பாரதத்தின் விடுமுறை நாள் என்ன? ஞாயிறா, வெள்ளியா?

Leave a Comment
தயவு செய்து இதனை இந்த நாட்டின் நீதிபதிகள் அனைவரையும் படிக்கவேண்டுகிறேன்
ஆட்சியாளர்கள், தலைவர்கள், நாட்டுக்கு நல் வழிகாட்டுபவர்கள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ...  அனைவரையும் படிக்கவேண்டுகிறேன்
முட்டாளாக வாழ விரும்பாத அனைவரையும் படிக்கவேண்டுகிறேன்

பாரதப் பண்பாடு தெரிந்ததாய் நினைக்கும் அனைவரையும் பதில் சொல்ல வேண்டுகிறேன்.

கிறிஸ்தவர்களின் ஓய்வுநாள் ஞாயிற்றுக்கிழமை.அன்று அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஓட முடியாது. அதனால் தொழில் செய்ய முடியாது. அதனால் அரசுப் பணியும் செய்யக்கூடாது. சர்ச் பணி மட்டுமே செய்யமுடியும்.  அதனால் வெள்ளையர்கள் ஞாயிற்றுக்கிழமையை  விடுமுறை நாள் என்று அறிவித்தார்கள். 


அப்படி என்றால் நம் நாட்டின், பாரதத்தின் ஒய்வு நாள் எது? இங்கும் முன்பு மன்னர்களின் அரசு இருந்தது, அதன் விடுமுறை நாள் என்ன?

இதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லவேண்டும். இந்த நாட்டின் பண்பாடு எனக்குத் தெரியும் , குழந்தைகளுக்கு நான் சொல்லித்தரப் போகிறேன் என்று சொல்லும் கல்வித்துறை பதில் சொல்லவேண்டும். நான் இந்த நாட்டிற்கு நீதி சொல்லப்போகிறேன் என்று சொல்லும் நீதித்துறை பதில் சொல்லவேண்டும். நான் இந்த நாட்டின் பண்பாட்டை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளேன் எனக்கூறும் ஆராய்ச்சியாளர்கள் கூறவேண்டும்.... தன்னை பகுத்தறிவுவாதி என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் சொல்லவேண்டும். உண்மையில், தன்னை பக்தன் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களும் சொல்லத்தான் வேண்டும்.... 

இவர்கள் அனைவரின் பதிலும் ,.... “அப்படி இந்த நாட்டில் விடுமுறை நாள் என்று எதுவும் இருந்ததில்லை. ஏனென்றால் நம் நாட்டில் ஆட்சியாளர்கள் யாரும் மக்களின் ஒய்வினைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் பிற்போக்காகவே இருந்துள்ளார்கள். அந்த அளவிற்கு ஆழமாக அவர்கள் சிந்திக்கவில்லை....இந்த விஷயத்தில் வெள்ளையன் திருடவந்தவன் என்றாலும் சரியாக சிந்தித்துள்ளான்,.....” என்று பல டுபாகூர் பதில்கள். 

சரியான பதில் என்ன தெரியுமா?

நம் மன்னர்களுக்கும் மக்களுக்கும் வாரத்தில் 7 நாட்களும் விடுமுறை நாட்களே. ஒய்வு நாட்களே !

ஏனென்றால், இங்கே ஒரு ‘டெக்னாலஜி’ இருந்தது, அதனை ‘அடாப்ட்’ செய்துவிட்டால் ஒருவன் தன் வயிற்றுப் பிழைப்புக்காக என்றுமே ஓட வேண்டாம். வயிற்றுப் பிழைப்புக்காக ஓடுவது என்பது மிகவும் கீழான நிலை. 6ஆவது அறிவு எனும் பகுத்தறிவு பெற்ற மனிதனுக்கு இது உகந்த நிலை இல்லை - என்றார்கள் இந்நாட்டு மக்களும், மன்னர்களும் ! 

அந்த டெக்னாலஜி இந்தக் கேள்விக்கான பதிலில் இருக்கிறது..

இந்த நாட்டின் உண்மையான பகுத்தறிவுவாதி கேட்டான்,....

