தொல்காப்பியரிடமிருந்து சுவையான செய்திகள்....

Leave a Comment
தொல்காப்பியரின் இயற்பெயர் - ‘திரண தூம அக்னியார்’. தகப்பனார் பெயர் ‘சமத அக்னியார்’. 
[ இருவருடைய பெயருமே சம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன! ] 
தொல்காப்பியத்துக்கு முன்பும் கூட தொல்காப்பியர் படித்த இலக்கிய மற்றும் இலக்கண நூல்கள் இருந்து உள்ளன, அவைகள் இப்போது கிடைக்கப் பெறவில்லை. 
[ திறமையான இலக்கிய, இலக்கண நூல்கள் வரவேண்டும் என்றால் அதற்கு முன்பு அந்த மொழிக்கு நிச்சயமாக நீண்ட வாழ்க்கை இருந்திருக்க வேண்டும்! ] 
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தொல்காப்பியக் காலம் பணிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நிரூபிக்கிறார். 
[ வெளிநாட்டவர்கள் தொல்காப்பியரின் காலம் கி.மு.எழுநூறு என்றும் மூவாயிரம் ஆண்டு என்றும், ஆறாயிரம் ஆண்டுகள் என்றும் கூறுகிறார்கள். இது உள்நோக்கம் உள்ள சதி. நம்மை நமது பண்பாட்டில் உறுதியான பெருமையை அடைய முடியாமல் செய்யவும், அவர்களை விட நாம் நம்மை உயர்வாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான். இதன் பலன் - 1. அவர்கள் நம்மை சுலபமாக மதம் மாற்ற முடியும். 2. நம்மவர்களை அவர்களுக்கு வேலை செய்யும் அடிமை வாழ்க்கையையே விரும்புபவர்களாக பாதுகாக்க முடியும். ]

தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், முந்தைய நூலாசிரியர் பலரைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார், என்மனார் புலவர்என்பஅறிந்திசினோரேமொழிப யாப்பறி புலவர்”, மொழிப தொன்னெறிப் புலவர் எனவும், பிறவாறும்.  

தொல்காப்பியத்திற்குப் 'பனம்பாரனார்' என்பவரால் இயற்றப்பெற்ற சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது. தொல்காப்பியனார், பனம்பாரனார், அதங்கோட்டாசிரியர் முதலிய மாணவர் பன்னிருவர் அகத்தியனாரிடம் தமிழ் பயின்றனர் என்பது, நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் செய்தியாகும். எனவே, தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார். தொல்காப்பியனாருடன் பயின்றவர் என்பது அறிதற்குரியன அப்பாயிரத்தில் உள்ள... 
[ ‘அகத்தியர்’ என்ற வார்த்தைக்கான பொருள் கோள் வரையினை அறியவேண்டும் முதலில்.  அகத்தின் இயல்பினர் அகத்தியர் ஆவர் அல்லது அகத்தை இயம்புபவர் அகத்தியர் ஆவர். இரண்டு விளக்கங்களிலுமே அகத்தின் மற்றும் அகத்தை இரண்டு வார்த்தைகளுமே அகம் என்பதன் பிற உரு வார்த்தைகள் ஆகும். அகம் என்பது சம்ஸ்க்ருத பதம் ஆகும்! அதன் பொருள் நான், அல்லது ஆத்மா அல்லது சுயரூபம் என்று பொருளாகும். ] 
 
