - நன்றி!

0 comments:

Post a Comment