கவலையா மன அழுத்தமா....

Leave a Comment
கவலை [ worry ] என்பதையும், மன அழுத்தம் [ ஸ்ட்ரெஸ் stress ] என்பதையும், பிரித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘கவலை’ என்பது ஒருவனுடைய மனதினால் ஏற்படுத்தப்படும் குறைபட்ட வர்ணனை [ அல்லது Negative interpretations ]  .




உதாஹரனமாக வெயில் தாங்க முடியவில்லை, குளிர் தாங்க முடியவில்லை, உடல் வலி தாங்க முடியவில்லை, பொருளாதார சிரமத்தில் இருக்கிறேன்,.... போன்றவைகள்.  


இதே வர்ணனைகள் மிகைப்பட்ட வர்ணனைகளாக [ அல்லது positive interpretations ]  ஆக இருக்கும்போது அதனை ‘சந்தோசம்’ என்கிறோம்.

‘கவலை’யில் உணர்ச்சிகளுக்கு காரணமான புற சூழ்நிலைகளில், தன்னுடைய மனதைத்தவிர வேறு நபர்கள் குறிப்பாக மனங்கள் நேரடி காரணங்களாக இருபதில்லை.\



ஆனால் மன அழுத்தம் என்பது மற்ற நபர்களால் குறிப்பாக மற்ற நபர்களின் மனங்களால் ஏற்படுத்தப் படுவது.  

உதாஹரனமாக....
இன்று அலுவலகத்திற்கு நான் விடுமுறை போட முடியாது, சீனியர் வருகிறாராம், சூபர்வைசிங் இருக்கிறது, ஆடிட்டிங் இருக்கிறது...... என்று பல பிரச்சனைகள் இருக்கும்போது, “நீ இன்று விடுமுறை போட்டுவிட்டு என்னுடன் அம்மா வீட்டுக்கு வரவில்லை என்றால் எனக்கு கெட்ட கோவம் வரும். வந்தே தீர வேண்டும்”, என்று கட்டாயப்படுத்தப்படும் நிலை.

இப்போது அந்த கோரிக்கை வைக்கும் நபரிடம் தான் ஒத்துழைக்க முடியாத காரணத்தை சொன்னால் அந்த நபர் அதை ஒத்துக்கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ தயாரில்லை.

அது மட்டும் இல்லாமல் “நான் அந்த நபர் சொல்லவதை புரிந்துகொள்ளாவிட்டாலோ, அல்லது நான் சொல்வதை அந்த நபர் புரிந்துகொண்டு ஏற்காவிட்டாலோ, நிச்சயமாக எனக்கும் பிரச்சனை இருக்கிறது.

நான் சொல்வதை அந்த நபர் புரிந்துகொண்டு ஏற்கத் தயார் இல்லை,  ஆனால் என் நிலையோ அந்த நபர் சொல்வதையும் ஏற்க முடியாத சூழ்நிலை.

இப்போது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.


இதற்குப்பெயர் நெருக்கடி. இதுபோன்று பல நெருக்கடிகள் சேரும்பொழுது ஏற்படும் மன நிலையே ‘மன அழுத்தம்’ (ஸ்ட்ரெஸ் stress).



கவலை  (worry) என்பது மனப்பக்குவ குறைவினால் வருகிறது.
மனப்பக்குவ குறைவு என்பது சரியான அனுபவக் குறைவினாலும் நேர்மை குறைவினாலும் [ அதாவது – மன சாட்சிக்கு ஏற்ப வாழ இயலாத தன்மையினாலும் ] வருகிறது.

சரியான அனுபவம் என்பது சரியான அறிவினால் வருவது. அதேபோல நேர்மையும் [ அதாவது – மன சாட்சிக்கு ஏற்ப வாழ இயலும் சக்தியும்கூட ] சரியான அறிவினால் வருவது.

அதனால் சரியான அறிவை சம்பாதிப்பதன் முலம், சரியான அனுபவம் மற்றும் நேர்மை இவைகளை ஒருவன் அடைகிறான்.
நேர்மை இருந்து  மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாழ்வதன் மூலம், வாழ முடியும் அளவிற்கு மனப் பக்குவம் ஏற்படுகிறது. மனப் பக்குவம் வளரும் அளவிற்கு விரைவில் கவலையை நீக்க முடியும்.

ஆனால் மன அழுத்தம் என்பது சரியான மனப் பக்குவம் உள்ள ஒரு நபருக்கும், அதாவது சரியான அனுபவமும் நேர்மையும் உள்ள ஒரு நபருக்கும் கூட வர முடியும்.

ஏனென்றால், அது தன்னைச்சுற்றி இருக்கும் மனிதர்களின் மனப்பக்குவத்தை சார்ந்து உள்ளது. அதாவது அது தன்னைச்சுற்றி இருக்கும் மனிதர்களின் சரியான அனுபவம் நேர்மை இவைகளை சார்ந்து உள்ளது.

