உண்மைக்கதை: இருந்தும் பயன்படாத நாட்டின் வளம்!

Leave a Comment
சுப்ரமணி எட்டாம் வகுப்பு படிக்கும்  போது அவரது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

சுப்ரமணி கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...

சுப்ரமணி: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.

ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?

சுப்ரமணி: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.

சுப்ரமணி: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.

ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் சுப்ரமணி கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் சுப்ரமணி வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து மீண்டும் வகுப்பிற்கு சென்றார்.

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேச்சயாக இதன் விளக்கம் சுப்ரமணிக்கு கிடைத்தது.

அவரது தாத்தா அவரது ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். அவரது ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால்  அச்சகரங்களை மாற்றும் பணி அவரது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணி சுப்பிரமணியிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற சுப்பிரமணி எழுத வேண்டும். 

அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் சுப்பிரமணியை நெருடியது. அவ்வாக்கியம்,

ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்கவும், சக்கரப் பகுதிகள் பிரிந்து செல்லாமல் இருக்கவும் சக்கரத்தில் சுற்றிலும் ஒட்டப்படும் இரும்பால் ஆன பட்டை ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.

இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று கேட்டான் சுப்பிரமணி.

அதற்கு தாத்தா பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.

அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (=3.142!) என விளக்கினார்.

சுப்பிரமணி சிந்திக்கத் துவங்கினார், ‘இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருக்கு அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார்.....’
சுப்பிரமணி மேலும்  சிலவற்றை தெரிந்துகொள்ள தாத்தாவிடம் சில விளக்கங்களை கேட்டார். அதற்குதாத்தா கூறிய வார்த்தைகள் அவரை மிகவும் பாதித்தது.

அவ்வார்தைகள்.....

‘உனக்கு எதுக்கு சாமி இந்த பொழப்பு, நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ....’

ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தார்..

ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? இவர்களிடம் யாரும் கற்கவில்லை என்றால் அவைகள் எல்லாம் அழிந்துதானே போகும். இதுபோல இதுவரை எவ்வளவு இருந்தனவோ? தற்காலத்தில் அவை என்ன ஆனது??? 

"எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????

“உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம், சுய கௌரவத்துடன், மன நிம்மதியுடன், ஆடிப்பாடி, மகிழ்ந்து, உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு கெளரவம் விட்டு, நிம்மதி விட்டு, உறவுகளை விட்டு ஓடுவதன் காரணம் என்ன???.....”

“இந்த நாட்டின் நிலப் பரப்பு மட்டுமே நாடு இல்லை. இந்த நாட்டின் அறிவு, பண்புகள், வாழ்வியல்,.... போன்ற அனைத்தும்தான் நாடு. நிலப்பரப்பினை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவைகள் எல்லாவற்றையும் ஏற்கும் பொது, இந்த நாட்டின் அடையாளமே அழிந்து போகிறதே. இந்த நிலப்பரப்பில் இருக்கும் ஒரு அந்நிய நாடு என்றுதானே சொல்லவேண்டி இருக்கிறது?....' 


அவரது எண்ணங்கள் நியாயமானவைகள். பதில் அளிக்கப்பட வேண்டியவைகள். 

தொல்காப்பியரிடமிருந்து சுவையான செய்திகள்....

Leave a Comment
தொல்காப்பியரின் இயற்பெயர் - ‘திரண தூம அக்னியார்’. தகப்பனார் பெயர் ‘சமத அக்னியார்’. 
[ இருவருடைய பெயருமே சம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன! ] 
தொல்காப்பியத்துக்கு முன்பும் கூட தொல்காப்பியர் படித்த இலக்கிய மற்றும் இலக்கண நூல்கள் இருந்து உள்ளன, அவைகள் இப்போது கிடைக்கப் பெறவில்லை. 
[ திறமையான இலக்கிய, இலக்கண நூல்கள் வரவேண்டும் என்றால் அதற்கு முன்பு அந்த மொழிக்கு நிச்சயமாக நீண்ட வாழ்க்கை இருந்திருக்க வேண்டும்! ] 
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தொல்காப்பியக் காலம் பணிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நிரூபிக்கிறார். 
[ வெளிநாட்டவர்கள் தொல்காப்பியரின் காலம் கி.மு.எழுநூறு என்றும் மூவாயிரம் ஆண்டு என்றும், ஆறாயிரம் ஆண்டுகள் என்றும் கூறுகிறார்கள். இது உள்நோக்கம் உள்ள சதி. நம்மை நமது பண்பாட்டில் உறுதியான பெருமையை அடைய முடியாமல் செய்யவும், அவர்களை விட நாம் நம்மை உயர்வாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான். இதன் பலன் - 1. அவர்கள் நம்மை சுலபமாக மதம் மாற்ற முடியும். 2. நம்மவர்களை அவர்களுக்கு வேலை செய்யும் அடிமை வாழ்க்கையையே விரும்புபவர்களாக பாதுகாக்க முடியும். ]

தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், முந்தைய நூலாசிரியர் பலரைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார், என்மனார் புலவர்என்பஅறிந்திசினோரேமொழிப யாப்பறி புலவர்”, மொழிப தொன்னெறிப் புலவர் எனவும், பிறவாறும்.  

