கவனம் : நடுநிலைகள் இரண்டுவிதம் !

Leave a Comment
உண்மையில் நடுநிலை வகிப்பது என்பது கவர்ச்சியான ஒரு நிலை. உலகில் யாரையுமே அது கவரும்.

நடுநிலையாக இருப்பவர்களை சிந்திப்பவர்களை, பேசுபவர்களை, நடத்துபவர்களை,... சீக்கிரமே உலகம் மதிக்கும் பாராட்டும்.

அதனால் அவர்களை யாருமே நம்பிவிடுவார்கள்.

ஆனால் கவனம்.....

நடுநிலைகள் இரண்டுவிதமாக இருக்கின்றன...!

1. வேண்டியவர் வேண்டாதவர் இரண்டில் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பது.
2. நியாயம் அநியாயம் இரண்டில் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பது.

இவை இரண்டையுமே மனிதன் வேறு வேறு நேரங்களில் வேறு வேறு என ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கிறான்.

பொதுவாகவே....
நேர்மை குணம் இருக்கும் அளவு ஒருவன் 1ஆவதை தேர்ந்தெடுக்கிறான்.
திருட்டு குணம் இருக்கும் அளவு ஒருவன் 2ஆவதை தேர்ந்தெடுக்கிறான்.


மற்றவர்களிடமிருந்து ஏமாறாமல் பாதுகாத்துக்கொள்ளவும், தனது வளர்ச்சிப் பாதையை ஆராயவும் இது ஒரு தேவையான அளவுகோல்!  

0 comments:

Post a Comment