திராவிடன் யார் - ஆரியன் யார் ?

Leave a Comment
ஸம்ஸ்க்ருதத்தை என்றுமே நமது முன்னோர்கள் தமிழுக்கு அன்னிய மொழியாக பார்த்ததே இல்லை.

திருக்குறளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை காண்கிறோம். அவர் ஸம்ஸ்க்ருதத்தை தமிழுக்கு எதிரியாக கருதவில்லை.

ஸம்ஸ்க்ருத வார்த்தை ஒன்றுகூட இல்லாத தமிழ் நூல் என்று எதையுமே காட்ட முடிவதில்லை.

எந்த பழைய காலத்திலும் இருந்த, எல்லா தமிழ் மன்னர்களும் வேதம் படித்தவர்களே, எல்லா தமிழ் புலவர்களும் வேதம் படித்தவர்களே 200 ஆண்டுகள் முன்புவரை - அதாவது வெள்ளையனின் கல்விமுறை வரும் வரை.....

ஸம்ஸ்க்ருதத்தை வெறுப்பது உண்மையில் தமிழ் பண்பாட்டை அழிப்பதுவே - அதனை நாம் நிரூபிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

கவனிக்கவும்: ‘திராவிட’ என்பதே தமிழ் வார்த்தை இல்லை. ஸம்ஸ்க்ருத வார்த்தை !

நம்மைப் பிரிக்க தை ஒன்றுதான் புத்தாண்டு துவக்கம் என்பதற்காக நவீன செந்தமிழர்கள் காட்டும் நிரூபணம் இது....

1. சுறவம் - புனர்தை - தை
2. கும்பம் - மகசி - மாசி
3. மீனம் - பல்குணா - பங்குனி
4. மேழம் - சைத்திரம் - சித்திரை
5. விடை - வைசாகி - வைகாசி
6. ஆடவை - மூலன் - ஆனி
7. கடகம் - உத்திராடம் - ஆடி
8. மடங்கல் - அவிட்டம் - ஆவணி
9. கன்னி - புரட்டாதி - புரட்டாசி
10. துலை - அகவதி - ஐப்பசி
11. நளி - கிருத்திகா - கார்த்திகை
12. சிலை - மிருகசீரச - மார்கழி

தமிழ் இலக்கியங்களில் மேழம் முதலாவதாகத்தான் கணக்கு துவங்குகிறது. அதையே தங்கள் வசதிக்கு சுறவம் என்று மாற்றி காட்டி வாதம் செய்வது ஏமாற்றும் தந்திரம்.

மேலும் கவனிக்கவும் இதில் கும்பம், மீனம், கடகம் , கன்னி, சிலை இவைகள் தமிழ் வார்த்தைகளே இல்லை. ஸம்ஸ்க்ருத வார்த்தைகள்!

கிழமைகளில் புதன், சனி இவைகளும் சம்ஸ்க்ருத வார்த்தைகளே! இவைகளுக்கு தமிழ் வார்த்தைகளே இல்லை.

என்ன புரிகிறது. நமது முன்னோர்கள் என்றுமே சமஸ்க்ருதத்தை தமிழுக்கு அந்நிய மொழியாக பார்த்ததே இல்லை.

'ஆரியர்கள் என்றால் பிராம்மணர்கள் அல்லது பார்ப்பனர்கள் எனப்படுபவர்கள் தான் என்பதும், அவர்கள் தமிழர் அல்லாதவர்கள்' என்பதும் வெள்ளையர்களால் கட்டப்பட்ட கதை மாத்திரமே.

அவர்களின் கதைப்படி 'ஆரியர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்திற்குள் வந்தார்கள்'

ஆனால் 5000 ஆண்டு, 10000 ஆண்டு பழமையான தமிழ் நூல்கள் ஆரியர்கள் வழிபாட்டுக் கடமைகளை செய்ததை பேசுகிறது.

ஆரியர் என்ற பிராமணர் அல்லாதவர்கள் திராவிடர்கள் என்றால் வட பாரத மாநிலங்களில்  - பிராமணர்  அல்லாதவர்கள் எல்லோருமே திராவிடர்கள் என்றுதானே இருக்க வேண்டும்!

அப்படி இல்லையே... 

உண்மையில்...

ஆரியர் - என்றால் பண்பட்டவர் என்று பொருள்

திராவிடர் - என்றால் தென்புலத்தார் என்று பொருள்

உத்திரத்தார் - என்றால் வடபுலத்தார் என்று பொருள்


நன்றி:
தமிழன் என்றால் பாரதியே - ஆராய்ச்சி முடிவு !

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2015/11/blog-post_25.html

0 comments:

Post a Comment