பாரம்பர்ய விரோத அரசு ஊழியர்கள் & அரசியல்வாதிகள் நாசமாக மந்திரம்

Leave a Comment
'தர்மமோ, அதர்மமோ எனக்கு சம்பளம் கொடுப்பவனின் உத்தரவை நான் செய்வேன்' – என்று வாழ்வது பாப வாழ்க்கை! அரசுப் பதவியாக இருந்தாலும் கூட!
https://www.youtube.com/watch?v=zaIDrvNx2Ys
https://satyavijayi.com/exclusive-video-sadhus-brutally-and-mercilessly-beaten-in-varanasi-by-akhileshs-police/
அதர்மம் செய்வதை, தவிர்க்கவேண்டும். முடியாத காரணங்கள் இருப்பின் அந்த பதவியை தவிர்க்கவேண்டும். அரசுப் பதவியிலாக இருந்தாலும் கூட.
வெள்ளையன் போட்ட துளி சம்பள பிச்சைக்காக, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை அடித்து உதைத்த அன்றைய அரசு ஊழியர் துரோகிகளைப் போல வாழத் துணிவது – மனிதப் பிறவிக்கு அழகு இல்லை.
மனசாட்சிக்கு விரோதமாக வாழும் அடிமை வாழ்வை தவிர்ப்போம்.
இந்த நாட்டுக்கு வெடிகுண்டு வைக்கும் தேச விரோதிகளிடமும், இந்த நாட்டின் பண்பாட்டை அழிக்கும் மதம் மாற்றும் கூட்டங்களிடமும், இந்த நாட்டின் மக்களையும் வளங்களையும் அழிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளிடமும் தங்களது திறமைகளை காட்ட இயலாத காவல்துறை ஊழியர்கள், இறைவனின் பெயரால் எளிய வாழ்வுடன் பண்பாட்டை கடைபிடித்து கற்றுக்கொடுத்து வரும் ஹிந்து துறவிகளை கருணை இன்றி அடித்து வதைப்பது மிகக் கேவலமான பாபகரமான செயல்.
அவர்கள் நல்லவர்களால் சபிக்கப்படவேண்டியவர்கள்.
இதனை தடுக்கவேண்டிய, அல்லது கண்டிக்கவேண்டிய, தண்டிக்கவேண்டிய உயர் அதிகாரிகளும், நீதித்துறை நீதிபதிகளும் இவைகளை வேடிக்கை பார்ப்பதும் மிகக் கேவலமான பாபகரமான செயல்.
அவர்களும் நல்லவர்களால் சபிக்கப்படவேண்டியவர்கள்.
நம் வம்சத்தை மிகச் சிறந்த தியாகத்தால் காத்துவரும் குருநாதர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்கும் பழக்கம் நமக்கும் நல்லது இல்லை.
நாளை பெற்றோர்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் பிள்ளைகள் வேடிக்கை பார்ப்பார்கள்!
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக கற்ற சான்றோர்களால் ஆசைகனவுகளுடன் தம் சந்ததிகளின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டினை காக்கவும், காப்பவர்களை காக்கவும்தான் அரசும் அரசு ஊழியர்களும் இருக்க வேண்டுமே தவிர அழிக்க அல்ல.
அப்படி அழிப்பவர்களாக இருக்கும் அரசு ஊழியர்கள் நாசப்படுத்தப்படவேண்டும் என்று சேனாதிபதி முருகவேல் தெய்வத்தை பிரார்த்திபோம்.
இதுவே உங்கள் பிரார்த்தனையும் என்றால், இதனை பகிர்வதன் மூலம் அதன் பலத்தை அதிகரிக்கச் செய்வோம்!


अधर्म-अधर्मि-नाशक-सेनाधिपतये षण्मुखाय नमः भारत-पारम्पर्य-धर्म -विरुद्धान्-राजाड़्गान् नाशय नाशय
ஓம் அதர்ம- அதர்மி-நாசக-ஸேனாதிபதயே ஷண்முகாய நமஃ பாரத-பாரம்பர்ய-தர்ம-விருத்தான் ராஜாங்கான் நாசய நாசய
 
இந்த மந்திரத்தை ஸ்ரீ முருகனை நினைத்து முடிந்தவரை அதிகமாக ஜபம் செய்வோம். அது பாரத பாரம்பரியங்களுக்கு எதிராக இருக்கும் அரசியல்வாதிகளையும் எந்த அரசு ஊழியரையும் நாசமாகும், சத்தியம்!
ஜபம் செய்வோம் & பகிருவோம் !
நன்றி.

0 comments:

Post a Comment