தொல்காப்பியனார், தாம் இயற்றிய தொல்காப்பியத்தினை, நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தனது பேரவையில், நான்கு மறைகளையும் முற்ற உணர்ந்த அதங்கோட்டாசிரியரின் முன்னிலையில், அரங்கேற்றினார் என்பது புலப்படுகிறது. எனவே, தொல்காப்பியனாரை ஆதரித்து இந்நூலினைச் செய்வித்தவன், நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தன் என்பதை,
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து 
அறங்கரை நாவின் நான்மறை முற்றியல் 
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து” 
என்னும் நூற்பாவால் அறியலாம். 
[ நான்கு மறைகள் என்றால் நான்கு வேதங்கள். தொல்காப்பியரும் அவருக்கு முன் இருந்தவருகளும் நான்கு வேதங்களையும் கற்று இருந்தார்கள். அன்று இருந்த பாண்டிய மன்னரும் வாதங்களைக் கற்றவர்களை சபையில் முக்கிய பதவியில் வைத்து இருந்துள்ளார். அப்படி என்றால் தோல்கப்பியருக்கு முன்பும் வேதம் இருந்து உள்ளது என்பதும் மன்னன் முதல் அறிஞர்கள் யாருமே மக்களும் வேதத்தையோ சமஸ்கிருதத்தையோ தேவையில்லாதது என்று புறக்கணித்து வாழவில்லை என்பதும் தெரிகிறது. அதற்குமேல் அப்படிப்பட்டவர்கள் தமிழுக்கு சேவை செய்தவரை தமிழ் பேசும் மக்கள் நன்னெறியிலே வாழ முடிந்துள்ளது என்பதும் தெரிகிறது. ]
[ அன்றிலிருந்துஇன்று வரை வழக்கத்தில் இருக்கும் முதல் தமிழ் சங்கம் என்ற சொற்றொடரில் ‘சங்கம்’ என்பது சம்ஸ்க்ருத வார்த்தையே. யாரும் தமிழில் சமஸ்க்ருதத்தை பயன்படுத்துவதை அன்று தவறாக நினைக்கவில்லை. சமஸ்க்ருதத்தை அந்நிய மொழியாகவும் நினைக்கவில்லை. சிவன், முருகன், அகஸ்தியர்,... போன்ற வார்த்தைகளும் சம்ஸ்க்ருத வார்த்தைகளே. அன்றே இந்த தெய்வங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதும் இதன் மூலம் அறியப்படுகிறது.  வேதத்தையும்கூட வழிபாடுகளையும்கூட அன்று தமிழ் பேசிய மக்கள் அன்னியமாகவோ வாழ்க்கைக்கு தேவை இல்லாதது என்றோ, வேதம் இல்லாமல் ஒரு பொருள் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து விட முடியும் என்றோ யாருமே நினைத்ததுகூட இல்லை. அதற்கு இன்றுவரை நிரூபணங்கள் எதுவுமே இல்லை. ]



உணமைதான் மனிதனின் மூளை மனதினை உற்பத்தி செய்கிறது என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள். அது வெறும் நம்பிக்கையே.

மனம்தான் வாழுகிறது. அது தனது விருப்பத்திற்கு ஏற்ப உடலையும் மூளையையும் ஏற்படுத்துகிறது. 

கருத்தரிக்கும் முன்பே உண்மையில் நான் இப்படித்தான் வாழப்போகிறேன் என்ற உணர்வுடன் முடிவுடன் மனம் இருக்கிறான்.

அவனது விருப்பப்படியே முதல் கருவின் டி.என்.ஏ. அமைகிறது. பிறகு அதற்கு ஏற்ப மூளை உருவாகிறது.
தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், முன்னைய நூலாசிரியர் பலரைத் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். 
அகத்தியமே முற்காலத்து முதல் நூல் என்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம், அதன் வழிநூல் என்பதூஉம் பெற்றாம்” 
என்பது, தொல்காப்பியத்துப் பேராசிரியர் உரையில் காணப்படுகின்றது.
தொல்காப்பியனாருக்கு முன், புலவர் பலர் இருந்து அவர்கள் தமிழ் இலக்கண நூல்களைச் செய்துள்ளனர் என்பது அறியப்படுகின்றது.

தொல்காப்பியனார், தாம் இயற்றிய தொல்காப்பியத்தினை, நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தனது பேரவையில், நான்கு மறைகளையும் முற்ற உணர்ந்த அதங்கோட்டாசிரியரின் முன்னிலையில், அரங்கேற்றினார் என்பது புலப்படுகிறது. எனவே, தொல்காப்பியனாரை ஆதரித்து இந்நூலினைச் செய்வித்தவன், நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தன் என்பதை,
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றியல்
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
என்னும் நூற்பாவால் அறியலாம்.



0 comments:

Post a Comment