“ நான் இங்கு பிறக்க எதுவும் திட்டமிடவில்லை, 
எதுவும் செய்யவில்லை. 
ஆனால் நான் இங்கு பிறந்தேன். 
எனக்கு ஒரு உடலும் மனதும் இருக்க நான் எதையும் செய்யவில்லை.
ஆனால் அவைகள் இருக்கின்றன. 
அவைகள் இந்த நிறைகள் குறைகளுடன் இருக்க நான் எதையும் செய்யவில்லை. 
ஆனால் அவைகள் அப்படி இருக்கின்றன.

எனக்கு பசி,... போன்ற தேவைகள் வருகின்றன. 
அவைகளை நான் ஏற்படுத்தவில்லை. 
அதேசமயம் , அதனைப் பூர்த்திசெய்ய 
உணவு,.... போன்ற தீர்வுகளுடன் ஒரு உலகம் இருக்கிறது. 
அதனையும் நான் ஏற்படுத்தவில்லை.

இவைகள் தானாகவே இயற்கையாக வந்தன, வரமுடியும் என்றால்...
என்னாலும் கூட இது போன்று பல உலகங்களை படைக்க முடியவேண்டும்.
முடியவில்லையே.

அதனால், இவைகளுக்கு காரணமான 
ஒரு 'அறிவுக்காரணம்' இருக்கத்தான்வேண்டும். 
அந்த அறிவுக்காரணத்திற்கு அறிவு இருக்கத்தான் வேண்டும் ! 
ஏனென்றால் இதனை எல்லாம் ஏற்படுத்தத் தெரிந்து இருக்கிறதே.

அதனால் , ஓ, படைப்பின் காரண அறிவே உன்னிடம் பேசப்போகிறேன். 
உன்னிடம் பேச வசதியாக உனக்கு 'கடவுள்' என்று பெயர் வைக்கிறேன்.

ஓ கடவுளே, நீ என்னைப் படைத்தாய். 
எனக்குப் பசி,... போன்றவற்றைக் கொடுத்தாய். 
அந்தப் பசியைப் போக்க நான் ஏன் ஓட வேண்டும். 
இதனை எல்லாம் செய்யத் தெரிந்தவன் நீ என்றால், 
அந்த அளவிற்கு நீ  அறிவாளி என்றால் , 
அதனைத் தீர்க்கும் தீர்வையும் வைத்துதான் இருப்பாய். 

ஏனென்றால் உனது படைப்பினை கூர்ந்து பார்க்கிறேன். 
நீ நிச்சயம் ஒரு முட்டாளாக இருக்க முடியாது. 
ஒரு குறைபட்ட சிந்தனையாளனாக இருக்க முடியாது.
ஒரு கையாலாகாதவனாக இருக்க முடியாது.
நீ முழுமையாக சிந்திக்கத் தெரிந்தவனாகத்தான் இருக்கவேண்டும்.

படைத்தவன் நீ ஒரு முட்டாள் என்றால் 

படைக்கப்பட்ட நான் 
மஹாமுட்டாளாகத்தான் இருக்க முடியும்
ஆனால் படைக்கப்பட்ட நான் 
அறிவாளியாகத்தான் இருக்கிறேன். 
அப்படியென்றால் படைத்தவன் நீ 
ஒரு மஹா அறிவாளியாகத்தான் இருக்க முடியும். 

அதனால், என் அறிவு சொல்கிறது, 

உனது படைப்புகள் ஏற்கனவே 
குறைபாடு அற்றதாகத்தான் இருக்கமுடியும். 

அதனால் , உலகில் எந்த உயிர்கள் வேண்டுமானாலும், 
தன் வயிற்றுப் பிழைப்புக்காக ஓடட்டும். 
ஆனால் நான் அதற்காக ஓடும் வாழ்க்கையை 
எனது வாழ்க்கை லட்சியமாக வைக்க மாட்டேன்.
என்னால் முடியாது.
அறிவு உள்ள எனது மனசாட்சி ஏற்காது.

எனது கேள்வியெல்லாம் நீ ஏன் 
என்னை பிறக்க வைக்கவேண்டும்
வயிற்றை வைக்கவேண்டும், 
பசியை வைக்கவேண்டும், 
பிறகு அந்த பசியை,... தீர்க்க நான் ஓடவேண்டும் ?
நான் என்ன உனக்கு ஒரு கைபொம்மையா? 

