குழந்தைகளுக்கு முக்கியமாகத் தரவேண்டியது அடிமைக் கல்வியா? தலைமைக் கல்வியா?...

Leave a Comment
அன்பிற்குரிய ரிஷிகளின் வம்சத்து மக்களே, ஒரு அவசரமான ஆபத்து செய்தி. நாம் உலக நாடுகளிலிருந்து விஞ்ஞான சாதனங்களையோ, அழகு சாதனப் பொருட்களையோ வாங்குவது பரவாயில்லை. ஆனால், உலக நாடுகளிலிருந்து வாழ்க்கைக் கண்ணோட்டங்களை, நடத்தைகளையும் இறக்குமதி செய்து வருகிறோம். அவற்றில் அறிவும் இல்லை, அனுபவமும் இல்லை, உண்மையும் இல்லை. குழந்தைத்தனமானவைகள்!
 

உதாரணமாக, 'நான் நல்லா இருக்க மற்றவர்களை அழித்துதான் ஆகவேண்டும். மற்றவர்களை அழிக்காமல் நான் நல்லா இருக்க முடியாது. அதனால், நிரூபிக்க முடியாத விதத்தில் மற்றவர்களை அழிப்பது தவறு கிடையாது. திறமை!' என்ற வாதம்.

முதலில் தொழிலில் இதை கடைபிடிக்கிறான், பிறகு யாரோ மற்றவர்களிடம், பிறகு உறவுகளிடம் கடைபிடிக்கிறான். பிறகு குடும்பத்தில் கடைபிடிக்கிறான்.


இது ஒரு உதாரணம். இது போன்று பல கருத்துக்கள் நாம் விரும்பாமலேயே நம் சமூகத்தில் திணிக்கப்பட்டு வருகிறன்றன. இது நமது குடும்பங்களை உறவுகளை பிரித்து, யாரையும் நம்ப முடியாதவர்களாக ஆக்கி, நடத்தை கெட்டவர்களாகவும் ஆக்கி, தகுதி அற்ற குடும்ப உறுப்பினர் ஆக்கி, குடும்பத்தை கொடுமை செய்பவராக ஆக்கி, ஈவு இரக்கம் அற்ற, அறிவு அற்ற கொடூரமான மனிதர்களாக ஆக்கி, யாருடனும் இணைந்து வாழ முடியாமல் செய்து, நம் குடும்பங்களை பிரித்து வருகிறது, அழித்து வருகிறது.  

ஆனால் அதே நபர் தனது நவீன கல்வியால் கம்பெனிகளுக்கு நல்ல வேலைக்காரனாக இருந்து, நல்ல சம்பளம் வாங்குபவராக இருக்கிறார். அதனால் குடும்பத்திற்குள் இல்லாத, மற்றவர்கள் பார்த்து வியந்து பாராட்டலாம். ஆனால், இது உண்மையில் நரக வாழ்க்கையே!

"இந்த எல்லாவற்றையும் செய்வது, நமது இன்றைய கல்வி முறையே."  இது கம்பெனிக்கு நல்ல வேலைக்காரனை கொடுக்கும். ஆனால் ஒரு  நல்ல குடும்பத் தலைவனை, குடும்பத் தலைவியை கொடுக்க முடியாது.  

இங்கே நாம் நினைக்கிறோம்- 'என்ன செய்ய, காலம் மாறிவிட்டது. உலகமே கெட்டுவிட்டது. இனிமேலெல்லாம் நமது பழைய கண்ணோட்டங்களுடன் வாழமுடியாது.' என்று. அப்படியெல்லாம் இல்லை. நிச்சயம் வாழ முடியும். நன்றாகவே வாழ முடியும். அப்படி மட்டுமே நன்றாக வாழ முடியும்! வாழ்ந்து காட்டுகிறோம். வழியைக் காட்டுகிறோம். வாழவைத்தும் காட்டுகிறோம்!

இந்தக் காலத்திலும் சரி, எந்தக் காலத்திலும் சரி - இந்த வாழ்க்கை கஷ்டமானதே இல்லை. உண்மையில் இதுதான் சுலபமானது! இவைகளை உலகில் யாருக்கும் நாம் நிரூபிக்கத் தயார்!

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் உலக நாடுகள் உடையாலும் உள்ளத்தாலும் காட்டுமிராண்டி நாடுகளாகவே இருந்தன. பாரத மக்கள் நாம் இரண்டிலும் நாகரீகத்தின் உச்சியில்  இருந்தோம். விஞ்ஞானத்தில் உயர்ந்த, ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்தோம். சந்தோஷமாகவே ஒற்றுமையாகவே வாழ்ந்தோம். ஆனால்,...