தன்னைச்சுற்றி இருப்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருக்கும்பொழுது, தான் ஒரு வேலை சரியான அறிவும் நேர்மையும், சரியான அனுபவமும், சரியான மனப்பக்குவமும் இருந்து கவலைகள் இல்லாமல் வாழ முடிபவராக இருந்தால் கூட, அவருக்கும் மன அழுத்தம் வர முடியும்.

ஏன் என்றால் மன அழுத்தம் இருப்பதும், இல்லாததும் அவருடைய திறமைகள் இயலாமைகளை சார்ந்தது இல்லை. ஆனால் அவரை சார்ந்தவர்கள், மற்றும் அவர் சார்ந்திருபவர்களின் அறிவுடைமை அறிவீனம் இவைகளை சார்ந்துள்ளது.

[ ஒருவேளை, யாரவது ஒருவர், இப்படியெல்லாம் இல்லை. ஆனால் மன அழுத்தம் இல்லாமல் வாழ்கிறாரே என்றால், அவருக்கு மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. அவருக்கும் ஏற்படுகிறது. அவர் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்கிறார். ஆனால் இது நிலையான தீர்வு இல்லை. ஒருநாள் அது தாங்கும் சக்தியை தாண்டும்போது வெடிக்கும். அப்போது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்! ]



அதானால் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். கவலைகளில் இருந்து ஒருவரை விடுவிக்க [  to free one from worries ] அவருக்குள் சரியான அறிவை [  the right knowledge  ] ஏற்படுத்தி வேலை செய்யவேண்டும்.

ஆனால் மன அழுத்தங்களில் இருந்து ஒருவரை விடுவிக்க [  to free one from stress ] அவர் சார்ந்திருக்கும் சூல்நிலையில் இருப்பவர்களுக்குள் சரியான அறிவை [ the right knowledge  ] ஏற்படுத்தி வேலை செய்யவேண்டும்.

இந்தக் காலத்தில்.கவலையினாலும், அதைவிட அதிகமாக மன அழுத்தங்களினாலும், வாழ்க்கையை வெறுத்துப்போய் வாழப்பிடிகாமல் [ frustration ] வாழ்பவரின் எண்ணிக்கையும், தற்கொலை செய்துகொள்வோரின் [ suicide attempt ] எண்ணிக்கையும்  அதிகமாகி வருகிறது.

முன் காலத்தில் ஒவ்வொரு நபரும் பெரும்பாலும் கவலையின்றியே நம் நாட்டில் வாழ்ந்தார்கள்.


அதற்கு சுருக்கமாகவும் சுலபமாகவும் சொல்லப்படும் காரணம், அவர்கள் விதியின் மேலும் இறைவன் மேலும் பாரத்தைப்போட்டு வாழ்ந்தார்கள்.
சுருக்கமாக இறைவன் விதி என்று சொல்லப்பட்டாலும் கூட அதற்கு பிரத்யக் விஞ்ஞானபூர்வமான [ Introvert Science ] காரணங்கள் உள்ளன.
அதைத்தான், அந்த விஞ்ஞான காரணத்தைத்தான் [ scientific reasons and causes ] வேதங்கள் விரிவாக பேசுகின்றன.

இந்த பிரத்யக் விஞ்ஞானம் [ Introvert Science ] ஒரு தனிநபரை சிறந்த அறிவாளியாக ஆக்கி, சிறந்த மனப்பக்குவத்தை அடைய செய்வது.  
இந்த பிரத்யக் விஞ்ஞானத்தை [ Introvert Science ] அக அறிவியல், அல்லது ஆன்மிகம், அல்லது அத்யாத்மம், அல்லது அக விஞ்ஞானம்,... என்று அழைக்கிறோம்.

இதையே நமது முன்னோர்கள் ‘அக நானூறு’ என்று நூல்களுக்கு பெயரிட்டனர்.

வேதங்களின் இந்த பிரத்யக் விஞ்ஞானப்பேச்சுதான் புராணங்கள், இதிகாசங்கள், தேவாரம், திருவாசகம், திருக்குறள். நாலடியார்,.... போன்ற கட்டமைப்புகளின் மூலமும் குருகுலங்கள், நாடகம், வில்லுபாட்டு, தெருகூத்து,.... போன்ற சாதனங்களின் மூலமும் மக்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  

இது பாரத நாட்டின் தொன்மையான பிரத்யக் விஞ்ஞானபூர்வமான [ Introvert Scientific ] மனோவியல் ரீதியான [ psychological ], சுலபமான [ easy way ], அனைவரையும் அடைந்த [ wider reaching ] ஒரு கல்வி முறை [ education ].
இந்தக்காரணத்தினால்தான் நம் நாட்டில், பொதுவாகவே ஒவ்வொரு தனி நபரும் சிறந்த அறிவினையும் மனப்பக்குவத்தையும் உடையவராக இருந்தார்கள்.