உன் இஷ்டத்திற்கு என்னை என்னவேண்டுமானாலும் செய்வாய் 
நான் மாட்டிக்கொண்டு முழிக்க. 
நான் என்ன உன் அடிமையா?  
உன் மாய வலைக்குள் சிக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்க? 
நான் என்ன முட்டாளா? 
இந்தக் கேள்விகளை கேட்காமல் இருக்க?

இந்த உடல், மனம்,... போன்றவைகளும்
அதன் பசி, ஏக்கம்,....... போன்ற தேவைகளும்
உன்னால் ஏற்படுத்தப்பட்டவைகள். 
அவைகளை நீயே தீர்த்துக்கொள். 

ஒருவேளை,..
அவைகளை  தீர்க்க நீ ஏற்கனவே திட்டம் வைத்திருந்தால், 
அவைகளை தீர்க்க ஓடுவதை நானும்
வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருந்தால்,...
 நான் முட்டாளாகிவிடுவேன்.

உன்னிடம் திட்டம் இல்லை, 
உனது வேலை படைத்துப் போடுவதுதான், 
அதில் வரும் பிரச்சினைகளையெல்லாம் 
நான்தான் தீர்க்கவேண்டும் என்றால் , 
உனது முட்டாள்தனமான அந்த சர்வாதிகாரத்தை, 
ஏற்ற மஹாமுட்டாள் அடிமையாகிவிடுவேன் நான்.

இதை என்னால் நிச்சயம் ஏற்க முடியாது

ஏற்கவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது
நீ ஏற்படுத்திய பிரச்சினைகளை நீயேதான் தீர்க்கவேண்டும். 

இன்று நான் 

என் பசிக்கொடுமையைத் தீர்க்க ஓடித் தீர்த்தால் 
நீ நாளை 
வேறு என்ன கொடுமை செய்வாயோ 
யாரறிவார் பராபரமே....

வயிற்றுப்பிழைப்புக்காகவே வாழும் இழிவாழ்வை
நான் வாழ முடியாது. 
எனக்குத் தேவை நீ யார்? எங்கே இருக்கிறாய்? 
ஏன் இதை எல்லாம் செய்கிறாய்? 
ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய்?....

இதனை நான் கண்டுபிடிக்கவேண்டும். 
உனது இந்த புத்திசாலித்தனமான அடாவடிச் செயல்களையெல்லாம் 
நிறுத்த வேண்டும்.
இதுதான் அறிவு இருப்பதன் பயன். 
இது தான் உன் மாய வலையிலிருந்து 
எனக்கு முழுமையாக விடுதலை பெற வழி. 
உண்மையான விடுதலை. 

எனக்கும் அறிவு இருக்கிறது. 
நீ படைத்த வயிற்றுக்கும் பசிக்கும் 
தீர்வைத்தேடி ஓட...
இதற்குப் பெயர் அறிவாளித்தனம் இல்லை
உனது திறமையான மாய வலைக்குள் சிக்கிய
முட்டாள்களுக்கு வேண்டுமானால் அது 
அறிவாளித்தனமாக இருக்கலாம். 

நான் ஒன்றும் அப்படி ......
நல்ல்ல்லல்ல்ல்ல முட்டாளாக
இருக்க விரும்பவில்லை. 
நீ படைத்த வயிற்றுக்கும் பசிக்கும் 
தீர்வைத்தேடி ஓடும்...
'வயிற்றுப் பிழைப்பு நடத்த வேண்டுமே, 
என்ன செய்வது ஓடு ஓடு ...' 
என்று ஓடும் ஒரு குருட்டு  அடிமை முட்டாளாக
என்னால் இருக்க முடியாது....

ஏனெனில், எனக்குப் பகுத்தறிவும் இருக்கிறது .... 
இதுதான் உனது படைப்பில் நீ வைத்த குறை...
தெரிந்து வைத்தாயோ , தெரியாமல் வைத்தாயோ...

இந்தக் கேள்வியைக் கேட்க, 
விடையை கண்டுபிடிக்க. 
எனக்கு உரிமை இருக்கிறது.... " என்கிறான். 

இது தான் இந்த நாட்டின் உண்மையான பகுத்தறிவுவாதியின் கேள்வி.
இந்தக் கேள்வியின் நியாயமே மடையர்களுக்குப் புரியாது. 