தொல்காப்பியத்திற்குப் 'பனம்பாரனார்' என்பவரால் இயற்றப்பெற்ற சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது. தொல்காப்பியனார், பனம்பாரனார், அதங்கோட்டாசிரியர் முதலிய மாணவர் பன்னிருவர் அகத்தியனாரிடம் தமிழ் பயின்றனர் என்பது, நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் செய்தியாகும். எனவே, தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார். தொல்காப்பியனாருடன் பயின்றவர் என்பது அறிதற்குரியன அப்பாயிரத்தில் உள்ள... 
[ ‘அகத்தியர்’ என்ற வார்த்தைக்கான பொருள் கோள் வரையினை அறியவேண்டும் முதலில்.  அகத்தின் இயல்பினர் அகத்தியர் ஆவர் அல்லது அகத்தை இயம்புபவர் அகத்தியர் ஆவர். இரண்டு விளக்கங்களிலுமே அகத்தின் மற்றும் அகத்தை இரண்டு வார்த்தைகளுமே அகம் என்பதன் பிற உரு வார்த்தைகள் ஆகும். அகம் என்பது சம்ஸ்க்ருத பதம் ஆகும்! அதன் பொருள் நான், அல்லது ஆத்மா அல்லது சுயரூபம் என்று பொருளாகும். ] 
 
தொல்காப்பியனார், தாம் இயற்றிய தொல்காப்பியத்தினை, நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தனது பேரவையில், நான்கு மறைகளையும் முற்ற உணர்ந்த அதங்கோட்டாசிரியரின் முன்னிலையில், அரங்கேற்றினார் என்பது புலப்படுகிறது. எனவே, தொல்காப்பியனாரை ஆதரித்து இந்நூலினைச் செய்வித்தவன், நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தன் என்பதை,
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து 
அறங்கரை நாவின் நான்மறை முற்றியல் 
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து” 
என்னும் நூற்பாவால் அறியலாம். 
[ நான்கு மறைகள் என்றால் நான்கு வேதங்கள். தொல்காப்பியரும் அவருக்கு முன் இருந்தவருகளும் நான்கு வேதங்களையும் கற்று இருந்தார்கள். அன்று இருந்த பாண்டிய மன்னரும் வாதங்களைக் கற்றவர்களை சபையில் முக்கிய பதவியில் வைத்து இருந்துள்ளார். அப்படி என்றால் தோல்கப்பியருக்கு முன்பும் வேதம் இருந்து உள்ளது என்பதும் மன்னன் முதல் அறிஞர்கள் யாருமே மக்களும் வேதத்தையோ சமஸ்கிருதத்தையோ தேவையில்லாதது என்று புறக்கணித்து வாழவில்லை என்பதும் தெரிகிறது. அதற்குமேல் அப்படிப்பட்டவர்கள் தமிழுக்கு சேவை செய்தவரை தமிழ் பேசும் மக்கள் நன்னெறியிலே வாழ முடிந்துள்ளது என்பதும் தெரிகிறது. ]
[ அன்றிலிருந்துஇன்று வரை வழக்கத்தில் இருக்கும் முதல் தமிழ் சங்கம் என்ற சொற்றொடரில் ‘சங்கம்’ என்பது சம்ஸ்க்ருத வார்த்தையே. யாரும் தமிழில் சமஸ்க்ருதத்தை பயன்படுத்துவதை அன்று தவறாக நினைக்கவில்லை. சமஸ்க்ருதத்தை அந்நிய மொழியாகவும் நினைக்கவில்லை. சிவன், முருகன், அகஸ்தியர்,... போன்ற வார்த்தைகளும் சம்ஸ்க்ருத வார்த்தைகளே. அன்றே இந்த தெய்வங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதும் இதன் மூலம் அறியப்படுகிறது.  வேதத்தையும்கூட வழிபாடுகளையும்கூட அன்று தமிழ் பேசிய மக்கள் அன்னியமாகவோ வாழ்க்கைக்கு தேவை இல்லாதது என்றோ, வேதம் இல்லாமல் ஒரு பொருள் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து விட முடியும் என்றோ யாருமே நினைத்ததுகூட இல்லை. அதற்கு இன்றுவரை நிரூபணங்கள் எதுவுமே இல்லை. ]



உணமைதான் மனிதனின் மூளை மனதினை உற்பத்தி செய்கிறது என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள். அது வெறும் நம்பிக்கையே.