இன்று பல உலக நாடுகள் நாகரீகமான உடைகளுடனும்குரூரமான காட்டுமிராண்டி உள்ளத்துடனும் வாழ்வை அமைத்துக்கொண்டு, 'அவர்களைப் போன்று வாழ்வதுதான் சரி' என்று  பேசிக்கொண்டு, நமது சந்ததிகளின் மனதைக் குழப்பி வருகின்றன. அதற்கு மேலும்...

வெள்ளையன் நம்மை குழப்பித் திருடுவதற்காக, அதற்கேற்ற கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தான். அதே பாடங்களே விடுதலைக்கும் பிறகும்  நமது அரசியல் சாசனத்தால் அளிக்கப்படுகிறது. இது உண்மையில் துர்பாக்கியம்!



ஆனாலும் இந்தப் பிரச்சினைகளுக்கு இடையில் இந்தக் கெட்டுப்போன உலகத்திலும் எப்படி வாழ்வது என்பதை, நமது பண்பாட்டு முறையுடன் போதிக்கும் கல்வித்திட்டம் உள்ளது!

அது 'வம்ச வித்யா' - ரிஷிகுடில் நடத்துகிறது. இது பெற்றோருக்கான கல்வி. இதைக் கற்றால், பெற்றோர்களே குழந்தைகளுக்கு இன்னொரு ஆசிரியராக இருந்துபள்ளிக் கல்வியால் வரும் குறைகளையும் அறிந்து நீக்கி, நமது பாரம்பரிய பண்புக்கல்வியையும் கொடுத்துக் காக்க முடியும்.

கவனம்: ஒருவன் நல்வாழ்க்கை வாழ பணம்தரும் புறஅறிவியல் கல்வி [ அல்லது பணக்கல்வி ], பண்புதரும் அஹஅறிவியல் கல்வி [ அல்லது பண்புக்கல்வி ], பண்புக்கல்வி இரண்டுமே வேண்டும்.

பள்ளிக்கூடங்கள் பணக்கல்வியை மட்டுமே தருகின்றன. நற்பண்புகளை அவர்களே நம்புவதும் இல்லை, கடைபிடிப்பதும் இல்லை. நற்பண்புப் பாடங்கள் மனப்பாடம் செய்து எழுத மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஏனென்றால் அவைகள் எல்லாம், அவைகளை சொல்லித்தரும் ஆசிரியர்கள் அனைவராலும் முழுமனதுடன் ஏற்கப்படவும் இல்லை, கடைபிடிக்கப்படவும் இல்லை. யாரோ சில ஆசிரியர்கள் நல்லவர்களாக இருந்தாலும் - அது இந்தக் காரணத்தினால் இல்லை. அவர்களது பெற்றோர்களும் உற்றோர்களும் நல்ல பண்புகளை சிறுவயதில் உயர்த்திப் பேசி வளர்த்ததால்தான். ஏன் இதை சொல்ல முடியும் என்றால், அவர்களிடம் நற்குணம் இருப்பதால், அதிக மதிப்பெண்ணோ, சம்பள உயர்வோ, பதவி உயர்வோ கிடையாது. வேண்டுமென்றால்  சில நேரங்களில் - அவரது நற்குணங்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுகின்றன அவரிடம் அதிக வேலையை கறப்பதற்காக மட்டும்!

ஆசிரியர்களிடம் நல்ல ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது. ஏனென்றால், அங்கு ஒரு 'நல்ல நீதிபதி' என்றால் அவர் நல்ல ஒழுக்கம் உள்ளவராக இருக்கவேண்டும் - என்றே அரசியல் சாசனத்தில் எங்கும் எதிர்பார்க்கப்படவில்லை. அது பற்றிக் கேட்டால்,.... அது அவர்களது தனிப்பட்ட வாழ்கைப் பிரச்சினைகள்.... என்பதே பதில்!

அப்படி என்றால், அந்த தனிப்பட்ட வாழ்க்கையை நன்றாக வைக்க அரசியல் சாசனத்தில் எந்த அக்கறையும் இல்லை. அதனால், அரசின் செயல்பாடுகள், திட்டங்களில் அதற்கு எந்த இடமும் இருக்க வாய்ப்பும் இல்லை. சரி, பெற்றோரும் இப்படியே இருந்துவிடலாமா

எந்த ஒழுக்கமும் இல்லாத ஒருவர் 'நல்லாசிரியர்' விருது வாங்கமுடியும், கல்வித்துறை அதிகாரியாக இருக்க முடியும், பாடப் புத்தகத்தையும் எழுத முடியும்!