இதற்குப் பெயர்தான் உண்மையில் பகுத்தறிவு. 
இந்த பகுத்தறிவுக் கேள்விக்கு 
பதிலை அடைந்தவனும் பாரதி.
பதிலை அடைவதையே வாழ்க்கையின் லட்சியமாக வைத்துக்கொண்டவனும் பாரதி.

அதனால் பாரதி சொன்னான். 
'எனக்கு வாரத்தில் ஏழு நாட்களும் விடுமுறை நாட்கள்தான். 
நான் வயிற்றுப் பிழைப்புக்காக ஓடப்போவது இல்லை. 
பசி,... போன்ற அவன்கொடுத்த பிரச்சினைகளுக்கு 
தீர்வையும் அவனே கொடுப்பான். 
வரவேண்டியது வரும் . 
கொடுக்க வேண்டியவன் கொடுக்கட்டும். 
நான் வாழ்நாள் முழுவதுமே ஓய்வாகத்தான் இருக்கப்போகிறேன்.

அவன் கொடுக்கவில்லை என்றால் ....
என்னாலும் அதனைத் தாங்க இயலவில்லை என்றால். 
கேட்பேன், அவனைக் கொடுக்க வைப்பேன்.
அவன் கொடுத்துதான் தீரவேண்டும். 
நான் என்ன ஏமாளியா, 
நான் என்ன இளிச்சவாயனா? 
யாரோ ஏற்படுத்திய பிரச்சினையை வாழ்நாள் முழுவதும்
அழுதுகொண்டு உட்கார்ந்துகொண்டு தீர்ப்பதற்கு? 

அவனைக் கொடுக்க வைப்பதற்கு ஏற்பக் கேட்பேன். 
பிரார்த்தனை செய்வேன், கொடுக்க வைப்பேன்!
 ஏனென்றால் அவனுக்கு அறிவு இருக்கிறதே. 
எனது வாழ்க்கை லட்சியத்தை அடைய 
இது எனக்கு சாதனம். 


இதற்குக் கீழே ஒரு மண்டுவாக 
தரம் தாழ்ந்த வாழக்கையை வாழமுடியாது என்னால்
அப்படி ஒரு அவசியம் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. 
எந்த அடி முட்டாள்களோ எப்படியோ ஓடட்டும், 

நான் பிரார்த்தனை செய்துவிட்டு 
வாழ்நாள் முழுவதுமே ஓய்வாகத்தான் இருக்கப்போகிறேன். 
எனது ஓய்வில் இந்த 
ஆராய்ச்சியைத்தான் செய்யப்போகிறேன்,.. 
பதிலை அடையப் போகிறேன்
மாய வலையிலிருந்து விடுதலை அடையப் போகிறேன்
என்று வாழ்ந்தார்கள் பாரதிகள். 

அதே போன்று ஆராய்ச்சி செய்பவர்கள் இணைந்து... 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
குடும்பத்தை அமைத்துக்கொண்டார்கள், 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
உறவுகளை அமைத்துக்கொண்டார்கள், 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
சமூகத்தை அமைத்துக்கொண்டார்கள், 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
பண்பாட்டை அமைத்துக்கொண்டார்கள், 

அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம்
கிராமத்தை அமைத்துக்கொண்டார்கள், 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
நகரத்தை அமைத்துக்கொண்டார்கள், 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
தலைநகரத்தை அமைத்துக்கொண்டார்கள், 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார்கள், 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
சட்டங்களை அமைத்துக்கொண்டார்கள், 

அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம்                                                                நிர்வாகத்தை அமைத்துக்கொண்டார்கள், 
அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வண்ணம் 
நாட்டை அமைத்துக்கொண்டார்கள்,... 
அது தான் பாரத நாடு 
அதனால் தான் அதற்கு அந்த பெயர். 
பாரதம் என்றால் 
'மெய் அறிவில் திளைக்கும் நாடு' என்று பொருள். 

பாரதி என்றால்,
'மெய் அறிவில் திளைப்போர்கள்' என்று பொருள்.
நாம் அனைவரும் பாரதிகளின் வம்சத்தில் வந்தவர்கள்.
பாரதிகளாய் வாழ கடமையும் உரிமையும் 
உண்டன்றோ உங்களுக்கு? 

இப்போது சொல்லுங்கள்...

உங்களுக்கு ஒய்வு நாள் எது....

0 comments:

Post a Comment