மனம்தான் வாழுகிறது. அது தனது விருப்பத்திற்கு ஏற்ப உடலையும் மூளையையும் ஏற்படுத்துகிறது. 

கருத்தரிக்கும் முன்பே உண்மையில் நான் இப்படித்தான் வாழப்போகிறேன் என்ற உணர்வுடன் முடிவுடன் மனம் இருக்கிறான்.

அவனது விருப்பப்படியே முதல் கருவின் டி.என்.ஏ. அமைகிறது. பிறகு அதற்கு ஏற்ப மூளை உருவாகிறது.
தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், முன்னைய நூலாசிரியர் பலரைத் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். 
அகத்தியமே முற்காலத்து முதல் நூல் என்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம், அதன் வழிநூல் என்பதூஉம் பெற்றாம்” 
என்பது, தொல்காப்பியத்துப் பேராசிரியர் உரையில் காணப்படுகின்றது.
தொல்காப்பியனாருக்கு முன், புலவர் பலர் இருந்து அவர்கள் தமிழ் இலக்கண நூல்களைச் செய்துள்ளனர் என்பது அறியப்படுகின்றது.

தொல்காப்பியனார், தாம் இயற்றிய தொல்காப்பியத்தினை, நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தனது பேரவையில், நான்கு மறைகளையும் முற்ற உணர்ந்த அதங்கோட்டாசிரியரின் முன்னிலையில், அரங்கேற்றினார் என்பது புலப்படுகிறது. எனவே, தொல்காப்பியனாரை ஆதரித்து இந்நூலினைச் செய்வித்தவன், நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தன் என்பதை,
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றியல்
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
என்னும் நூற்பாவால் அறியலாம்.



The secret of greatness of Bharat, India.

Leave a Comment
Bharat had best education methods, but it never had education methods as its goal.
Bharat had best physical exercises, but it never had physical exercises as its goal.
Bharat had best medications, but it never had medication as its goal.
Bharat had best culture, but it never had culture as its goal.
Bharat had best political system, but it never had politics its goal.
Bharat had best dance disciplines, but it never had dance as its goal.
Bharat had best music disciplines, but it never had music as its goal.
Bharat had best sculptures, but it never had sculpture as its goal.
Bharat had best worshiping methods, but it never had worship as its goal.
Bharat had best communication systems, but it never had communication as its goal.
Bharat had best languages, but it never had language as its goal.
Bharat had best vegetarian food, but it never had vegetarian food as its goal.
Bharat had best non-vegetarian food, but it never had non-vegetarian food as its goal.
Bharat had best love disciplines, but it never had love as its goal.
Bharat had best sex disciplines, but it never had sex as its goal.
Bharat had best family system, but it never had family as its goal.
Bharat had best economy, but it never had economy as its goal.
Bharat had best army setups, but it never had army as its goal.
Bharat had best agriculture, but it never had agriculture as its goal.
Bharat had best books, but it never had book as its goal.
Bharat had best entertainments, but it never had entertainment as its goal.
Bharat had best community living, but it never had community living as its goal.
Bharat had best wealth, but it never had wealth as its goal.
Bharat had best jewelry, but it never had jewelry as its goal.
Bharat had best engineering, but it never had engineering as its goal.
Bharat had best mathematics, but it never had mathematics as its goal.
Bharat had best dramas, but it never had drama as its goal.
Bharat had best liquor, but it never had liquor as its goal.
Bharat had best child-care methods, but it never had child-care as its goal.
Bharat had best senior-care methods, but it never had senior-care as its goal.
Bharat had best disabled-care methods, but it never had disabled-care as its goal.
Bharat had best orphan’s-care methods, but it never had orphan’s-care as its goal.
Bharat had best respect in the world, but it never had respect as its goal.
Without fixing as goal, or working for them, how could it achieve so many things perfectly?
Bharat says don’t keep those many things as life goals, the only goal for the sixth sense of human being is to find the cause for the way of existence and the way of behaviors of the known creation and of the knowing self.
And have everything else you need or desire, setting them only as tools to attain the goal, avoiding contradicting ways.
Everything among them will be perfect and coordinated, and they won’t function contradicting themselves, or destroying human being.
Hence they will be the best tools to the human being and will support to attain the goal.

If a person didn’t attain the goal at all till death, having set the goal-tools properly, his efforts would go void?
It doesn’t matter at all, that life-style would have paid him the more peaceful and happier and safer life than any other life-style in the world.

And the one who attained the goal will be a great contributor, great guide, and great model to the world.
Such one becomes the greatest of human being.  

What is the use for him?
He will attain the most peaceful and happiest and safest life in the world.

Really speaking, who ever got introduced to such goal-tool-set life-style is a fortunate ones.