நற் பண்புகள் நம்மிடம் இருந்தாலும், இல்லை என்றாலும் அவர்களுக்கு கவலையும் இல்லை, அதற்கு மதிப்பெண்ணும் இல்லை, மரியாதையும் இல்லை! நம் குழந்தைகள் வாழ்ந்தாலும் அழிந்தாலும் - அவர்களுக்கு கவலையும் இல்லை!  

அவர்கள் குழந்தைக்கு கொடுப்பது மார்க், அவர்களுக்கு வேண்டியது நமது பணம், அவ்வளவுதான். ஆனால் பெற்றோரும் இப்படியே இருந்துவிடலாமா? நமக்குத் தேவை நம் குழந்தைகளின் நல்வாழ்க்கை. ஒருவனின் நற்குணத்திற்கு பள்ளியில் மார்க் இல்லை, அரசிடம் மார்க் இல்லை, கம்பெனிகளில் மார்க் இல்லை, ஏன் உச்ச நீதி மன்றத்திடமும் மார்க் இல்லை! நற்குணம் இன்றி, குடும்பத்தை அழிக்கும் ஒருவன் உச்ச நீதிபதிவரை எந்த பதவியிலும் இருக்கமுடியும்! ஆனால் நற்குணம் இல்லை என்றால் ஒருவனது குடும்பமும் உருப்பட முடியாது. அவனும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. அரசுக்கும், கம்பெனிக்கும் இது பரவாயில்லை, பெற்றோருக்கும், வாழ்க்கைத் துணையாக வரப்போகும் நபருக்கும், குழந்தையாகப் பிறக்கப்போகுபவனுக்கும் இது பரவாயில்லையா? ஆக, அரசின் அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டு சந்ததிகளுக்கு நல்வாழ்வை நிச்சயம் தரமுடியாது!!

பணக்கல்வியைக் கொடுக்க எவ்வளவு சிரமங்களை ஏற்கிறோமோ, அறிவும் விவரமும் உள்ள பெற்றோர்கள் அதே அளவுக்கு பண்புக்கல்வியையும் கொடுக்க சிரமங்களை ஏற்கத் தயாராகவேண்டும் - அவர்களே அதற்கு ஆசிரியராகவேண்டும் -உண்மையில் குழந்தைகளின் முழுமையான நல்வாழ்வில் விருப்பம் இருப்பதால்!

 


அதற்காக, அக்குறைகளை நீக்கி பூர்த்தி செய்யும் ஒரு பாதத்திட்டம், 'வம்ச வித்யா'. 

12ம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்காக.   

குழந்தைகளை  வேலைக்கு அனுப்ப  திட்டமிடும் பெற்றோர்களின் குழந்தைகள் சேர்க்கப்படுவதில்லை.

இந்த வம்ச வித்யாவில் பல பாடங்கள் இருக்கின்றன.
1.. குழந்தை வளர்ப்புக் கலை
2.. சுலோக போதிநீ 
3.. பால பூஜா பத்ததி 
4.. பால பகவத் கீதை 
5.. சுலப சம்ஸ்க்ருதம் 
6.. ஜீவ யாத்ரா ரஹசியம் 
7.. ஜெய ஜீவன வித்யா 
8.. குடும்ப வித்யா
9.. சம்பிரதாய வித்யா
10.. ஐஸ்வர்ய குண வித்யா
11.. பண்டிகைகளின் பததிகள் 
12.. சமையல் கலை
13.. தோட்டக் கலை

இது ஓராண்டுக் கல்வி. குருகுலத்தில் தங்கிப் பயிலும் முறை. தகுதி உள்ள நன்கொடை: ரூ ஒருலக்ஷம் மட்டும். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் அளிக்கப்படும். 

நிச்சயமான பேரின்ப இல்லறத்தை உங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்! மேலும் விபரங்களுக்கு:  +91 88 25 13 14 16







     


குருகுலம்: 


ரிஷிகுடில்

குத்தாம்புள்ளி

திருவில்வமலா
திருச்சூர் மாவட்டம்
கேரளா.

கிளை அலுவலகம்: 

   
ரிஷி குடில்


            [ உயர் நிலை வேத ஞான குருகுலம் ]


               2 / 220 - S3, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கார்டன்ஸ்

                தீத்திப்பாளையம், பேரூர் [வழி]கோவை 641010


        Google: RishiKudil

                         84 890 43 432 / 90 42 500 500 / RishiKudil @Gmail.Com










0 comments:

Post a Comment