அதனால் தனி நபர்கள் கவலை அற்றவர்களாக இருந்தார்கள்.
அந்த தனி நபர்களுக்கு சூழ்நிலையில் இருந்தவர்களும் இதே போன்று சரியான அறிவு, சரியான மன பக்குவத்தில் இருந்ததால் அந்த தனி நபருக்கும் மன அழுத்தங்களையோ அல்லது நெருக்கடிகளையோ சந்திக்கவேண்டிய சூழ்நிலை வந்தது இல்லை.

ஆனால் இன்று புற அறிவியல் [ extrovert science ] என்ற பராக் விஞ்ஞானத்தை மட்டும் படித்து விட்டு, இதுமட்டும்தான் ‘பகுத்தறிவு’ [ discriminative power ] என்று நினைத்துக்கொண்டு, அகஅறிவியல் [ Introvert Science ] அல்லது பிரத்யக் விஞ்ஞானத்தை அல்லது வேத நெறிப் பண்பாட்டு கல்விகளை கணக்கில் எடுத்து கொள்ளாமலேயே மக்கள் வாழ்வதால், ஒவ்வொரு தனி நபருக்கும் [ individuals ] கிடைக்கவேண்டிய சரியான அறிவு [ right knowledge ] கிடைப்பதில்லை.  

அதனால் வரவேண்டிய சரியான அனுபவங்கள் [ right experiences ] மற்றும் நேர்மை [ honesty ], அதனால் வரவேண்டிய சரியான திறமைகள் [ right skills ] எதுவும் அமையாமல் போய்விடுகிறது.

எனவேதான் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் கவலை [ worry ] என்பது இன்று தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகிறது.  

அதேபோல அவரை சார்ந்திருப்பவர்களுக்கும், அவர் சார்ந்திருப்பவர்களுக்கும் இதே அறிவுப்பற்றாக்குறை இருப்பதால் இவர் மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்.

இவருடைய அறிவுப்பற்றாக்குறையினால் இவர் பங்கிற்கு, இவரும்கூட  இவரை சார்ந்தவர்களுக்கு மன அழுத்தங்களையும் வாரி வழங்கிக்கொண்டே இருப்பார்.


நமது முன்னோர்கள் நடத்திய ஆட்சி முறையில், நாட்டில் இந்த அக அறிவியல், புற அறிவியல் இரண்டுமே சரியாக வளர்ந்து வருகிறதா என்று கண்காணிக்கப்பட்டு வந்தன, அரசால் வளர்க்கப்பட்டும் வந்தன - முன்பு சொல்லப்பட்ட நூல் மற்றும் சாதனங்களின் கட்டமைப்புகளின் துணையுடன்.

ஆனால், இன்றைய அரசும் மக்களும் புற அறிவியலை [ extrovert science ] மட்டும் வைத்துக்கொண்டு அக அறிவியலை [ Introvert Science ] விட்டுவிட்டு ஒரு காலில் முன்னேறும் சர்க்கஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எது பிற்போக்கோ எது முற்போக்கோ

இன்றைய அரசு தரும் கல்வி மன ஊனமானவர்களையே [ psychologically imbalanced, psychologically challenged, psychologically handicapped , psychologically disturbed, psychologically undergrown, psychologically weak  and hence [ emotionally imbalanced, emotionally challenged, emotionally handicapped , emotionally disturbed, emotionally undergrown, emotionally weak  ] உண்டு பண்ணுகிறது.

பழைய மன்னர்கள் உருவாக்கிய கல்வி முறை மனபலம் உள்ள தனி நபர்களையும் சமுதாயத்தையும் உருவாக்கிக்காட்டி இருக்கிறது.
உலகில் வேறு எந்த நாடும் இதுவரை இந்த சதவிகிதத்தை எட்டிப்பிடித்ததில்லை. உலகில் எந்த நாடும் இதுவரையில் இந்த அளவிற்கு நேர்மையானவர்களை உருவாக்கிக்காட்டியதில்லை.

உலக நாடுகளில் எங்காவது ஒரு நல்லவர், அறிவு உள்ளவர், கருணை உள்ளவர், மனிதத்தன்மை உள்ளவர்,... என்று இருந்தாலே, தங்களால் வாழ முடியாத விதத்தில் இவர் வாழ்கிறார் என்பதால், அவரை எல்லோரும் இறைவனின் தூதர் என்று கொண்டாடினார்கள்.

ஆனால் இந்த நாட்டிலோ வீதிக்கு ஆயிரம் பேர்,, வீட்டிற்கு பத்துபேர் அப்படி இருந்தார்கள் – அதாவது அநேகமாக அனைவருமே!


என்ன செய்ய,....

மக்களோ ஆட்சியாளர்களோ தங்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம்,...

பொருளாதார வளர்ச்சியா அல்லது மன நிம்மதி வளர்ச்சியா.... என்பதை.... 

தங்களுக்கு இருக்கும் அறிவுக்கு ஏற்பதானே புரிந்துகொண்டு,....

அதற்கேற்ப தன் வாழ்க்கைப் பயணத்தையும் , நாட்டின் வாழ்க்கைப் பயணத்தையும் அமைக்க முடியும்.???....



0 comments:

Post a Comment